என் மலர்
நீங்கள் தேடியது "அழகுசாதனப் பொருட்கள்"
- சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
- முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
`வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ…

சோப்பின் பயன்பாடு:
சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

மேக்-அப் போடும் முறை:
மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

ஆரோக்கியமான கூந்தல் பெற:
இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.
மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

கைகள் பராமரிப்பு:
இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.
- இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உதட்டுச்சாயங்களை பயன்படுத்துங்கள்.
- சரும எரிச்சல், புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக் தவிர்க்க முடியாத அழகு சாதனப் பொருளாக இருக்கிறது. மேக்கப் போடுவதற்கு ஆர்வம் காட்டாதவர்கள் கூட லிப்ஸ்டிக் உபயோகிக்க தவற மாட்டார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே லிப்ஸ்டிக்கை பூசி அழகை மெருகேற்றி விடலாம்.

அதேவேளையில் லிப்ஸ்டிக் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் சில வகை லிப்ஸ்டிக்குகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.
குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் உள்பட தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்கள் இடம் பெற்றிருப்பதை ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
அதிலும் 24 மணி நேரத்துக்குள் இரண்டு, மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக் பூசும்போது அதில் காணப்படும் குரோமியம் உடலில் கலந்து பாதிப்பை எற்படுத்தக்கூடும்.

பாதிப்புகள்:
* லிப்ஸ்டிக்கில் கலந்திருக்கும் ஈயம் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* லிப்ஸ்டிக்கில் காணப்படும் பித்தலேட்டுகள் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
* பாலி எத்திலின், கிளைகோலிக் அமிலம் உள்ளிட்டவையும் லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. அவை நரம்பு மண்டலத்திற்கு பாதிப்புகளை உண்டாக்கக் கூடியவை.
* பாரபின் (மெழுகு) என்னும் ரசாயனமும் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படுகிறது. அது சருமத்துக்குள் எளிதில் ஊடுருவும் தன்மை கொண்டது. சரும எரிச்சல், புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.
* லிப்ஸ்டிக்கில் உடலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சில நச்சுப்பொருட்களும் உள்ளன. அவற்றை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது தெரியாமல் பலரும் லிப்ஸ்டிக்கை அதிகம் பூசுகிறார்கள். அடர்த்தியாக பூசினால்தான் பளிச்சென்று தெரியும் என்ற எண்ணம் அதற்கு காரணமாக இருக்கிறது.
* லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

* லிப்ஸ்டிக் உபயோகிக்கும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமை பிரச்சனையின் அறிகுறியாக அமையும்.
* லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு என்னும் ரசாயனம் கலந்திருக்கிறது. இது சரும செல்களை சிதைக்கக்கூடியது. அதனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
* பெரும்பாலான ரசாயன பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே கவனமாக கையாள வேண்டும்.
* லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
* லிப்ஸ்டிக்கில் பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளன. இவையும் நாளமில்லா சுரப்பி செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை உண்டாக்கக்கூடும்.
* அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவது சிறுநீரக செயலிழப்புக்கும் வித்திடலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதுதான் அதற்கு காரணம். எனவே லிப்ஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அழகு கலை நிபுணர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு பயன்படுத்துவது சிறப்பானது.

மனதில் கொள்ள வேண்டியவை:
* அடர் நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவை அதிக அளவில் நச்சு ரசாயனங்களின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும்.
* லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துங்கள். இது உதடுகளுக்கு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். அதிக பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
* நச்சு இல்லாத அல்லது இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உதட்டுச்சாயங்களை உபயோகிப்பதற்கு முயற்சியுங்கள்.
* கர்ப்ப காலத்தில் லிப்ஸ்டிக் பூசுவதை தவிருங்கள். அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
* வாரத்தில் 2-3 முறைக்கு மேல் லிப்ஸ்டிக் உபயோகிக்காதீர்கள்.