என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுழைவு சீட்டு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது.
    • தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான தேர்வுக் கூட நுழைவு சீட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20-ந்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று 'ஆன்லைன்-போர்டல்" என்ற வாசகத்தினை கிளிக் செய்து user ஐ.டி. பாஸ்வேர்டை கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இதே போல பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை 19-ந்தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மட்டும் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

    • மொபைல் போன்களில் நேரடியாக தங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கலாம்.
    • பார்வையாளர்களின் திருப்திக்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி கிண்டி சிறுவர் பூங்காவில், வாட்ஸ் அப் வழியே நுழைவுச் சீட்டு பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மக்கள் 8667609954 என்ற எண்ணிற்கு HI என அனுப்பி விவரங்களை பதிவிட்டு, டிக்கெட் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை நிர்வகிக்கவும், பார்வையாளர்களுக்கு அதிக வசதியை அளிக்கவும் வாட்ஸ்அப் (Whatsapp) டிக்கெட் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

    8667609954 என்ற எண்ணுக்கு ஹாய் "Hi" செய்தியை அனுப்புவதன் மூலம், பார்வையாளர்கள் தேவையான விவரங்களைப் பதிவேற்றலாம் மற்றும் தங்களின் மொபைல் போன்களில் நேரடியாக தங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கலாம் இந்த முயற்சியானது தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது.

    டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது மற்றும் பார்வையாளர்களின் திருப்திக்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×