search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சும்மல் பாய்ஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2005 இல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது.
    • தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். படம் வெளியாகி 26 நாட்களான நிலையில் உலகளவு வசூலில் 200 கோடி வசூல் செய்துள்ளது. மலையால சினிமா திரையுலகில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. படம் வெளிவந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் இப்படம் 200 கோடி வசூலிக்கப்பட்டது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    2005-ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் போது குணா குகையில் அவர்களின் நண்பன் ஒருவன் மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு அடுத்து என்ன ஆகிறது, நண்பர்கள் எல்லாம் அவனை எப்படி காப்பற்றுகிறார்கள் என்பதே மீதிக் கதை.

    நட்பின் உன்னதத்தையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தி குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாட்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்ததே இப்படத்தின் முக்கிய வெற்றி. சமீபத்தில் நடந்த நேர்காணலில் பிருத்திவிராஜ் சுகுமாரன் எப்படி மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற மலையாளப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் மலையாளப் படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பும், வெற்றி பெற உதவியும் செய்கிறது என்று விவரித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்', வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
    • தமிழ்நாட்டில் ஒரு வெளி மாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். பாகுபலி, கேஜிஎஃப் வரிசையில் இந்த ஆண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம் கொண்டாடப்பட்டு வருகிறது

    கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்'  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

    நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி உள்ளனர்.

    இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 3 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இதுவரை உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்', வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு வெளி மாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். பாகுபலி, கேஜிஎஃப் வரிசையில் இந்த ஆண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீநாத் பாசி தமிழ் சினிமாவில் களம் இறங்க போகிறார்
    • ஜி.வி பிரகாஷ் இசையமைக்க அறிமுக இயக்குனர் அகிரன் மோசஸ் இயக்கவுள்ளார்.

    சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ் மக்கள் இடையே ஒரு பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. நல்ல படங்களை ஆதரிப்பதில் தமிழ் மக்கள் என்றுமே முன்னோடிகள். உலகளவு கலக்ஷனில் 150 கோடி வசூலைப் பெற்றது. மலையாள சினிமாவில் வேகமாக 100 கோடி வசூலித்த படங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் மட்டும் 40 கோடி வசூலை பெற்ற மலையாள சினிமா இதுவே. இன்ஸ்டாகிராமில் இன்னும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் மிகவும் வைரலாகி வருகிறது.

    இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரமாக ஸ்ரீநாத் பாசி நடித்துள்ளார். படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஸ்ரீநாத் பாசி சர்ச்சைக்குறிய நடிகரும் ஆவார். 23 செப்டம்பர் 2022 அன்று யூடியூப் சேனல் தொகுப்பாளரை அவதூராக பேசியதாகவும், அதே நாளில் பாசி ரெட் எஃப்எம்முக்கு நேரலை பேட்டியின் போது மலையாள வானொலி பத்திரிக்கையாளரை மரியாதை குறைவாக பேசியதால் நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. .

    கடந்த ஆண்டு போதை பொருள் உபயோகத்தினால் ஸ்ரீநாத் பாசியை மலையாள சினிமா தடை செய்தது. அப்பொழுது அவர் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். பலத்தடைக்களுக்கு பிறகு அப்படத்தை நடித்து முடித்தார்.

    இப்பொழுது மஞ்சும்மல் பாய்ஸ் வெளிவந்த பிறகு புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஸ்ரீநாத் பாசிக்கு தமிழ் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்புகழை தொடர்ந்து ஸ்ரீநாத் பாசி தமிழ் சினிமாவில் களம் இறங்க போகிறார். இப்படத்தை பா ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க அறிமுக இயக்குனர் அகிரன் மோசஸ் இயக்கவுள்ளார். இவர் தங்கலான் படத்தில் பா ரஞ்சித்திற்கு உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பை பெற்று வருகிறது
    • இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது

    கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்'  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

    நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி உள்ளனர்.

    இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இதுவரை ரூ.150 கோடி வரை வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் கமல் நடித்த 'குணா' படம் இங்குதான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது
    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் "எனக்கு பிடிக்கவே இல்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அண்மையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூலை இப்படம் தாண்டியுள்ளது. தமிழ்நாடு வசூலில் மட்டும் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் இப்படத்தை பாராட்டினர்.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை.. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து தனது இணையதளத்தில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், "தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது

    மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    மேலும், கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் தற்போது ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலையாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் - கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்!" என அவர் பதிவிட்டுள்ளார்.

    • எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது. தமிழ்நாடு வசூலில் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி பிரபலங்களால் பாராட்டு பெற்றது.

    இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து துனுஷை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தவல்கள் வெளியானது.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர்," தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

    மேலும்," மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலை தளங்களில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பலர் ஜெயமோகன் கூறியது சரிதான் என்றும், பலர் அவர் கூறுயதை மறுத்தும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.




