என் மலர்
நீங்கள் தேடியது "Dhruv Vikram"
- இந்த படம் குறித்த அப்டேட்டை நடிகர் விக்ரம் தன்னுடைய 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.
- இந்த படத்துக்கு தற்போது 'பைசன்' (Bison) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019- ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 'மகான்' படத்தில் தந்தையுடன் நடித்தார். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இந்நிலையில் துருவ்விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார்.
இந்த படம் குறித்த ஒரு அப்டேட்டை நடிகர் விக்ரம் தன்னுடைய 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.

அதில், வருகிறான் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தார். இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு இந்த படத்தின் 'டைட்டில்' இன்று வெளியிடப்பட்டது.இந்த படத்துக்கு தற்போது 'பைசன்' (Bison) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.இதனை பட தயாரிப்பு குழு அறிவித்தது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியானது மகான் திரைப்படம்.
- இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியானது மகான் திரைப்படம். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இப்படம் அப்பாவும் மகனும் கொள்கை ரீதியாக இருவேறு கோட்பாட்டில் இருப்பார்கள். மகன் ஒரு காவல் அதிகாரியாகவும் அப்பா ஒரு சமூகத்திற்கு தீங்கு விளைவிற்கும் செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இப்படத்தின் மையக்கதையாகும்.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 3 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படத்தின் டெலிடட் காட்சியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் சீயான் விக்ரம் அவருக்கு பிடிக்காத நபர்களையும், தன் முன்னால் காதலியின் கணவனையும் அழைத்து பிரம்பால் அடிக்கும் காட்சி நகைச்சுவையாக இடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.