என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷாலினி அஜித்குமார்"
- உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- இது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை எடுத்து வருகிறார்.
அதனால் அஜீத்குமார் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை கவனித்துக் கொள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இது சம்பந்தமான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் எப்போதும் உங்களை காதலிக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
- ஐதராபாத்தில் நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவியை சந்தித்தார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஷாலினி. நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட ஷாலினி, அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு பேபி ஷாம்லி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோததரரும் உண்டு.
இந்த நிலையில், ஷாலினி அஜித்குமார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரி மற்றும் சகோதரருடன் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தற்போது விஷ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வசிஷ்டா இயக்குகிறார்.
முன்னதாக விஷ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்தார். மேலும், படக்குழுவுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார். இது தொடர்பான படங்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடா முயற்சி" படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
- அதே சமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடா முயற்சி" படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் அஜித்குமார் நடித்து வருகிறார்.
அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் தருவார்.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது. தயவு செய்து யாரும் அதனை பின் தொடர் வேண்டாம் என்று ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த போலியான எக்ஸ் பக்கத்தை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்
- மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் "விடா முயற்சி" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் மைதானத்தில் உட்கார்ந்து விளையாட்டை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அஜித் குமார் அவர் மகனான ஆத்விக்கிற்கு ஷூ கடையில் அமர்ந்து ஷூ மாட்டி விடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
'உங்களால் ஜெயிக்க முடியாது' என்று நம்மிடம் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் அது நாம் தான் " என்ற தலைப்பில் பதிவினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்