search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரவாண்டி இடைத்தேர்தல்"

    • பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப்பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

    மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், தி.மு.க.வினர் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது?

    பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி, இடைத்தேர்தலை சந்தித்தது. தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சாா்பில் டாக்டா் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணித்ததால், இங்கு மும்முனை போட்டி நிலவியது.

    இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இதில் 82.47 சதவீதம் வாக்குகள் பதிவாயின. அதாவது மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில், 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர்.

    இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் தபால் ஓட்டுகள் தொடங்கி இறுதி சுற்று முடிவு வெளியாகும் வரைக்கும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவின் கைதான் ஓங்கி இருந்தது.

    இறுதி சுற்றின் முடிவில் தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார்.

    இதன் மூலம் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். அப்போது அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தி மு க நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதையடுத்து, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா இன்று பொறுப்பேற்றுள்ளார். தலைமை செயலகத்தில் அன்னியூர் சிவாவுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி, இடைத்தேர்தலை சந்தித்தது. தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சாா்பில் டாக்டா் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணித்ததால், இங்கு மும்முனை போட்டி நிலவியது.

    இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இதில் 82.47 சதவீதம் வாக்குகள் பதிவாயின. அதாவது மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில், 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர்.

    இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் தபால் ஓட்டுகள் தொடங்கி இறுதி சுற்று முடிவு வெளியாகும் வரைக்கும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவின் கைதான் ஓங்கி இருந்தது.

    இறுதி சுற்றின் முடிவில் தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார்.

    இதன் மூலம் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். அப்போது அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தி மு க நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதையடுத்து, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா நாளை பதவியேற்கிறார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    • திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார்.
    • அமைச்சர்களும் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.

    திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு 10,602 ஓட்டுகளும் கிடைத்தன.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களும் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

    • ஜெயலலிதா இருந்த போது, அதிமுகவினர் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள்.
    • சுயமரியாதையும், கௌரவமான வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,

    வேட்பாளர் அன்புமணியை எங்களுக்கு தந்த நிறுவனர் ராமதாஸ்க்கும், எங்களுக்காக பிரசாரம் செய்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள், குறிப்பாக நண்பர் அண்ணாமலைக்கும், முன்னால் முதல்வர் ஓபிஎஸ்க்கும், டிடிவி தினகரனுக்கும், ஜி.கே வாசன், பாரிவேந்தர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விக்கிரவாண்டி தொகுதியில் நேர்மையான முறையில் பாமக வாக்குகள் பெற்றுள்ளது.

    ரூ. 250 கோடி செலவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குவிந்து 3 தவணையாக பணம் கொடுத்தனர். அரிசி, பருப்பு, பணம் மூக்குதி என பலவற்றை கொடுத்தார்கள்.

    தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதா? அவர்களுக்கு எதற்கு சம்பளம்? பணம் பொருள் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவில்லை.

    திமுக வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். தேர்தல் ஆணைய தலைவர் அந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல.

    மக்களை குறை கூறமாட்டேன். அவர்களுக்கு 500 ரூபாய் பெரிய பணம். தனிநபர் வருமானத்தில் கடைசியில் இருப்பது விழுப்புரம் மாவட்டம் தான்.

    பணம், பொருள் என ஒரு ஓட்டுக்கு ரூ. 10 ஆயிரம் திமுக செலவு செய்துள்ளது. மக்களை இப்படி வைத்திருந்தால்தான் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முடியும் என நினைக்கிறார்கள். விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை. சுயமரியாதையும், கௌரவமான வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம்.

    ஜெயலலிதா இருந்த போது, அதிமுகவினர் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள். திமுகவை ஜென்ம விரோதியாக அதிமுகவினர் கருதினர். ஆனால் தற்போது அதிமுகவிர் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். இடைத்தேர்தலில் முடிவு பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, மது, பிரியாணி வழங்கப்பட்டது.
    • அடக்குமுறைகளை மீறி பாமக வேட்பாளர் 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,

    * முதல்வர் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125 எம்.எல்.ஏக்களும் விக்ரவாண்டியில முகாமிட்டிருந்து பணத்தை வெள்ளமாக பாயவிட்டனர்.

