என் மலர்
நீங்கள் தேடியது "ஜாம் நகர் விமான நிலையம்"
- ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- நாள் ஒன்றுக்கு 6 விமானங்களை கையாளும் ஜாம்நகரில் நேற்று மட்டுமே 140 விமானங்கள் வந்துள்ளன.
சென்னை:
மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மோடி அரசின் மெகா "மொய்"
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.
6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு.
ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4 வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள் என பதிவிட்டுள்ளார்.
மோடி அரசின் மெகா "மொய்"
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 2, 2024
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.
6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு.
ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக்… pic.twitter.com/WNMDr0uGPb
முன்னதாக, ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவை ஒட்டி, குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் அதாவது பிப்.25 முதல் மார்ச்.5 வரை சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 6 விமானங்களை கையாளும் ஜாம்நகரில் நேற்று மட்டுமே 140 விமானங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.