search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணெய் குளியல்"

    • தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் நரக சதுர்த்தி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது.
    • எனவே தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் அதிகாலை 4.38 மணி முதல் 6.38 மணி வரை நீராடலாம்.

    சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணை ஸ்நானம் பண்ணக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

    ஆனால், "தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணை ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூர வேண்டும் என்று பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி.

    அதுமட்டுமா? சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாக கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், "தீபாவளி திருநாளில் மட்டும்...எண்ணையில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் வசிக்க வேண்டும் என்றும் வரம் வேண்டினாள் பூமித்தாய், பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார்.

    எனவே தீபாவளி திருநாளில், சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது அருணோதய காலத்தில் எண்ணை தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம்.

    அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நீராடுவது மிகவும் நல்லது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    நரக சதுர்த்தி தினத்தன்று சிலர் கன்னியா லக்ன காலத்தில் நீராட விரும்புவார்கள்.

    தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் நரக சதுர்த்தி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது.

    எனவே தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் அதிகாலை 4.38 மணி முதல் 6.38 மணி வரை நீராடலாம்.

    இந்த 2 மணி நேரத்தில் தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் எல்லா சடங்குகளையும் நிறைவு செய்வது நல்லது.

    தீபாவளி விரதம், கேதார கவுரி விரதம் எடுக்க சிலர் நல்ல நேரம் பார்ப்பார்கள். மேஷ மற்றும் மிதுன லக்னத்திலும் தீபாவளி விரதம், கோதர கவுரி விரதத்தை தொடங்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம்.
    • உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    முடியை வலுப்படுத்த நாம் பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதில் முடி பராமரிப்பு நடைமுறை மிகவும் முக்கியமானது. கூந்தலை ஆரோக்கியமாக வைக்க தலைமுடிக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.

    அதேபோல, ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தடவுவது அதிக நன்மை பயக்கும் என நம்பிக்கை உள்ளது. இதனால் கூந்தல் வலுவடைந்து, பளபளப்பை அதிகரிப்பதுடன், கூந்தலை மிருதுவாகவும் மாற்றுகிறது. இன்னும் சிலர், கூந்தல் பராமரிப்புக்காக ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து முடிக்கு பயன்படுத்துவார்கள்.

    ஹேர் ஆயிலை ஷாம்பூவுடன் கலந்து தடவுவதால் உண்மையில் ஏதாவது பலன் இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் எழும்.

    ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலப்பது புதிதல்ல. இந்த செயல்முறை நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மை என்னவென்றால், பலர் இது முடிக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். இதை உறுதிப்படுத்த நிபுணர்களிடம் பேசினோம். ஷாம்புவில் கேரியர் ஆயில் அல்லது ஏதேனும் ஹேர் ஆயில் கலந்து தடவலாம் என்கிறார்கள். இது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

    தலை முடி உதிர்வதை நிறுத்துவதோடு, முடியை வலுவாக்கும். ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து தடவினால், முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்கலாம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    இருப்பினும், நீங்கள் எந்த வகையான ஷாம்பூவைப் பயன்படுத்துகிறீர்கள், எந்த அளவில் பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம்.

    இதுதவிர, நிரப்பப்பட்ட ஷாம்பு பாட்டிலில் ஹேர் ஆயிலைக் கலந்து குளிப்பதற்கு சிறிது நேரம் முன் தடவுவது நல்லது. இது உங்களுக்கு சேரவில்லை என்றால், மீண்டும் முயற்சிக்க வேண்டாம்.

    நன்மைகள்:

    பல முறை, சரியான அளவு எண்ணெய் மற்றும் ஷாம்பூவை கலந்து தடவுவது உச்சந்தலையில் இருந்து அரிப்புகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, ரோஸ்மேரி எண்ணெயை ஷாம்பூவில் தடவினால், இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இருப்பினும், உங்கள் உச்சந்தலையில் அரிப்புக்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். தூசி, மாசு போன்றவற்றால் அரிப்பு ஏற்பட்டால், இந்த ஷாம்பூவில் ரோஸ்மேரி எண்ணெயை கலந்து உபயோகிப்பது நன்மை பயக்கும்.

    தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம். இவற்றில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    மாறிவரும் வானிலை மற்றும் மாசுபாட்டின் காரணமாக, முடி உலர்ந்து உயிரற்றதாகிறது. இதன் காரணமாக முடியின் ஊட்டச்சத்தும் முடிவடைகிறது. அதேசமயம் ஷாம்பு கலந்த எண்ணெயை கூந்தலில் தொடர்ந்து தடவி வந்தால், முடிக்கு ஊட்டமளிக்கிறது.

