search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை ரகுல் ப்ரீத் சிங்"

    • ஐதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
    • போலீஸ் குழு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தது.

    போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் உள்பட 5 பேரை ஐதராபாத் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதை அம்மாநில போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் தெரியவந்தது.

    இதையடுத்து, போலீஸ் குழு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தது. இந்த சம்பவத்தில், அமன் மற்றும் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    மேலும், 30 கடத்தல் வாடிக்கையாளர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட அமன் ப்ரீத் சிங், அனிகேத் ரெட்டி, பிரசாத், மதுசூதன் மற்றும் நிகில் தமன் ஆகிய 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    ராஜேந்திர நகர் மண்டலத்தின் சைபராபாத் காவல்துறையின் டிசிபி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், " நுகர்வோர்கள் ஐந்து பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். அவர்ளுக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அனைவரும் போதைப்பொருள் எடுத்துக்கொண்டது உறுதியானது.

    பிறகு, அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இப்போது அவர்களை விரிவான மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புகிறோம்" என்றார்.

    2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கூட அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார்.
    • திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.

    தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார்.

    கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

    திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், பிரதமர் மோடி நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில், " திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ஜாக்கியும் ரகுலும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவர்களின் திருமணத்தின் நல்ல சந்தர்ப்பத்தில் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதத்தை கண்டு குஷியான நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பகிர்ந்துள்ளனர்.

    மேலும், இந்த கடிதத்தை தாங்கள் பிரேம் செய்து வைத்துக் கொள்வோம் என்றும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்தவர்.
    • 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம்.

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.

    தொடர்ந்து, சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்தார்.

    தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

    இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை இன்று கரம் பிடித்தார்.

    கடந்த 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர்.

    இதைதொடர்ந்து, திருமண தேதி இன்று குறிப்பிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது. 

    கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலலந்துக் கொண்டனர்.

    திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×