என் மலர்
நீங்கள் தேடியது "தாத்திரீஸ்வரர் ஆலயம்"
- இந்த இரு ஆலயங்களையும் உருவாக்கியதே அங்கு வாழ்ந்த சித்தர்கள்தான்.
- குறிப்பாக தாத்திரீஸ்வரர் ஆலய தூண்களில் நிறைய சித்தர்கள் உள்ளனர்.
இந்த ஊரில் உள்ள "தாத்திரீஸ்வரர்" ஆலயமும் "ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்" ஆலயமும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமைக் கொண்டது.
இந்த இரு ஆலயங்களையும் உருவாக்கியதே அங்கு வாழ்ந்த சித்தர்கள்தான்.
நூற்றுக்கணக்கான சித்தர்கள் ஒருங்கே இத்தலத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.
அவர்களைப் பற்றிய தகவல்கள் இப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் தெரியத் தொடங்கியுள்ளது.
1972ம் ஆண்டு சுவடிகள் மூலம்தான் இங்கு உறைந்துள்ள சித்தர்கள் பற்றி கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆன்மிக ஆய்வாளர்கள் சித்தர் காட்டில் முகாமிட்டு இரு ஆலயங்களிலும் அங்குலம், அங்குலமாக தோண்டித் துருவிப் பார்த்தனர்.
அப்போது ஆலய கருங்கல் தூண்களில் சித்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிரமித்துப் போனார்கள்.
குறிப்பாக தாத்திரீஸ்வரர் ஆலய தூண்களில் நிறைய சித்தர்கள் உள்ளனர்.
- சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் நெல்லி மரங்கள் கொண்ட வனமாக இருந்தது.
- அந்த பிரகாரத்தில் உள்ள தூண்களில்தான் சித்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் நெல்லி மரங்கள் கொண்ட வனமாக இருந்தது.
ஒரு நெல்லி மரத்தின் அடியில் சித்தர்கள் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
அந்த லிங்கத்துக்கு "நெல்லியப்பர்" என்று சித்தர்கள் பெயர் சூட்டியிருந்தனர்.
நெல்லியை சமஸ்கிருதத்தில் "தாத்திரி" என்பார்கள்.
அதன்படி இந்த இறைவன் தாத்திரீஸ்வர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தாத்திரீஸ்வரருக்கு இடது புறம் தென் திசையை பார்த்தவாறு பூங்குழலி அம்மைக்கு தனி சன்னதி அமைத்து சித்தர்கள் வழிபட்டனர்.
வட மொழியில்இந்த அன்னை, ஸ்ரீபிரசூன குந்தளாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.
பாண்டிய மன்னர்கள் நெல்லியப்பரையும், பூங்குழி அம்மையையும் பிரதானமாக வைத்து ஆலயத்தை கட்டிய போது கருவறையை சுற்றி ஒரு பிரகாரம் அமைத்தனர்.
அந்த பிரகாரத்தில் உள்ள தூண்களில்தான் சித்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தூணிலும் 4 சித்தர்கள் வீதம் பல சித்தர்களின் உருவங்களை அங்கு காண முடிகிறது.
அந்த சித்தர்கள் அந்த பகுதியில் ஒன்றாக ஜீவ சமாதியாகி அடங்கி இருக்கலாம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.
ஆனால் ஆலய அர்ச்சகர்கள் உள்பட மற்றொரு சாரார் அதை மறுக்கிறார்கள்.
என்றாலும் சித்தர்கள் அங்கு இருந்தனர் என்பது உறுதியாகி உள்ளது.
முதல் கட்டமாக 9 சித்தர்கள் பற்றி தெரிய வந்துள்ளது.
அவர்களில் 3 பேரின் பெயர்கள் ஸ்ரீபடுக்கை ஜடை சித்தர், ஸ்ரீபிராண தீபிகா சித்தர், கருடக்கொடி சித்தர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இவரை சுற்றி வந்து வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகமாகும்.
- இத்தலத்தில் கருடக்கொடி சித்தர் பல ஆண்டுகள் வசித்ததாக சுவடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாள் சன்னதிக்கு வலதுபுறம் ஆதிசங்கரர் சன்னதிக்கு நேர் எதிரில் உள்ள தூண்களில் ஒரு தூணில் ஸ்ரீ படுக்கை ஜடை சித்தரின் உருவம் உள்ளது.
இவரை சுற்றி வந்து வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகமாகும்.
