search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையாள சினிமா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.
    • நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.

    மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் புகாரளித்த பெண்களுடன் துணை நிற்பதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது:-

    பாதிக்கப்பட்ட பெண்களுடன் ஒரு தாயாகவும் ஒரு பெண்ணாகவும் துணை நிற்கிறேன்.

    பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.

    பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் துணை நிற்க வேண்டும்.

    நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.

    பெண்களே வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை எந்த நிலையிலும் சமரசம் செய்யாதீர்கள்.

    No என்றால் கண்டிப்பாக No-தான் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காதீர்கள் என்று பெண்களுக்கு குஷ்பு அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது.
    • ரேவதி சம்மத் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.

    மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது முதல், பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

    பின்னர் முதன்முறையாக பெயர் குறிப்பிட்டு மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா பாலியல் தொல்லை புகார் கூறினார். மலையாள சினிமாவில் நடிக்க வந்த தன்னை பாலியல் ரீதியாக அணுகினார் என்று சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித்-மீது புகார் கூறியிருந்தார்.

    இந்த புகாரை அடுத்து சினிமா அகாடமி தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் ராஜினாமா செய்தார்.

    அதன் பிறகு மேலும் ஒரு மலையாள நடிகை, நடிகர் சித்திக் ஹோட்டலில் வைத்து அத்துமீறியதாக புகார் கூறினார். இதைத்தொடர்ந்து நடிகர் சித்திக் மலையாள சினிமா அசோசியேசன் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஹேமா கமிஷன் அறிக்கையைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், ராஜினாமாக்களும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.

    சில தினங்களுக்கு முன்பு நடிகர் சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது என்று ரேவதி சம்பத் கூறி இருந்தார். அதில் சித்திக் ரேவதி சம்மத்திடம் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பில் பேசியதாகவும் படம் குறித்து பேசுவதற்கு ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில் கேரள போலீசார் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை தவறாக வழி நடத்துகிறீர்கள்.
    • நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

    2017-ம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் கேரள மாநில அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சமர்பித்த அறிக்கை மலையாளம் சினிமா துறையில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்தியது.

    அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நடிகைகள் தாங்களும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக அடுத்தடுத்து புகார் தெரிவித்து வரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாலையான சீனிமாவின் மூத்த நடிகரும், மத்திய தலைவருமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

    நான் புரிந்து கொண்டது வகையில் இது எல்லாம் உங்களுக்கான தீனி மாதிரி. இதை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன.

    நீங்கள் (ஊடகங்கள்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழி நடத்துகிறீர்கள்.

    புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

    இவ்வாறு சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

    • மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால்.
    • மூச்சு திணறல் பிரச்சனையால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்பொழுது பிரித்விராஜ் இயக்கும் எம்புரான் திரைப்படத்திலும், பாரோஸ் மற்றும் எல்360 படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் மோகன் லால் மூச்சு திணறல் பிரச்சனையால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிகளவு காய்ச்சல் மற்றும் தசை வலி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மோகன்லாலுக்கு வைரல் தொற்றும் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 5 நாட்களுக்கு பொது இடங்களுக்கு எங்கும் செல்ல வேண்டாம் எனவும் நன்றாக ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

    விரைவில் மோகன்லால் குணமாக ரசிகர்கள் மற்றும் மக்கள் பிராத்தித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53).
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53). கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    1971-ம் ஆண்டு பிறந்த இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் மலையாள திரையுலகில் கால்பதித்தார். அதன்பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா நடித்த 'கபடி கபடி' திரைப்படத்தை இயக்கி சுதீர் போஸ் இயக்குனரானார். இந்த படத்தில் நாதிர்ஷா இசையமைப்பில் நடிகர் கலாபவன் மணி பாடிய 'மின்னாமினுங்கே' என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இதன் மூலம் சுதீர் போஸ் இயக்கிய 'கபடி கபடி' படம் கொண்டாடப்பட்டது.

    இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் பதிஞ்சரேனடா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    அவரது மறைவுக்கு மலையாள திரையுலக நடிகர்-நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீர் போசின் இறுதிச்சடங்கு வருகிற 5-ந்தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

    • இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது.
    • இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டி தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மம்முட்டியின் பிரம்மயுகம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சமீபத்தில் மம்மூட்டி மற்றும் கன்னட பிரபலமான ராஜ் பி ஷெட்டி இணைந்து டர்போ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

    சினிமாவை தாண்டி இன்னொரு புறம் மம்முட்டிக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள அழகான விஷயங்களை தனது கேமராவில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது உண்டு. அப்படி மம்முட்டி எடுத்த புகைப்படங்களில் இந்திய புல்புல் பறவையின் புகைப்படமும் ஒன்று. இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. பின்னர் மம்முட்டி எடுத்த புல்புல் பறவை புகைப்படத்தை ஏலம் போட்டனர்.

