search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்கிரீம் ரெசிப்பி"

    • உடல் சோர்வடையாமல் வைத்திருக்க உதவி செய்யும்.
    • மாம்பழ சீசனுக்கு ஏற்ற மாம்பழ லஸ்ஸி சுவைத்து பாருங்கள்.

    வெயில் காலம் வந்தாலே உடல் சூட்டைக் குறைக்கவும், உடலை சோர்வடையாமல் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இளநீர், மோர், பதநீர், நீர் ஆகாரம் போன்றவற்றைத் தான் அதிகளவில் சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இத்தகைய உணவுகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

    அதுவும் இந்த மாம்பழ சீசனில் மாம்பழ லஸ்ஸி டிரை பண்ணலனா எப்படி. வாங்க மாம்பழ லஸ்ஸி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மாம்பழம் - 1 கப் (நறுக்கியது)

    சர்க்கரை - 1/2 கப்

    தயிர் - 1/2 கப்

    ஏலக்காய் - 2

    ஐஸ் கியூப் - 8-9

    புதினா இலைகள் - 4-5 (அழகுபடுத்த)

    பாதாம் - அழகுபடுத்துவதற்கு

    முந்திரி - அழகுபடுத்துவதற்கு

    பிஸ்தா - அழகுபடுத்த

    செய்முறை:

    மாம்பழத்தை தயாரிக்க, 1 முதல் 2 பழுத்த மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு 1/2 கப் தயிர், மாம்பழ துண்டுகள், 1/2 கப் சர்க்கரை மற்றும் 8 அல்லது 9 ஐஸ் கியூப்ஸ், 2 ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இதனை ஒரு பவுளில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து எடுத்து புதினா இலைகள், பாதாம், பிஸ்தா அல்லது முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். 

     

    • சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். கோடை வெயிலில் குளுகுளுனு சாப்பிட சூப்பரான ஆரஞ்சு ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க. ஆரஞ்சு பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    ஆரஞ்சு பழம்- 3

    பாதாம், முந்திரி- 10

    செய்முறை:

    முதலில் ஒரு முழு ஆரஞ்சை பழத்தை எடுத்து அதன் மேல் பகுதியை வட்டமாக வெட்டி எடுத்துவிட்டு, அதனுள் இருக்கும் சதை பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முழு ஆரஞ்சு பழம் போல் முழுவதுமாக நமக்கு வேண்டும்.

    இதற்கிடையே அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்த்து அதில் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    கடாயின் ஓரங்களில் பிடிக்கும் ஏடுகளை கரண்டியால் எடுத்து பாலிலேயே மீண்டும் சேர்த்து விட வேண்டும். இந்த பால் வற்றி பால்கோவா பதத்திற்கு முன்புள்ள நிலையான கிரீம் பதம் வர வேண்டும். கிரீம் பதம் வந்ததும் இதில் பொடியாக நறுக்கிய பாதாம் , முந்திரி சேர்த்து, அரை ஸ்பூன் பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

    இப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இதை 15 நிமிடம் அப்படியே ஆற விட வேண்டும். இந்த கலவை இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

    இப்போது நாம் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சின் சதை பகுதியில் இருந்து விதைகளை நீக்கி விட்டு, அதன் ஜூசை மட்டும் ஒரு பாத்திரத்தில் கைகளை பயன்படுத்தி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது இந்த ஜூசை நாம் கிரீம் போல் தயாரித்து வைத்துள்ள பாலில் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு, பின்னர் இதை நாம் உடையாமல் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்திற்குள் கரண்டியை பயன்படுத்தி ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் ஏற்கனவே வெட்டி எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலின் மேல் பகுதியை கொண்டு இதை மூடிக் கொள்ள வேண்டும். இதை இரண்டரை மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து பின்பு வெளியே எடுத்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். 

     

    • ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது.
    • அவகாடோ ஐஸ் கிரீம் எப்படி ஈஸியாக செய்வது என்று பார்க்கலாம்.

    ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது. இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் பருவக்கால பழங்களை சமாளிக்க ஐஸ்கிரீமை மறந்துவிட முடியாது. குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் எப்படி ஈஸியாக செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவகாடோ – 2

    ஹெவி கிரீம் – 1 + 1/2 கப்

    கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு

    வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி

    செய்முறை:

    ஹெவி கிரீம் செய்ய... ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெயை சேர்த்து உருக்கி ஆற விடவும். இதனுடன் பால் சேர்த்து ஹான்டு பீட்டர் கொண்டு நன்கு அடித்து எடுத்தால் கிரீம் ரெசி. இதனை ஃப்ரிட்ஜில் வைத்து 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, மேலே படிந்து வரும் ஆடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். சேகரித்த பால் ஆடைகளை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கினால் ஹெவி கிரீம் தயார்.

    முதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டன்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்க வேண்டும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் ரெடி.

    • லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    • குழந்தைகளுக்கு தினமும் விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து அசத்தலாம்.

    குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எலுமிச்சைச்சாறு – 1/2 கப்,

    தண்ணீர் – 1 கப்,

    சர்க்கரை – 3/4 கப்,

    புதினா சாறு – 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீருடன், 3/4 கப் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். இதனுடன் புதினா சாறு சேர்க்க வேண்டும். பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி எடுக்கவும். இதனை பாப்சிகிள் மோல்டில் ஊற்றி 3-4 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். லெமன் ஷாட் பாப்சிகிள் ரெடி.

    • ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது.
    • வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம்.

    ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. மனிதர்கள் மட்டுமல்ல இதர உயிரினங்களும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம். வீட்டில் ஐஸ்கிரீமை தயார் செய்தால் அது பிராண்டட் நிறுவனங்கள் தயாரிக்கும் சுவையில் இருக்காது. ஆனால் குல்ஃபி அப்படி அல்ல. வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம். விடுமுறை நாட்களில் இந்த குல்ஃபியை தயார் செய்து உங்கள் மனதிற்கு பிடித்தமான நபருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாதாம், பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை எளிமையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட்- 3

    பால் - ஒரு லிட்டர்

    பாதாம், பிஸ்தா, முந்திரி- தலா 2 ஸ்பூன்

    குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

    சர்க்கரை- 100 கிராம்

    மில்க்மெய்டு- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை எல்லாம் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் காய்ந்தவுடன் அதில் சர்க்கரை, பொடித்த பிரெட் மற்றும் பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி கலவை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

    பின்னர் குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள் மற்றும் மில்க்மெய்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறினால் அந்த கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு குல்பி மோல்டு அல்லது சிறிய கிண்ணங்கள் அல்லது, டம்ளர் ஆகியவற்றை ஊற்றி அதனை ஒரு அலுமினிய பேப்பர் கொண்டு மூடி ஃப்ரிட்ஜில் ஃபிரீசரில் 6 மணிநேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு எடுத்து பரிமாறலாம்.

    ×