சிவனுக்கு நேர் எதிரில் நந்தி பகவான் 4 தூண்கள் தாங்கியிருக்கும் சிறு மண்டபத்தில் உள்ளார்.
இந்த நந்தி சாந்தமாக இருப்பதால் அவருக்கு மூக்கணாங்கயிறு கிடையாது.
இந்த நந்தி மண்டபத்தின் வலது புறத் தூணில் ஸ்ரீ பிராணதீபிகா சித்தரின் உருவம் இடம் பெற்றுள்ளது.
இவரை வழிபட்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கையாகும்.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
அடுத்து மூன்றாவதாக அறியப்பட்டுள்ள ஸ்ரீ கருடக்கொடி சித்தர் உருவம் அருகில் உள்ள ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கல்தூணில் உள்ளது.
இத்தலத்தில் கருடக்கொடி சித்தர் பல ஆண்டுகள் வசித்ததாக சுவடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள திருக்குளத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாக குறிப்புகள் உள்ளன.
பெருமாள் கோவில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் சன்னதி தூணில் இந்த சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமைகளில் கருடக்கொடி சித்தருக்கு அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கண் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாகும்.
சமீப காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும், கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலங்களுக்கு வருவது அதிகரித்தப்படி உள்ளது.
- பூங்குழலி அன்னைக்கு பச்சை வஸ்திரம் வளையல்கள் அணிவித்து வழிபட்டால் திருமணம் கைகூடும்.
- ஏழை-எளியவர்களுக்கு தானம் செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.
இந்த ஊரில் சிவாலயமும், விஷ்ணு தலமும் அருகருகே அமைந்திருப்பதால் மேலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தலமாக சித்தர் காடு - திருமணம் ஊர் திகழ்கிறது.
குறிப்பாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அந்த நட்சத்திர நாளில் இத்தலத்துக்கு வந்து குபேரனுக்கு
நெல்லிகாய் ஊறுகாயுடன் தயிர் சாதம், புளியோதரை படைத்து வழிபட்டு, அதை ஏழை-எளியவர்களுக்கு
தானம் செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.
திருமணத் தடையால் வேதனையில் இருப்பவர்கள் இத்தலத்துக்கு வந்து நெல்லியப்பருக்கு நெல்லிச்சாறு,
நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்தும், பூங்குழலி அன்னைக்கு பச்சை வஸ்திரம், வளையல்கள்
அணிவித்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
சித்தர்களே இந்த பரிகார வழிபாடுகளை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.
அதனாலேயே இந்த ஊருக்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர்.
அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர்.
சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது.
சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக் காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.
- தாத்ரீ என்றால் நெல்லி என்று பொருள்.
- இந்த சிவாலயத்தில் அருள்புரியும் தாத்ரீஸ்வரர் இருந்த இடம் நெல்லி மரங்கள் இருந்த இடம்.
தாத்ரீ என்றால் நெல்லி என்று பொருள்.
இந்த சிவாலயத்தில் அருள்புரியும் தாத்ரீஸ்வரர் இருந்த இடம் நெல்லி மரங்கள் இருந்த இடம்.
ஒரு நெல்லி மரத்தினடியில் இச்சிவனார் அமர்ந்திருந்ததால் இவருக்கு நெல்லி அப்பர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
பூவைப் போன்ற மென்மையான கூந்தலை உடையவளாய் அன்னை காணப்பட்டதால் அன்னையின் பெயர் வடமொழியில் பிரசூன குந்தளாம்பிகை என்றும், தமிழில் பூங்குழலி அம்மை எனவும் வழங்கலாயிற்று.
மற்றொரு சிறப்பு என்னவெனில் இந்த சித்துகாடு, சித்தர்காடு, திருமணம் கிராமம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
தாத்ரீஸ்வரருக்கு நெல்லிச் சாறால் அபிஷேகம் செய்தும், அன்னை பிரசூன குந்தளாம்பிகைக்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, மங்கலப் பொருட்களுடன் இறைவனுக்கும், இறைவிக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் கால தாமதமான திருமணங்கள், தடைபட்ட திருமணங்கள் வெகு விரைவில் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.
இவ்வாறு தடைபட்ட, நாட்கள் கடந்த திருமணங்களை வழிபாடு செய்து நிறைவேற்றக் கோரும் பக்தர்கள் சுவாதி நட்சத்திரத்திலோ, அல்லது அவரவர்களது பிறந்த நட்சத்திர நாட்களிலோ செய்து கொள்வது நல்லது.
