என் மலர்
நீங்கள் தேடியது "போதைப்பொருள் புழக்கம்"
- தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
- போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறி உள்ளது.
சென்னை:
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும்அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் சி.வி.சண்மும் பங்கேற்றார். போராட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து திரளானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
* போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறி உள்ளது.
* போதைப்பொருளால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.
* ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
* தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.