     




     


    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது
    • நடிகர் லால் தமிழில் சண்டைக்கோழி, கர்ணன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்

    மலையாளத்தில் அண்மையில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் பிரபல நடிகர் லாலின் மகன் நடித்துள்ளார் என்கிற தகவல் வெளிவந்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் நண்பர்களின் குழுவில், சிஜு என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் லாலின் மகன் ஜீன் பால் லால் நடித்திருக்கிறார். ஜீன் பால் லால் இதுவரை தாடியுடன் தான் படங்களில் நடித்துள்ளார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்காக அவர் தாடியை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     அது மட்டுமில்லாமல், அந்த நண்பர்களின் குழுவில் சிக்சன் என்கிற பாத்திரத்தில் நடித்த நபர் லாலின் மருமகன் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது.

    மலையாளத்தில் பிரபல நடிகராக உள்ள லால் தமிழிலும் சண்டைக்கோழி, கர்ணன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    • இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
    • படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

    மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாள மொழியில் ரிலீசான போதிலும் இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

     


    இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்க இருப்பதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதன் இயக்குநர் அடுத்து தமிழ் படம் இயக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 15 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் ஆகியுள்ளது.
    • அளவு கடந்த அன்பை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. - இயக்குனர் சிதம்பரம்

    தமிழ் மக்களின் அன்புக்கு நன்றி: மஞ்சும்மல் இயக்குநர் நெகிழ்ச்சி

    கடந்த சில நாட்களாகவே தமிழ் நாட்டில் எந்த சமூக ஊடகங்களை திறந்தாலும் "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

    மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 15 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் ஆகியுள்ளது. இதுவரை மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மஞ்சும்மல் பாய்ஸ் 100 கோடியை தாண்டியுள்ளது. மலையாள சினிமாவில் வேகமாக 100 கோடி வசூல் செய்த படங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் முதலிடம் பெற்றுள்ளது.

    இரண்டு நாட்கள் முன்பு மஞ்சும்மல் பாய்ஸ் படக் குழுவினர் சென்னை வந்திருந்தனர். தமிழ் திரையுலக பிரபலங்களான கமல், விக்ரம், தனுஷ், சித்தார்த் போன்றவர்களிடம் படம் தொடர்பாக பாராட்டுப் பெற்று இருந்தனர்.

     

    அதற்கு பதில் அளிக்கும் விதமாக "அளவு கடந்த அன்பை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக இத்திரைப்படம் வெற்றி பெறக் காரணமான தமிழ் ரசிகர்களுக்கு மிக்க நன்றி" என்று அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

     

    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல்கள் தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது
    • இந்நிலையில் சுஷின் ஷியாம் இசையமைக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மலையாளத்தில் அண்மையில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    மலையாள திரையுலகில் தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்து வந்த இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழ்நாட்டிலும் கவனம் பெற்றுள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல்கள் தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது

    இவர் இதற்கு முன்பு, குரூப், கும்பலாங்கி நைட்ஸ், மின்னல் முரளி, ரோமாஞ்சம், கண்ணூர் ஸ்குவாட் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் சுஷின் ஷியாம் இசையமைக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரோமாஞ்சம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஆவேசம் என்ற புதிய படத்தில் பகத் பாசில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'மஞ்சும்மல் பாய்ஸ்' புகழ் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.
    • இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரளாவில் ரிலீசான இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

     


    இதன் காரணமாக 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் வசூலில் ரூ. 50 கோடியை கடந்த நிலையில், 12 நாட்களில் இந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    முன்னதாக நடிகர் மோகன்லால் நடித்து வெளியான புலிமுருகன், லூசிஃபர் மற்றும் கடந்த ஆண்டு வெளியான 2018 போன்ற மலையாள மொழி படங்கள் வசூலில் ரூ. 100 கோடியை கடந்து அசத்தின. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.டி. கிரிஷ் இயக்கத்தில் வெளியான பிரேமலு படமும் விரைவில் ரூ. 100 கோடி வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது.
    • மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

    சமீபத்தில் வெளியாகி கேரளாவில் பெரும் ஆதரவு பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டிலும் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களிடமும் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை பரவா பில்ம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

    இதில் ஷோபின் ஷஹிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்த படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு "ஜான்-இ-மான்"படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் இப்படம் பெரும் வசூலினை பெற்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமா முன்னணி பிரபலங்களான நடிகர் விக்ரம், நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்தி சுப்பராஜ், நடிகர் சித்தார்த், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை பார்த்து படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இப்படத்தில் கமல் நடித்த குணா படத்தில் உள்ள கண்மணி அன்போடு காதலன் என்னும் பாடல் இப்படத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

    இதனால் மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதையொட்டி மார்ச் 1 -ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன், மஞ்சும்மாள் பாய்ஸ் படக்குழுவினர் அனைவரையும் அவரின் அலுவகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, குணா படத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    ×