- இந்த ஆலயத்தில் தைப்பூச பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
- மற்றும் தங்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டியதாக மகிழ்வுடன் கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு முருகப்பெருமாள், வள்ளி, தேவயானைக்கு பால் காவடி எடுத்து
கோவிலின் வெளிச்சுற்றை வலம் வந்து பால் மற்றும் அபிஷேகத்திற்குரியனவான பொருட்களால் அபிஷேக ஆராதனை
செய்தால் உடனே புத்திர பாக்கியம் கிட்டுவதாக நம்பி இக்கிராமத்து மக்கள் விழா நடத்த ஆரம்பித்தனர்.
மற்றும் தங்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டியதாக மகிழ்வுடன் கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தில் தைப்பூச பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆலயத்தில் நடைபெற்று வரும் விசேஷங்கள், மாதாந்திர விசேஷங்கள், தமிழ் வருடப்பிறப்பு, பவுர்ணமி,
கிருத்திகை, பிரதோஷம், சித்ரா பவுர்ணமி, விநாயக சதுர்த்தி, கந்தர்சஷ்டி, சிவராத்திரி, கார்த்திகை தீபம்,
ஆருத்ரா தரிசனம், தைப்பூசம் போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
- சித்தர்காடு சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் பிரகாரத்தில் தனியாக ஆண்டாள் சன்னதி உள்ளது.
- கருடனை நீண்ட நாட்களாக வழிபட்டு பலன் பெற்றார்.
சித்தர்காடு சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் பிரகாரத்தில் தனியாக ஆண்டாள் சன்னதி உள்ளது.
அந்த ஆண்டாள் சன்னதியில் இருக்கும் முன்பக்க மண்டபத்தின் ஒரு தூண்ணில் கருடகொடி சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கருடகொடி சித்தரின் அருள் அலைகள் இருப்பதாக நம்புகிறார்கள்.
கருடகொடி சித்தர் பல்வேறு ஆற்றல்களை பெற்றவர்.
மூலிகை மருத்துவத்தில் மிகுந்த திறமை பெற்றிருந்தார்.
கருடனை நீண்ட நாட்களாக வழிபட்டு பலன் பெற்றார்.
இதனால்தான் அவருக்கு கருடகொடி சித்தர் பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
இந்தத் தலத்தில்தான் கருடக்கொடி சித்தர் பல காலம் வசித்து, இங்குள்ள திருக்குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார் என்பர்.
இவர் பலருக்குக் கண் நோய் போக்கியவர்.
பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்த மகான்.
இவர் இந்த ஆலயத்தின் ஆண்டாள் சந்நிதி எதிரேயுள்ள தூணில் சாந்நித்யத்துடன் எழுந்தருளியுள்ளார்.
இங்கு நெய்தீபம் ஏற்றி வலம் வந்து வழிபட, கண்நோய் குணமாகும்.
முன்மண்டபத் தூண்களில் நரசிம்மரின் உருவங்கள்.
யோக நரசிம்மராக, உக்கிர நரசிம்மராக, ஸ்ரீலட்சுமி நரசிம்மராக கலையழகு மிகக் காட்சி தரும்.
ஆண்டாள் சன்னதியில் அவரது சிற்பம் இருப்பதால் அந்த பகுதியில் அவர் ஜீவசமாதி அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அந்த தூணில் உள்ள சிற்பத்தில் கருடகொடி சித்தர் ஒருகையில் கமண்டலமும், மற்றொரு கையில் கருட கொடியையும் வைத்தபடி காட்சி தருகிறார்.
- எப்போதும் இவர் சுலோகங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று குறிப்புகள் உள்ளன.
- கருட கொடி சித்தருக்கு சந்தன அபிஷேகமும் செய்யப்படுவது உண்டு.
இவர் கருட கொடியை உடல் முழுக்க சுற்றி உள்ளார்.
எப்போதும் இவர் சுலோகங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று குறிப்புகள் உள்ளன.
ராமாயண காலத்திலேயே இவர் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. ராமர் எங்கெல்லாம் சென்றரோ அங்கெல்லாம் உடன் சென்றாக கூறப்படுகிறது.
ராமரை பாதுகாக்கும் வகையில் இவர் மூலிகை பந்தல் அமைப்பதுண்டு என குறிப்புகள் உள்ளன.