    ஏலத்தின் ஆரம்ப விலையாக ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. பின் அந்த புகைப்படத்தை தொழில் அதிபரான அச்சு உல்லட்டில் [லீனா க்ரூப் ஆஃப் பிசினஸ்] ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

    இந்த புகைப்பட கண்காட்சி மறைந்த எழுத்தாளரான இந்துச்சூடன் சார்பாக நடைப்பெற்ற கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
    • அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்தார்.

    தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    அதிதி நடிக்கும் அடுத்தப் படத்தில் தனெக்கென குரல் பாணியிலும் நடிப்பிலும் அசத்தும் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.  இப்படம் இசை நிறைந்த காதல் கதை பின்னணியில் உருவாகவுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இசையை பிரபல மலையாள இசையமைப்பாளரான ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கவுள்ளார். 

    2022 ஆம் ஆண்டு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரனவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஹிருதயம் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    அதிதி சங்கர் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்து இப்படத்திலும் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் `ரசவாதி` திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
    • ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார்.

    அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடித்து வருகின்றனர்.

    இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் சென்னை மற்றும் இந்தியாவில் பிற மாநிலங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வந்தது.

    இந்நிலையில் படத்தின் மிகப் பெரிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவட்தாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் வெளியாகும் தேதி அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானை வைத்து 'சிகந்தர்' என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் இயக்கும் படங்களுக்கென தனிப்பட்ட ஒரு கதைக்களமும், ஸ்டைல் இருக்கும்.
    • இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா இணைவதாக கூறப்படுகிறது.

    காதல் ,  போலீஸ் கதைகளை எடுப்பதில் வல்லவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கும் படங்களுக்கென தனிப்பட்ட ஒரு கதைக்களமும், ஸ்டைல் இருக்கும். இவர் படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் பயங்கர ஹிட்டானது. மின்னலே படத்தில் தொடங்கிய கௌதமின் திரைப்பயணம் என்றுமே ஏறுமுகம் தான். நடித்திருந்தார்.

    கௌதம் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வௌியானது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில், வருண் நாயகனாக நடித்திருந்தார். இதேபோல, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படமும் நீண்ட நாட்களாக வணிக பிரச்சனையால் வெளியாகாமல் உள்ளது.

    இந்நிலையில், அடுத்ததாக மலையாளப் பக்கம் திரும்பிய கௌதம் மேனன், மம்மூட்டியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படத்தை மம்மூட்டியே தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா இணைவதாக கூறப்படுகிறது. மேலும், வரும் ஜூன் 15- ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மமூட்டி மற்றும் ராஜ் பி செட்டி நடிப்பில் சமீபத்தில் டர்போ திரைப்படம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார்.
    • சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.

    அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடித்து வருகின்றனர்.

    இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானை வைத்து 'சிகந்தர்' என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது.

    இந்நிலையில் 'எஸ்கே23' படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
    • சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ் . சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். ஆடு ஜீவிதம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும்.

    அதைத்தொடர்ந்து ப்ரித்விராஜ் குருவாயூர் அம்பல நடையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். விபின் தாஸ் இயக்கம் செய்யும் இப்படத்தில் பசில் ஜோசப், யோகி பாபு நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், ரேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்துள்ளார். அங்கித் மேனன் இசை அமைத்துள்ளார். கதையை தீப்பு பிரதீப் எழுதியுள்ளார்.

    விபின் தாஸ் இதற்கு முன் ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குஞ்சிராமாயணம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவராவார்.

    இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. பிரித்விராஜ் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக இருப்பதினால் மக்கலிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார் மமூட்டி
    • வரும் மே 23 ஆம் தேதி டர்போ திரைப்படம் வெளியாகவுள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

    அதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதியுள்ளார் இதற்கு முன் பிரபல மலையாள திரைப்படமான அஞ்சாம் பதிரா மற்றும் ஆப்ரஹம் ஓஸ்லர் படங்களுக்கு கதையை எழுதியது குறிப்பிடத்தக்கது. சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    வரும் மே 23 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. பீஷ்ம பர்வம் படத்திற்கு பிறகு மமூட்டி ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து இருக்கிறார். கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி வில்லனாக இப்படத்தில் நடித்துள்ளார்.

    டிரைலரின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×