என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.கே.சிவகுமார்"

    • கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார்.
    • அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கறுப்புக்கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், "அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    இந்த வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சித்தராமையாவை முதல்வர் நார்காலியில் இருந்து அகற்றி கர்நாடக முதல்வராக பாடுபடும் டி.கே.சிவகுமாரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து கர்நாடகா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், "அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை" என்று தெரிவித்தார்.

    • நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது.
    • ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், "கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல். இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது"

    • நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது
    • நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது

    கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசினார் டி.கே.சிவகுமார். அப்போது, "நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

    நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் இந்தியா கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார்.
    • டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கடந்த சனிக்கிழமை தார்வாட் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது ஹாவேரி சவனூர் நகரில் பிரசார பேரணியில் பங்கேற்பதற்காக காரில் இருந்து இறங்கியபோது அவரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் டி.கே.சிவகுமாரால் அங்கிருந்து மெதுவாகதான் நகர முடிந்தது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த நகராட்சி உறுப்பினரும், காங்கிரஸ் தொண்டருமான அல்லாவுதீன் மணியார் என்பவர் ஆர்வத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார். இதனால் டி.கே.சிவகுமார் அந்த காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அல்லாவுதீன் மணியாரை கூட்டத்தில் இருந்து ஒதுக்கி தள்ளி டி.கே.சிவகுமாரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி காமிராக்களில் பதிவானது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டி.கே.சிவகுமார் காங்கிரஸ் உறுப்பினரை அறைந்த சம்பவம் குறித்து பா.ஜனதா ஐ.டி.விங் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் டி.கே.சிவகுமார் ஒருவரை தாக்குவது இது முதல் முறையல்ல. டி.கே.சிவகுமாரின் தோளில் கை வைத்தது காங்கிரஸ் மாநகர உறுப்பினர் செய்த குற்றமா? காங்கிரஸ்காரர்கள் ஏன் காங்கிரசுக்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்களின் தலைவர்கள் அவர்களை அறைகிறார்கள்.

    அவமானப்படுத்துகிறார்கள். போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை, ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் சுயமரியாதை இல்லையா? என பதிவிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.
    • 50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில், எனது அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேரை விலைக்கு வாங்க தலா ரூ.50 கோடி வழங்க பா.ஜ.க. முன்வந்தது.

    ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். இவ்வளவு பணம் பா.ஜ.க.வுக்கு எங்கிருந்து வந்தது ? என பரபரப்பு தகவலை வெளிப்படுத்தினார்.


    இந்த நிலையில் இதை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் 2008-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை திட்டத்தை கொண்டு வந்து 2019-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்த்தார்கள். இதில் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. செல்வாக்கின் கீழ் சென்றதால் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நிர்வாகத்திற்கு வழிவகுத்தது.

    தற்போது காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் பெரும்பான்மையுடன் உள்ளது. தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.

    50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர். இதுபற்றி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் என்னிடம் கூறினர். அதை தான் சித்தராமையா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் பிறகு பேசுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இந்த குற்றச்சாட்டை கர்நாடக பா.ஜ.க. முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜ.க. கட்சி தலைவர் விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி கொடுப்பதாக பா.ஜ.க.வினர் பேரம் பேசியதாக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?. நாங்கள் அவ்வாறு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    இது பொய் குற்றச்சாட்டு என்பது குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். பொய் செய்திகளை பரப்புவது காங்கிரசின் தொழிலாக மாறிவிட்டது. மூடா நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால், சித்தராமையா இப்படி பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். அதிகாரத்தை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் சித்தராமையா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

    ரூ.50 கோடி விஷயத்தில் அமலாக்கத்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதன் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×