என் மலர்
நீங்கள் தேடியது "அப்டேட்"
- ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.
- லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்
ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.
ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.

லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர்.

அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். சோனியா அகர்வாலின் கணவராக டாம் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிறது.

அமன் ரஃபி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி. ஷமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். வைசாக் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை முரளி அப்பாதத்,ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன்.
இந்தப் படத்தின் முன்னோட்டமாக டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.
- படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.
- அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர்.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த அப்டேட்டில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியது. படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. பல நட்சத்திர நடிகர் பட்டாளம் நடித்ஹ்டிருக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்தில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார்.
- மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீடு நடைபெற உள்ளது.
நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

கோட் படம் சூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரோடக்சன் வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார் அதில் 'கோட் போஸ்ட் ப்ரோடக்ஷன் பிகைன்ஸ்' என்று வைத்து பகிர்ந்துள்ளார். இந்த பதிவை தொடர்ந்து செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.
மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதிக பொருட்செலவில் இப்படம் உருவாக்கி வருகிறது.
- இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.
- பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.
இங்கிலாந்தில் 1919 முதலாம் உலகப்போர் உலகப் போர் முடிந்த சமயத்தில் பீக்கி பிளைன்டர்ஸ் என்ற கிரைம் கேங் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இங்கிலாந்து நிழலுலகில் ஆதிக்கம் செலுத்தியது. பிரிம்மிங்கம் நகரில் குடும்பமாக இயங்கிய இந்த கேங் இங்கிலாந்து முழுவதும் புகழ்பெற்று விளங்கியது. இவர்களின் கதையை மையமாக வைத்து பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.

பீக்கி பிளைன்டர்ஸின் தலைவராக விளங்கிய டாமி செல்பி கதாபாத்திரத்தில் பிரிட்டிஷ் நடிகர் சிலியின் மர்பி கதாபாத்திரத்தோடு ஒன்றும் வகையில் தத்ரூபமாக நடித்திருந்தார். பீக்கி பிளைன்டர்ஸ் வெப் சீரிஸ் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தியே உருவாக்கி வைத்திருக்கிறது. இந்நிலையில் பீக்கி பிளைண்டர்ஸ் திரைப்படப்பாக தயாராக உள்ளதகாக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.
சீரிஸை இயக்கிய டாம் ஹார்ப்பரும், ஸ்டீவன் கிநைட்டும் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளனர். 6 சீசன்களாக உள்ள கதை ஒரே படத்தில் எப்படி கூறப்பட உள்ளது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

இதற்கிடையில் உலகப் புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் திரைப்படத்தில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய மக்கள் கொத்துக்கொத்தாக சாக காரணமான அணுகுண்டைக் கண்டுபித்த ஓப்பன்ஹைமரின் கதாபாத்திரத்தினுடைய அறச் சிக்கலை நேர்த்தியாக திரையில் வரித்துக்காட்டி சிலியன் மர்பி ஆஸ்கார் வென்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
- 'தேவரா -1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார்
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் 'ஆச்சார்யா' படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.
'தேவரா -1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சாயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தாய்லாந்தில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம்பெறும் மெலோடி பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக வரும் ஜூன் 17-ம் தேதி படக்குழு தாய்லாந்து செல்கின்றனர். ஜூலை மாதத்திற்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்து பின்னணி பணிகளை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளனர். இப்படம் இரு பாகங்களாக வெளிவரவுள்ளது.
இப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் ஆனால் தற்பொழுது இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் வசந்த குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த மௌனகுரு திரைப்படம் பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியது.
- கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'வம்சம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால்பதித்தவர் நடிகர் அருள்நிதி. தொடர்ந்து இயக்குனர் வசந்த குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த மௌனகுரு திரைப்படம் பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியது.

தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதியின் நடிப்பில் ஹாரர் படமான டிமான்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவனம், தகராறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கே- 13 உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.
இந்நிலையில் அருள்நிதி புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான என்னங்க சார் உங்க சட்டம் என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளாராம்.

இந்த திரைப்படத்தையும் பேஷன் ஸ்டுடியோஸ் இயக்கவுள்ளது. இந்த புதிய படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதிய பிரச்னைகளைக் குறித்து என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் பிரபு ஜெயராம் பேசியிருந்தைப்போல இதுவும் ஒரு சமூக படமாக இருக்குமோ என்ற யூகங்களும் எழத்தொடங்கியுள்ளன .