    • அழகிய கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இல்லை.
    • மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

    நீளமான அழகிய கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இல்லை. இதை எப்படி எளிதில் பெறுவது என்று சொல்கிறோம்.

    மசாஜ்

    உங்கள் கூந்தலை எண்ணெய் மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது தேவையான ஊட்டச்சத்தை கொண்டு சேர்க்க உதவும்.

    அவ்வபோது ட்ரிம் செய்யவும்

    நீங்கள் சலூனுக்கு செல்வதை விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் உங்கள் கூந்தலின் நீளம் குறைந்துவிடும் என்ற பயம்தானே! ஆனால், உண்மையில் உங்கள் கூந்தல் வேகமாக வளரவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலை ட்ரிம் செய்வது அவசியம். இது உங்களை பிளவு பெற்ற கூந்தலில் இருந்து விடுவிக்கும்.

    சப்ளிமென்ட்

    சரியான விட்டமின்களை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். கடைகளில் கிடைக்கும் விட்டமின் மாத்திரைகளில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் விட்டமின் பி அதிக அளவில் இருக்கும். இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு அவசியம். பயோடின் போன்றசப்ளிமென்ட்களும் கூந்தலை ஆரோக்கியமாக்கும்.

    ஷாம்பு

    நல்ல ஷாம்பூ நல்ல கூந்தலை கொடுக்கும். ஷாம்பூ கூந்தலை நன்றாக கிளென்ஸ் செய்து தூசிகளில் இருந்து காத்து கூந்தலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

    குளிர்ந்த நீரில் கூந்தலை அலசவும்

    இந்த எளிமையான டிப் உங்கள் கூந்தலுக்கு பல வித்தியாசங்களை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலை ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்ததும் குளிந்த நீரால் கூந்தலை அலசவும். இது உங்கள் கூந்தலில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். சூடான நீரில் தலைக்குளிப்பதை தவிர்க்கவும்.

    ஹீட் ஸ்டலிங் செய்வதை குறைத்திடுங்கள்

    ஸ்ட்ரெயிட்னர் மற்றும் கர்லர் போன்ற சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்திடுங்கள். இது உங்கள் கூந்தலை எளிதில் உடையச் செய்யும். சரியான ஹீட் புரொடெக்டிவ் கிரீம், ஸ்பிரேக்களை பயன்படுத்திய பிறகே இந்த சாதனங்களை கூந்தலில் பயன்படுத்தவேண்டும்.

    • பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகும்.
    • உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும்.

    பெண்களின் சருமம் பனிக்காலத்தில் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும். அதற்கு காரணம்…?

    சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும் படுமந்தமாகிவிடும். மேலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும்.

    இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைய் தன்மையும் சருமத்திற்கு கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வறண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.

    பனிக்காலத்தில் குளிர்காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வறண்டு விடும். எண்ணைய் தன்மை உடைய சருமமும் பாதிக்கப்படும்.

     உதடுகளில் சுரபிகள் எதுவும் இல்லாததால், குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகிறது. மனித உடலிலே மென்மையானது உதட்டுப் பகுதி. அதனால் பனிக்காலத்தில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படும்.

    பனிக்காலத்தில் உடல் அழகை பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. ஆதலால், பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

    பனிக்காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக சற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரணமாகும்.

    உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கபடும்.

     பெண்கள் உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் முலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவை சிறந்தது.

    சோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிரப்பதும் நல்லது. கடலை மாவு, பாசிபயறு மாவு பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணை அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.

    பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும்.

    பனிக்காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டி தேய்த்து நன்றாக சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுபடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதங்களை பத்து நிமிடங்களுக்கு உப்பு கலந்த நீரில் மூழ்க வைத்து, பின்னர் `வாஸ்லின்' தேய்க்கலாம். இப்படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும்.

     தேங்காய் எண்ணெய், பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேய்ப்பதும் ஓரளவு நல்ல பலனைத் தரும். பனிக்காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது.

    பனிக்காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி முலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். மேலும் உடலின் தட்பவெப்ப நிலையும் பராமரிக்கபடும்.

    முறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் முலம் சுரப்பிகள் ஓரளவு சுறுசுறுப்படையும். அதன் முலம் சருமத்திற்கு ஈரத்தன்மையும், எண்ணெய்த் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கபடும்.

    ×