என் மலர்
நீங்கள் தேடியது "மொரீஷியஸ்"
- பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணம் மேற்கொண்டார்.
தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.
இன்று பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டில் உள்ள கிராண்ட் பேசின் என்று அழைக்கப்படும் கங்கா தலாவ் ஏரியில் மக கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரை பிரதமர் மோடி கலந்தார்.
கங்கா தலாவ் ஏரியை இந்துக்கள் புனிதமான இடம் என்று நம்புகிறார்கள். இந்த ஏரியில் பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தார்.
- 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து சேவை தொடங்குகிறது.
- விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜநிலை திரும்பியபின் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் , 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மீண்டும் சென்னை- ஹாங்காங் இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கபட்ட சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை, 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்படுவது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும்.
அதேபோல, சென்னை-மொரீஷியஸ் இடையே 'ஏர் மொரீஷியஸ்' ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்திய பெருங்கடல் பகுதியில் சாகோஸ் தீவுகள் அமைந்துள்ளது.
- இந்த தீவுகளை மொரீசியஸ் நாட்டுக்கு விட்டுத்தர பிரிட்டன் முன்வந்தது.
போர்ட் லூயிஸ்:
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியம். இது சுமார் 60 குட்டித் தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டம். இதுதொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வந்தது.
பிரிட்டன் மற்றும் மொரீசியஸ் இடையே நீண்ட காலம் நடந்த பேச்சுகளுக்கு பின் இந்த நிலப்பரப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள டியாகோ கார்சியா பகுதி அடுத்த 99 ஆண்டுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தின் கூட்டு தளமாக தொடர்ந்து இருக்கும். இந்தப் பிராந்தியத்தில் மிக முக்கிய போர்க்களமாக, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தளமாக டியாகோ கார்சியா உள்ளது. அதை ஒட்டியுள்ள சாகோஸ் தீவுகளை மொரிசியஸ் நாட்டுக்கு விட்டுத்தர பிரிட்டன் முன்வந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்நிலையில், சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிசியசிடம் ஒப்படைத்ததற்கு மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், நமது காலனித்துவத்தை நிறைவு செய்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மொரிசியஸ் பிரதமர் ஜுக்நாத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிரிக்க யூனியன் மற்றும் இந்திய அரசு உள்பட நமது காலனித்துவ நீக்கத்தை முடிப்பதற்கான போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.