என் மலர்
நீங்கள் தேடியது "IVF சிகிச்சை முறை"
- எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை.
- பலருக்கும் சில காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது.
கருத்தரித்தலை எதிர்நோக்கும் எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை. பலருக்கும் சில பல காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது. இதனால் கருவுறாமை பிரச்சனையை அதிக தம்பதியர் எதிர்கொள்கிறார்கள். கருத்தரிக்க இயலாமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய பரிசோதனைகளுக்கு பிறகு செய்றகை கருவுறுதல் செய்யலாம் என்று மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த IVF கை கொடுக்கிறது.
கருவுறுதல் தாமதமாகும் போதும் பரிசோதனையில் இயல்பான கருத்தரிப்பு சாத்தியமில்லை எனும் போதும் இந்த இவ்ப் தொழில்நுட்பத்தை விரும்புகிறார்கள்.
இந்த செயல்முறையின் போது கருப்பையில் இருந்து முட்டைகள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டெடுக்கப்படுகின்றன. ஆய்வகத்தில் விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுறுகின்றன.
பிறகு பெண்ணின் கருப்பையில் மீண்டும் செருகப்படுகின்றன. தம்பதியர் கருவுறாமை பிரச்சனையில் இருக்கும் போது invitro fertilization (IVF) சிகிச்சையை தேர்வு செய்வதாக இருந்தால் இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் IVF முயற்சிக்கும் தம்பதியராக இருந்தால் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியம்
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது சிகிச்சையில் முக்கியமானது. உடல் பருமனாக இருப்பது மற்றும் குறைவான எடை கொண்டிருப்பது என இரண்டுமே உங்கள் சிகிச்சை வெற்றி விகிதங்களை பாதிக்கச் செய்யலாம். அதிக எடையுடன் இருக்கும் பெண், சிகிச்சையில் கருப்பை கண்காணிப்பை சிரமமாக வைக்கிறது. முட்டைகளை மீட்டெடுக்கும் போது சிரமத்தை உண்டு செய்கிறது.
ஆரோக்கியமான எடையை பெறுவது உணவு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள். தேவையெனில் உடல் எடை குறைய பயிற்சி போன்றவற்றை செய்யலாம். உணவியல் நிபுணருடன் ஆலோசித்து கார்டியோ, மெட்டபாலிக் எடை இழப்பு திட்டம் போன்றவை எடையை பராமரிக்க உதவலாம். பெண்களோடு, ஆண்களும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.
மன அழுத்தம்
மன அழுத்தம் உங்கள் சிகிச்சையில் தலையிடலாம். மேலும் IVF சிகிச்சையின் போது மன அழுத்தம் இருந்தால் அது சிகிச்சையை வெற்றி பெற செய்வதில் தடை ஏற்படும். மேலும் இதை குறைப்பது கடினமானதாக இருந்தாலும் கூட மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் தம்பதியர் இருவரும் இணைய வேண்டும்.
மனம், உடல் திட்டங்களில் பதிவு செய்தல், மன அழுத்தத்தை குறைத்தல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கர்ப்பத்தின் வெற்றியை சாத்தியமாக்கலாம்.
விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிப்பது நல்லது
விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த மல்டி வைட்டமின்களின் பயன்பாடு முக்கியம். ஆண்களும் மலட்டுத்தன்மை குறைபாடு வராமல் இருக்க மல்டி வைட்டமின்கள் எடுப்பது நல்லது. உடல் எடையை பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம். சரியான கவனிப்பின் கீழ் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க உதவும் மருந்துகளை ஆண்களும் உட்கொள்ள தொடங்கலாம்.
இது IVF விளைவுகளில் நன்மை பயக்கும். சில நேரங்களில் விந்தணுவிலிருந்து நேரடியாக விந்து வெளியேறும் அளவுக்கு இவை பலனளிக்கலாம். விந்து பகுப்பாய்வுகளில் எந்த வகையான அசாதாரணங்கள் இருந்தாலும் கருவுறாமை நிபுணரை சந்தித்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.