கருட கொடி என்பது கருடனுடன் தொடர்புடையது.
திருஷ்டியை நீக்குவதில் கருட கொடிக்கு அதிக ஆற்றல் உண்டு என்பார்கள்.
மேலும் கருட கொடிக்கு மந்திர சக்திகளை கிரகிக்கும் ஆற்றலும் உண்டு.
கருட கொடியை பயன்படுத்தி பல்வேறு நோய்களை தீர்த்துக் கொள்ளலாம்.
இத்தகைய சிறப்புடைய கருட கொடியை இந்த சித்தர் மிக அதிகளவில் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
வேறு எந்த சித்தரும் இவர் அளவுக்கு கருட கொடியை பயன்படுத்தியது இல்லை.
கருட கொடி சித்தரை வழிபட்டால் எத்தகைய பெரிய கண் நோயை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆண்டாள் சன்னதியில் உள்ள கருட கொடி சித்தரின் சிலை மீது ரோஸ் தண்ணீரை அபிஷேகம் செய்து அதை கண்களில் ஒற்றி கொண்டால் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
கருட கொடி சித்தருக்கு சந்தன அபிஷேகமும் செய்யப்படுவது உண்டு.
அந்த சந்தனத்தை கண்களை மூடி புருவத்தின் மீது வைத்துக் கொண்டாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
- தாண்டவ மூர்த்தி என்றே இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இவரது தாண்டவங்கள் பல.
- அதாவது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுகிரகம் என்பன பஞ்ச கிருத்தியங்கள் ஆகும்.
அண்ட சராசரங்களின் இயக்கங்கள் யாவும் ஆடல்வல்லான் என்றழைக்கப்படும் நடராஜப் பெருமானின் திரு நடனமே.
தாண்டவ மூர்த்தி என்றே இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இவரது தாண்டவங்கள் பல.
தாண்டவ மூர்த்தியான நடராஜப் பெருமானின் திருவடிவம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.
விரிந்து படர்ந்த திருச்சடை, நான்கு திருக் கரங்கள், வலது மேற் கையில் டமருகம் எனப்படும் உடுக்கை, இடது மேற்கையில் எரியும் நெருப்பு, வலது கீழ்க் கை அபய முத்திரை, இடது கீழ்க்கை தூக்கிய திருவடியை காட்டியவாறு உருவகிக்கப்பட்டுள்ளது.
இடது காலைத் தூக்கி, வலது காலை ஊன்றி, அதன் கீழ் முயலகன் என்னும் அசுரனை மிதித்தபடி காணப்படுகிறார்.
இப்பெருமானுக்கு கால்கள் இரண்டு என்றாலும் எண்ணற்ற கைகள் உடையவராக ஆகமங்களில் கூறப்பட்டுள்ளார்.
51 அட்சரங்களே திருவாசியாகவும், திருவைந் தெழுந்தான பஞ்சாட்சரமே திருவுருவாகவும், பராசக்தியே திருச்சிற்றம்பலமாகவும் விளங்குகின்றன.
உடுக்கை சிருஷ்டி என்ற படைத்தலையும் எரிகின்ற நெருப்பு சம்ஹாரம் என்ற அழித்தலையும், அபயகரம் அருளுதலையும், ஊன்றிய திருவடி மறைத் தலையம், குஞ்சித பாதம் என்ற தூக்கிய திருவடி காத்தலையும் தத்துவார்த்தமாகக் குறிக்கின்றன.
இவரே ஐந்தொழில்களையும் செய்யும் தாண்டவ பெருமானாக விளங்குகிறார்.
இந்த ஐந்தொழில்களையே 'பஞ்ச கிருத்தியங்கள்' என்றழைப்பர்.
அதாவது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுகிரகம் என்பன பஞ்ச கிருத்தியங்கள் ஆகும்.
இந்தப் பஞ்சக் கிருத்தியங்களையும், நமசிவாய என்னும் ஐந்து எழுத்துக்களையும் ரூபமாகக் கொண்டு இவ்வுலக உயிர்களுக்கு அருள்கின்றார்.
நமசிவாய என்பதில் இறைவனின் திருவடி நகார அட்சரமாகவும், வயிறு மகா அட்சரமாகவும், தோல் சிகார அட்சரமாகவம், திருமுகம் வகார அட்சரமாகவும், திருவடி யகார அட்சரமாகவும் சேர்ந்து 'நமசிவாய' என்னும் ரூபாமாய்த் திகழ்கிறது.
- திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
- இந்த அன்னைக்கு குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்துவழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும்.
ஆடல் வல்லானை நமசிவாய என்னும் ஐந்தெழுத்தால் வணங்க எல்லா வல்லமைகளும், யோக சித்திகளும் கைவரப் பெறும்.
இந்த அருட்சக்தி 'சர்வாதம் யோகப் பிரதாயினி' என்று ரிஷிகளால் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய நடராஜருக்கு சென்னைக்கு மேற்கே 30 கி.மீ. தூரத்தில் இருக்கும் 'சித்துக்காடு' என்ற சிவத்தலத்தில் ஆருத்ரா அன்று திருமண வைபவம் நடப்பது, வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத சிறப்பு.
பொதுவாக சிவாலயங்களில் நடராஜர், உற்சவராக இருப்பதையும் அவருக்கு ஆருத்ரா தரிசனம் நடப்பதையும்தான் எல்லோரும் அறிவார்கள்.
மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர ஆருத்ரா விழாவின் முதல் இரவில் நடராஜர், சிவகாமி அம்மையார் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோருக்கு இரவு 10 மணியில் இருந்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
இதன் பின்னர் மறுநாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளாக நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் திருமண வைபவம் மாணிக்கவாசகர் முன்னிலையில் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றது.
இதன்பின் இம்மூவரும் வீதிஉலா வருவார்கள்.
பிறகு காலை 10 மணியளவில் ராஜகோபுரம் முன்பாக திருவெம்பாவைப் பாடல்கள் பாடப் பெற்று, மூன்று முறை பார்வேட்டை நடைபெறும்.
இவ்விழாவினைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இத்தகைய திருமணமும் விழாவும் வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு ஆகும்.
இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் முகப்பு மண்டபத்தூணில் புடைப்புச் சிற்பமாக 'கருடக் கொடி சித்தர்' எழுந்தருளியுள்ளார்!
இவர் கண் கோளாறுகளை நீக்க வல்லவர் என்பது ஐதீகம்! எனவே இவரை வழிபட எண்ணற்ற பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இத்தலத்தில் இருக்கும் அம்பாளுக்குப் பூங்குழலி அம்மன் என்று பெயர்.
இந்த அன்னைக்கு குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்துவழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும்.
சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி ஆருத்ரா, ஆவணி, புரட்டாசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண் டுக்கு ஆறுமுறை நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகம் இத்தலத்தில் நடை பெறுகின்றது.
மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும்.
திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
இந்த திருமணத்தைக் கண்டவர் களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை.
- பாண்டிய மன்னர்கள் காலத் தில் ஹரிசரணாலய நல்லூர் என்ற பெயரால் வழங்கப்பட்டது.
- இம்மன்னன் “கோவில் பொன் வேய்ந்த பெருமான்” எனும் சிறப்பு விருதினை பெற்றவன்.
பழைய காலத்தில் சித்தர் பெருமக்களால் சிறிய அளவில் இந்த ஆலயம் கட்டப்பட்டது என்ற செவிவழிச் செய்தி உள்ளது.
இந்த ஆலயம் பல்லவர்கள் காலத்தில் 34 கோட்டங்காளாக பிரிக்கப்பட்ட தொண்டை நாட்டில் புலியூர் கோட்டத்தை சேர்ந்த பிரதேசமாக இருந்தது.
பாண்டிய மன்னர்கள் காலத் தில் ஹரிசரணாலய நல்லூர் என்ற பெயரால் வழங்கப்பட்டது.
இத்திருத்தலம் பின்னாளில் திருமணம் என்று அழைக்கப்பட்ட பின்னரே சித்துக்காடு, சித்தர்காடு என்று அழைக்கப்பட்டது.
தற்போது திருமணம் கிராமம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.
சித்தர்களால் ஆதி காலத்தில் எழுப்பப்பெற்ற இந்த ஆலயம் பாண்டிய மன்னனான முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியனால் கற்றளியால் கட்டப்பட்டது.
கி.பி. 1251 முதல் கி.பி. 1271ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவன்.
என்றும் கி.பி. 1271ம் ஆண்டு இவன் இறைவன் திருவடியை சேர்ந்தான்.
இந்த பாண்டிய மன்னன் எம் மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர் என சிறப்பிக்கப்பெற்றவன்.
