என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்"

    • மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.
    • முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது.

    இந்த கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது.

    அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன. தற்போது முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும், எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்து துறை சிறந்த முறையில் பணியாற்றியது. இதன் பயனாக அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2022-23-ம் ஆண்டுக்கான தேசிய பொது பஸ் போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது.

    மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.

    முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் 4-ல் ஒரு பங்கு ஆகும்.

    பஸ்களில் எரிபொருள் திறன், சாலை பாதுகாப்பு, டயர் செயற்திறன் (கிராமப்புறம், நகர்ப்புறம்), வாகன பயன்பாடு (கிராமப்புறம், நகர்ப்புறம்) ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை 6 விருதுகளுக்கும், கும்பகோணம் 5 விருதுகளுக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் 3 விருதுகளுக்கும், சேலம் 2 விருதுகளுக்கும் தேர்வாகி உள்ளன.

    ஏ.எஸ்.ஆர்.டி.யு. தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக முதல் இடத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் ஒரு விருதும் பெற்றிட தேர்வாகி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து கழக கடன் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது.

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதன்மை கணக்காய்வு துறைத் தலைவர் ஜெய்சங்கர் சிஏஜி அறிக்கையை வெளியிட்டார்.

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து ஊழியர்களின் செலவினம் மட்டும் 55.20% முதல் 63.55 % வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநில நிதிநிலை (ஏப்.2022 முதல் மார்ச் 2023 வரை) மீதான சிஏஜி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

    2022-23 நிதியாண்டில் தேசிய தனிநபர் GDP-ஐ விட, தமிழ்நாட்டின் தனிநபர் GDP அதிகமாக உள்ளது. CAG அறிக்கை தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் (GDP) தேசிய சராசரி ₹1,96,983 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டின் சராசரி ₹3,08,020 ஆக உள்ளது.

    தமிழ்நாட்டில் 2021-2022ல் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2022-2023ல் 36,215 கோடியாக குறைந்துள்ளது. ஆகவே முந்தைய ஆண்டின் வருவாய் வரவுகளை விட 2022-2023ல் 17% வருவாய் அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) - ரூ.23.64 லட்சம் கோடியாகவும் வரி வருவாய் - ரூ.1.88 லட்சம் கோடியாகவும் மொத்த வருவாய் - ரூ.2.43 லட்சம் கோடியாகவும் GSDP வளர்ச்சி - 14.16% ஆகவும் உள்ளது.

    தமிழ்நாட்டில் மாநில அரசின் கடன் கட்டுக்குள் உள்ளது. தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது

    மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் 28% காலிப்பணியிடங்கள் உள்ளது.

    ×