புகைப்பிடிக்கும் பழக்கம்
ஆண்கள் புகைப்பிடிக்கும் போது IVF வெற்றிக்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கலாம். ஆண்கள் கருத்தரிப்பு சிகிச்சைக்கு முயற்சிக்கும் போது புகைப்பிடிப்பதால் முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும் அதை நிறுத்துவதுதான் சிறந்த வழி.
விந்தணுக்களின் தரம் அதிகரிக்க மாத்திரைகள்
விந்தணுக்களின் தரம் மேலும் உறுதி செய்ய சில சப்ளிமெண்ட்கள் உதவுகிறது. மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார் அல்லது நீங்களே மருத்துவரிடம் கேட்டு அதற்கான மாத்திரைகளை எடுக்கலாம். இதற்கு மல்டிவைட்டமின்களும் உதவியாக இருக்கும். தம்பதியர் இருவருக்கும் கூட இவை தேவையாக இருக்கலாம்.
வைட்டமின் டி
போதுமான அளவு வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் கருவுறாமை கொண்டுள்ள தம்பதியரில் 40 சதவீதம் நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம். மேலும் இந்த குறைபாடு IVF உடன் மோசமான விளைவுகளை உண்டு செய்யலாம். கருவுற முயற்சிக்கும் தம்பதியர் மற்றும் கருவுறாமை நிலையில் உள்ளவர்கள் உடல் பரிசோதனையில் வைட்டமின் டி பரிசோதனை செய்வதும் நல்லது. வைட்டமின் டி குறைவாக இருந்தால் வைட்டமின் டி உணவுகள் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகள் எடுப்பது நல்லது.
சரியான மருத்துவரை அணுகவும்
சிறந்த இனப்பெருக்க உட்சுரப்பியல் நிபுணரை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களுக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் மருத்துவரிடம் ஒளிவு மறைவில்லாத உங்கள் வரலாறு முக்கியம். அப்போதுதான் சரியான காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
கருவுறாமைக்கு பரிசோதனைக்கு பிறகு உங்கள் மருத்துவர் IVF தீர்வு என்று சொன்னால் நீங்கள் உங்கள் சிகிச்சை காலத்தில் சில விஷயங்களில் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்வதும் பொறுமையோடு இருப்பதும் சிகிச்சையில் வெற்றி பெற உதவும். பல நேரங்களில் தம்பதியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட IVF சுழற்சிகள் இந்த சிகிச்சையில் தேவைப்படலாம். மேலும் முடிவுகள் இந்த சுழற்சியிலிருந்து கணிசமாக வேறுபடலாம்.
முதல் முறை வெற்றி கிடைக்கவில்லை என்றால் உங்கள் மருத்துவர் அடுத்த சுழற்சியில் மேம்படுத்த சிகிச்சை செய்யலாம். அதனால் பின்னடைவில் சோர்வடையாமல் இருங்கள். ஏனெனில் இவை எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் சில சமயங்களில் இது குறித்து அலட்டிகொள்ளாமல் இருப்பது உங்களை நீங்களே நிம்மதியாக வைத்திருக்க செய்யும். சிகிச்சையில் வெற்றி கிட்டாத போது உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். பொறுமையாக இருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
- IVF சிகிச்சை முறை.
- IUI சிகிச்சை முறை.
குழந்தையின்மைக்கு என்ன காரணம்?
ஆணுக்கும், பெண்ணுக்கும் 30 வயதை கடந்தவுடன் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை குறைந்துவிடுகிறது. இதற்கு காரணம் கருமுட்டை குறைந்துவருவதாலோ அல்லது உயிரணுக்கள் செயல்பாடு குறைவாக இருப்பதனால் இருக்கலாம்.

குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெண்கள் செய்ய வேண்டியவை?