இம்மன்னன் சேர வேந்தர்களையும் சோழ வேந்தர்களையும் போசள மன்னர்களையும் போரில் புறமுதுகிட்டு ஓட செய்தவன்.
மேலும் வாணர்களது நாட்டையும், கொங்கு நாட்டையும் கைக் கொண்டவன்.
போரில் பல வெற்றிகளைக் கொண்ட சடையவர்மன் சுந்தர பாண்டியன் அநேக திருக்கோவில்களுக்கு இறையிலியாக நிலங்களையும், கோவில் பூஜைகள் எவ்வித தடங்கலும் இன்றி நடைபெறுவதற்கான வழிவகைகளையும் செய்தவன்.
இம்மன்னன் ஸ்ரீரங்கத்துக்கு சென்று திருமாலை வணங்கி கோவிலையும் பொன் வேய்ந்து முடிசூடிக் கொண்டதோடு பல துலாபர தானங்களும் செய்தான்.
ஸ்ரீரங்கத்துக்கு இம்மன்னன் செய்த திருப் பணிகளும், விட்ட நிவந்தங்களும், அளித்த அணிகலன்களும் பலவாகும்.
எனவே இம்மன்னன் "கோவில் பொன் வேய்ந்த பெருமான்" எனும் சிறப்பு விருதினை பெற்றவன்.
இதேபோன்று திருவானைக்கால் திருக்கோவிலுக்கும் இவன் சேர மன்னனை வென்று வாகை சூடியவன்.
இந்த ஆலய இறைவனை வணங்கி "சேரனை வென்றான் திருநாள்" ஈன்ற விழாவையும் நடத்தி உள்ளான்.
இந்த சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திருபுட்குழி திருமால் கோவிலில் திருப்பணிகள் செய்ததை கண்ட புலவர் ஒருவர் இவன்மீது ஒரு புகழ் பாடல் ஒன்றை புனைந்து பாடினார்.
இவ்வேந்தன் சமயம் பாராட்டாது சிவனார் ஆலயங்களையும், திருமால் ஆலயங்களையும் புதிதாக எழுப்பிய சிறப்பு கொண்டவன்.
இந்த சித்தர் காடு எனும் ஊரில் உள்ள சுந்தர ராஜ பெருமாள் கோவிலும், தாத்ரீஸ்வரர் கோவிலும் கட்டப்பட்டது.
இதனை இங்குள்ள பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.
- குழந்தை பாக்கியம் தருவதில் முதன்மை கடவுளாக, உரிய கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.
- முருகப்பெருமானுடன் மனது ஒன்ற வேண்டும் அதுதான் முக்கியம்.
குழந்தை பாக்கியம் வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.
போகாத ஆஸ்பத்திரி இல்லை, போகாத கோவில் இல்லை என்று அவர்கள் மத்தியில் மிகுந்த சலிப்பு இருக்கும்.
ஆனால் ஆலய வழிபாடு செய்தாலும் முறைப்படி செய்தோமா? என்று யோசிக்க வேண்டும்.
குழந்தை பாக்கியம் தருவதில் முதன்மை கடவுளாக, உரிய கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.
ஜாதக ரீதியில் குழந்தை பாக்கியம் தருபவர் முருகன்தான்.
சித்தர்காடு தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் குழந்தை பாக்கியத்திற்காக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தம்பதிகளாக வரவேண்டும்.
பசும்பால், பன்னீர், செவ்வரளி பூக்கள் கொண்டு வரவேண்டும்.
பால் அரை லிட்டர், பன்னீர் தேவையான அளவு, நிறைய செவ்வரளி பூக்கள் எடுத்து வரலாம்.
வசதி வாய்ப்பு இருப்பவர்கள் 2 லிட்டர் பால் வாங்கி கொடுக்கலாம்.
இன்னும் வசதி இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
விருப்பம் இருப்பவர்கள் வஸ்திரம் எடுத்தும் முருகப்பெருமானுக்கு அணிவித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
முருகப்பெருமானுடன் மனது ஒன்ற வேண்டும் அதுதான் முக்கியம்.
செவ்வரளி பூ வாங்கும்போது ரத்த சிவப்பில் உள்ள பூக்களை வாங்க வேண்டும்.
சுமார் ஒருமணி நேரம் இந்த பரிகார பூஜை நடத்தப்படும். மறக்காமல் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் போன்றவையும் எடுத்துச் செல்ல வேண்டும்.