என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புஷ்பா2"

    • ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
    • ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.

    தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    தற்போது அல்லுஅர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

    அவருக்கு திரை உலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சமந்தா தெரிவித்த வாழ்த்து பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்புள்ள ராஷ்மிகா உங்களுக்கு இது மற்றொரு அழகான ஆண்டு என பதிவிட்டுள்ளார்.

     

    தமன்னா வெளியிட்டுள்ள பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஷ்மிகா. உங்களுக்கு இது சிறந்த ஆண்டாகவும் நிறைய அன்பு கிடைக்கவும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    சக நடிகையான ராஷ்மிகாவுக்கு எனது வாழ்த்துக்கள் என நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

     

    இவ்வாறு ஏராளமான நடிகர், நடிகைகள் ராஷ்மிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    பிறந்த நாளையொட்டி புஷ்பா 2 படக் குழுவினர் படத்தில் ராஷ்மிகாவின் வள்ளி கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையில் நடந்த இந்நிகழ்ச்சியில் கிஸிக் பாடலை படக்குழு வெளியிட்டனர்.
    • நீங்கள் திரைத்துறையில் இருப்பவர்கள் யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா

    தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ள நிலையில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா பீகாரில் வைத்து பிரம்மாண்டமாக கடந்த வாரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அதன் நடிகர்கள் ஈடுபட்டுள்ளனர். புஷ்பா ஒன்றில் அல்லு அர்ஜூன் காதலியாக நடித்த பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா இரண்டாம் பாகத்தில் அவருக்கு மனைவியாக நடித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் கிஸிக் பாடலை படக்குழு வெளியிட்டனர். விழாவில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, நெல்சன் திலிப்குமார் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது மேடை ஏறிய படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவிடம் தொகுப்பாளர் கேள்வி ஒன்றை கேட்டார். அதாவது, நீங்கள் திரைத்துறையில் இருப்பவர்கள் யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா அல்லது திரைத்துறைக்கு வெளியிலிருந்து மாப்பிளை தேடுகிறீர்களா என்று கேள்வி கேட்டார்.

    இதற்கு சிரித்தபடி பதிலளித்த ராஷ்மிகா, எல்லோருக்கும் அதைப் பற்றி தெரியும் என்று சிம்பிளாக பதிலளித்தார். முன்னதாக நடிகர் விஜய் தேவரக்கொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம், பெல்லி சூப்புலு உள்ளிட்ட படங்கள் மூலம் உச்சத்துக்கு வந்த ராஷ்மிகா அவருடன் காதலில் உள்ளார் என்று கூறப்பட்டது.

     

     

     இவர்களின் ரிலேஷன்ஷிப் குறித்து அரசல் புரசலாக திரை வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு இருந்து வரும் நிலையில் தற்போது தனது சாய்ஸ் குறித்து அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருப்பது அவர்களின் உறவை உறுதிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் புளகாங்கிதத்தில் உள்ளனர். 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • நீதிபதி விஜய்சென் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.
    • திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெலுங்கானா மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த டிசம்பர் மாதம் அதிகாலை நேரம் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்திருந்த அல்லு அர்ஜூனை பார்க்க பெருமளவு கூட்டம் கூடியது.

    இதில் ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் வந்திருந்த 8 வயது மகன் படுகாயம் அடைந்தான். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அல்லு அர்ஜூன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


    இதைத்தொடர்ந்து திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெலுங்கானா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நேற்று முன்தினம் நீதிபதி விஜய்சென் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ''16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ இரவு, அதிகாலை காட்சிகளில் தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது'' என தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும் உத்தரவிட்டார்.

    மேலும் குழந்தைகள் திரையரங்குகளில் நுழைவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா மாநில அரசை ஐகோர்ட்டு கேட்டுக்கொண்டது. இந்த நேரங்களில் குழந்தைகள் திரைப்படங்களை பார்ப்பதற்கான விதிகளை உருவாக்க குழந்தை உளவியலாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களை கலந்தாலோசிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. "இந்த உத்தரவு இப்போது அமலுக்கு வந்துள்ளது. பொழுதுபோக்கு துறையின் தேவைகளை சமநிலைப்படுத்தும் அதே வேளையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் விரைவில் உருவாக்கும்" என கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதம் (பிப்ரவரி) 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    ×