மேலும் ஒரு பெண்ணுக்கு அவருடைய இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை நன்றாக இருக்கிறதா அல்லது கட்டிகள், சதை வளர்ச்சி ஏதும் இருக்கிறதா, பெலோப்பியன் குழாய்களில் அடைப்புகள் ஏதும் இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்ய வேண்டும்.
அடுத்து மிக முக்கியமான விஷயம் கருமுட்டையில் ஒவ்வொரு மாதமும் உருவாகும் கருமுட்டை அல்ட்ரா சவுண்ட் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் பரிசோதனை செய்யப்படும்.
IUI சிகிச்சை
ஆண்களுக்கு விந்தணுக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது, அவர்களுடைய விந்தணுக்களை எடுத்து அதில் தரமான உயிரணுக்களை பிரித்து எடுத்து அதனை ஒரு பெண்ணின் கருப்பையில் சேர்ப்பது தான் IUI சிகிச்சை முறை.
இதை யார் யாருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றால் 30-ல் இருந்து 35 வயதுக்குள் இருக்கும் தம்பதியினருக்கு இந்த சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும். இதற்கு ஒரு பெண்ணின் கருமுட்டையின் தரம் நன்றாக இருக்க வேண்டும், ஆணின் உயிரணுக்களின் தரமும் நன்றாக இருக்க வேண்டும்.
மேலும் முக்கியமாக பெண்ணுக்கு கருப்பை டியூப்களில் அடைப்பு எதுவும் இருக்கக்கூடாது. அதன்பிறகு கருப்பையில் உள்ள எண்டோமெண்ட்ரியம் அது தான் கரு பதியும் இடம் எனவே அது உறுதியாக இருக்க வேண்டும்.
இந்த சிகிச்சை முறையை 30-ல் இருந்து 35 வயதிற்குள் உள்ளவர்களுக்கு மட்டும் குறைந்தது 4 முறை மட்டுமே அளிக்கப்படுகிறது.
40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த சிகிச்சை பலன் அளிக்குமா என்றால், சற்று சிரமம் தான். 40-ல் இருந்து 45 வயதிற்குள்ளாக ஒரு பெண்ணின் கருமுட்டையின் வளர்ச்சி குறையத் தொடங்குவதால் இந்த சிகிச்சை பலன் அளிக்காது.

IVF சிகிச்சை என்றால் என்ன?
இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத தம்பதிகள் அல்லது கர்ப்பம் நிற்காத பெண்களுக்கு, IVF சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இந்த செயல்முறை பாதுகாப்பானதாகவும் வெற்றிகரமாகவும் கருதப்படுகிறது. இதனாலேயே இந்த சிகிச்சை இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது.
இதற்கு முதலில், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட கரு எந்த தரத்தில் உள்ளது என்று பார்க்கப்படுகிறது. இரண்டாவது மிக முக்கியமான விஷயம் பெண்ணின் வயது. இந்த இரண்டு விஷயங்களும் சரியானதாக இருந்தால், IVF -ன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த IVF சிகிச்சைக்கு முன், பெண்ணின் கருப்பையின் திறன் மற்றும் ஆணின் விந்தணுவின் தரம் ஆகியவை ஆராயப்படுகின்றன. அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு IVF சிகிச்சை அளிக்கப்படுகிறது.
IVF சிகிச்சையில் தம்பதியினர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமன விஷயம் என்னவென்றால் இதில் 2 பகுதி உள்ளது. முதல் பகுதியில் பெண்ணிடம் இருந்து கருமுட்டை எடுப்பது, தரமான கருமுட்டைகளை எடுத்து ஆணின் உயிரணுக்களுடன் சேர்த்து கருவை வளர வைப்பது எல்லாமே லேப்பில் நடக்கும், இரண்டாம் பகுதி எம்ரியோ டிரான்பர் அதாவது உருவான கருவிலேயே நல்ல தரமான கருவை எடுத்து கருப்பையில் சேர்ப்பது. இது தான் IVF சிகிச்சை முறை ஆகும்.