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீ போல பரவின.
அண்மையில், விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது என்று நடிகர் அர்ஜுன் அப்டேட் கொடுத்தார்,
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்துள்ளார்.
தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அஜித் கருப்பு நிற கூலர்ஸுடன் . பிளாக் அன் பிளாக் ஜெர்கின் போட்ட டிரெஸ்ஸில் ஒரு தனி சாலையில் பாலைவனம் அருகில் கையில் ஒரு பையுடன் நடந்து வருமாறு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் தலைப்பிற்கு கீழ் திருவினையாக்கும் என பதிவிட்டுள்ளனர்.
இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது
- இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மைக்ரோசாப்ட் வின்டோஸ் கணினி திரைகளில் நேற்று தோன்றிய புளூ ஸ்க்ரீன் ஆப் டெத் Blue Screen of Death (BSOD) குளறுபடி உலகம் முழுவதிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மைகோரசாப்டை ஐ.டி நிறுவனங்கள், விமான நிலையங்கள், வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியது. இதற்கு முக்கிய காரணம் CrowdStrike எனப்படும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் மைக்ரோசாப்டில் செய்ய முயன்ற அப்டேட் ஆகும்.

அமெரிக்கவைத் தலைமையிடமாக கொண்டு 2011 முதல் இயங்கி வரும் CrowdStrike சைபர் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமானது முன்னணி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், வங்கிகள், விமான நிலையங்களின் சைபர் ஸ்பேஸ் பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனம் ஆகும். சுருக்கமாக தனிநபர்கள் காஸ்பர்ஸ்கை, அவாஸ்ட் உள்ளிட்ட ஆட்டிவைரஸ்களை தங்களின் கணினியின் பாதுகாப்புக்காக நிறுவுவது போல், பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் CrowdStrike மென்பொருளை உபயோகித்து வருகிறது.
CrowdStrike மென்பொருளை கணினியில் இன்ஸ்ட்டால் செய்ததும் அது ஆட்டோமேட்டிக்காக வைரஸ் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளையும், ஆபத்துகளையும் ஸ்கேன் செய்யும். கணினியில் உள்ள மிகவும் நுட்பமான தகவல்களையும் அணுகுவதால், இந்த மென்பொருளில் ஏற்படும் சின்ன பிரச்சனையும் கணினிக்கும் எளிதாக பரவும். சோனி நிறுவனத்தை வட கோரிய ஹேக்கர்கள் ப்ரீச் செய்த விவகாரத்தை ஆராய்ச்சி செய்தது, அமெரிக்க ஜனநாயக கட்சியின் செர்வர்கள் ஹேக் செய்யப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட ரஷிய சைபர் நடவடிக்கைகளை ஆராய்ந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களிலும் CrowdStrike பணியாற்றியுள்ளது.

இந்நிலையில் தற்போது மைகோரஸாப்ட் விண்டோஸில் நடந்துள்ள இந்த சைபர் குளறுபடியாந்து தங்களின் நிறுவனம் மென்பொருளில் புதிதாக அறிமுகப்பபடுத்திய சாப்ட்வேர் அப்டேட் குளறுபடியானதால் ஏற்பட்டது என்று விளக்கம் CrowdStrike நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் manual ஆக மென்பொருளை ரீசெட் செய்து வருகிறோம் என்றும் அந்நிறுவனத்தின் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பரவலாக கூறப்படுவது போல் இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு வின்டோஸ் கணினிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் Mac, Linux உள்ளிட்டவற்றில் இயங்கும் கணினிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
- திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள `அந்தகன்' திரைப்படத்தின் குழுவிற்கு ஜூலை 24-ம் தேதி மிக பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது என்று படக்குழு கூறியுள்ளது. திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
24. 7. 24
— Prashanth (@actorprashanth) July 20, 2024
A big surprise from the team of #AndhaganThePianist
Coming soon...@actorthiagaraja @actorprashanth #Karthik @SimranbaggaOffc @PriyaAnand @thondankani @iYogiBabu #Andhagan#Andhagan #AndhaganThePianist #TopStarPrashanth #AndhaganfromAug
#RaviYadhav… pic.twitter.com/lwl3hHOK7k
- நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.
இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். இதுவரை நாம் பாத்திராத கதாப்பாத்திரத்தில் லுக்கில் படத்தின் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.
படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5.32 மணிக்கு வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். விடாமுயற்சி படக்குழு அவரது 32 வருட திரைப்பணிக் குறித்து ஸ்பெஷல் போஸ்டர் விட்ட நிலையில். இன்று அடுத்து அஜித் படத்தின் மற்றொரு அப்டேட் வருவதால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாடத்துடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.