    * தினமும் டோக்கன் வழங்கி ரூ. 300 முதல் ரூ. 500 வரை பணம் வாரி இறைக்கப்பட்டது.

    * அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, மது, பிரியாணி வழங்கப்பட்டது.

    * ஒரு வாக்குக்கு ரூ. 10000 வரை திமுக வழங்கியுள்ளது. திமுகவின் ரூ. 250 கோடிக்கு கிடைத்த வெற்றி.

    * அடக்குமுறைகளை மீறி பாமக வேட்பாளர் 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

    2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 32ஆயிரம் வாக்குகளைவிட, தற்போது 75 சதவீதம் வாக்கு அதிகம் பெற்றுள்ளோம்.

    உண்மையான வெற்றி பாமகவுக்கு கிடைத்துள்ளது. பாமகவுக்காக பிரசாரம் மேற்கொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் வெற்றி தற்காலிகமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    • திமுகவிற்கு தோல்வி பயத்தை பாமக ஏற்படுத்தியது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் பாமகவிற்கு வந்துள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக தோல்வியடைந்தது குறித்து வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுத்தது. பரிசுப்பொருட்கள் மூலமாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

    * திமுகவிற்கு தோல்வி பயத்தை பாமக ஏற்படுத்தியது.

    * இடைத்தேர்தலில் தோல்வி பயத்தை திமுகவிற்கு ஏற்படுத்த முடிந்தது என்பதே மனநிறைவு.

    * அப்பாவி மக்களிடம் ரூ.1000, ரூ.500 காட்டி அவர்களை ஏமாற்றி திமுக வாக்கை பெற்றுள்ளது. இதற்காக பெருமைப்படக்கூடாது.

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் பாமகவிற்கு வந்துள்ளது என்று கூறினார்.

    • இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது.
    • மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிந்து நாங்கள் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க. அரசுக்கு, இந்தியாவிலேயே இதுவரை எந்த ஆட்சிக்கும் இடைத்தேர்தல் நேரத்தில் வராத சவால்கள் வந்தது.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு மிக அருகாமையில் இருக்கிற கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. அதை பா.ஜ.க.வினர் பூதாகரமாக்கி பிரளயமே ஏற்பட்டு விட்டதை போல, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடைபெற்றதை மறைத்து விட்டு இங்கு மிகப்பெரிய நாடகத்தை நடத்தி தி.மு.க.வின் வெற்றியை குலைத்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டார்கள்.

    தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கொலை நடந்தது. அதற்கு அரசியல் சாயம் பூசி அதையும் இந்த தேர்தலில் மிகப்பெரிய பிரச்சனையாக்க முயற்சித்தார்கள்.

    இந்த 2 மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு காலம் நேர்மையாக ஆட்சி நடத்தியதை மக்கள் ஏற்றுக்கொண்டு மக்களாகிய நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு தி.மு.க. வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது. இந்த சவால்களுக்கு மத்தியில் தி.மு.க. தொண்டர்கள் கொஞ்சமும் சலிப்பில்லாமல் உறுதியோடு பணியாற்றியுள்ளனர். ஜாதியை தூண்டி விட்டு பேசியவர்கள் மத்தியில் கரியை பூசி இருக்கிறார்கள். மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

    இந்த தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு பகலாக உழைத்து வாக்கு சேகரித்தார். அவர் அரசியலில் கால் வைத்த பிறகு அரசியலில் எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது. இதன் மூலம் இன்னொரு வெற்றியும் தி.மு.க.வுக்கு கிடைத்திருகிறது. இந்த ஒரு மாதமாக பல தரப்பினரும் சேர்ந்து மனகுடைச்சல் கொடுத்தார்கள். அவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு உழைத்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
    • பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

    இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.

    இந்நிலையில் 20 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டநிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.

    எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

    • முதல் முறையாக கூட்டணி கட்சிகள் இணைந்து களபணியாற்றி இருக்கிறார்கள்.
    • அரசின் அதிகார பலம், பணபலத்தை தாண்டி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு கருத்து தெரிவிப்பேன். தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியை சார்ந்தே எப்போதும் செல்கிறது. அதன் பிறகு ஒரு ஆண்டுக்கு பிறகு வரும் தேர்தலில் முழுமையாக முடிவுகள் மாறி இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம்.

    இந்த முறையும் அப்படித்தான் பார்க்கிறோம். இடைத்தேர்தல் முடிவுகள்தான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால் அது தவறானது. இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை. இப்போதும் அப்படி இருக்க போவதில்லை.

    இருந்தாலும் மக்களின் முடிவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த மாற்று கருத்து கூறினாலும் மக்களின் வாக்கு வாக்குதான். முதல் முறையாக கூட்டணி கட்சிகள் இணைந்து களபணியாற்றி இருக்கிறார்கள்.

    அரசின் அதிகார பலம், பணபலத்தை தாண்டி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். வருகிற காலம் கண்டிப்பாக மாறும். 2026-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி பலத்தை இழக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தது.
    • வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். இது 82.47 சதவீத வாக்கு பதிவாகும்.

    ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதையொட்டி காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    அதுபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகளும் கொண்டு வரப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதற்காக அங்குள்ள தனி அறையில் 2 மேஜைகள் போடப்பட்டு அங்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது சில வாக்குச் சீட்டுகளில் கூடுதல் மை கொட்டி இருந்தது.

    இதனால் அந்த வாக்குச் சீட்டுகளை செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு பா.ம.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சர்ச்சை நிலவியது.

    அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணும் பணியில் 14 கிராம உதவியாளர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 150 பேர் ஈடுபட்டனர்.

    வாக்கு எண்ணிக்கையை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஏதுவாக, வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 28 இன்ஸ்பெக்டர்கள், 86 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 1,195 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


    வாக்கு எண்ணிக்கையை 20 சுற்றுகளாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 9.30 மணி அளவில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 8,565, பாம.க. வேட்பாளர் சி.அன்புமணி 3,906, நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 303 வாக்குகள் பெற்று இருந்தனர். 2-வது சுற்றில் தி.மு.க. 12,002, பாம.க. 5904, நாம் தமிழர் 819 பெற்றனர்.

    2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 6,524 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். 3-வது சுற்றில் தி.மு.க. 18,057, பா.ம.க. 7,323, நாம் தமிழர் 1,383 வாக்குகள் பெற்றன. 4-வது சுற்றில் தி.மு.க. 24,169 பா.ம.க. 9,131, நாம் தமிழர் 1,500 வாக்குகள் பெற்றன.

    4-வது சுற்று முடிவில் தி.மு.க. 15038 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை யில் இருந்தது. 10.30 மணி அளவில் 5-வது சுற்று முடிவுகள் வெளியானது. அப்போது தி.மு.க. 24,171, பா.ம.க. 8,825, நாம் தமிழர் 1,763 வாக்குகள் பெற்று இருந்தன.

    இதனால் 5-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்ப ளர் அன்னியூர் சிவா 15,346 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 6-வது சுற்று முடிவில் தி.மு.க. 31,151, பா.ம.க. 11,483, நாம் தமிழர் கட்சி 2,275 வாக்குகள் பெற்று இருந்தன. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 19,668 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

    இதேபோல் தொடர்ந்து ஒவ்வொரு சுற்று முடிவிலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். நண்பகல் 12.30 மணி நிலவரப்படி தி.மு.க. 83,431, பா.ம.க. 36,341, நாம் தமிழர் 6,767 வாக்குகள் பெற்று இருந்தன.

    இதன் மூலம் தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவது தொடக்கத்திலேயே உறுதியானது. இதனால் தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இதனிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில், சென்னை அண்ணாஅறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    • இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.
    • வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

    இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைத்து, அறையை பூட்டி சீல் வைத்தார்.

    இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×