search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரஜ்வால் ரேவண்ணா"

    • பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பிரஜ்வால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், ஹசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வால் மீது எழுந்துள்ள செக்ஸ் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.

    பிரஜ்வால் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

    மேலும் அவர் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 ஆயிரம் வீடியோ தொகுப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிரஜ்வால் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் புகார்கள் எழுந்தன. தந்தையும், மகனும் பல பெண்களின் கற்பை சூறையாடி இருப்பதாக கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் பிரஜ்வால் வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

    அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் மூலம் புளுகார்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய கர்நாடகா சிறப்பு போலீஸ் படை வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே கற்பழிப்பு புகாரில் சிக்கிய தேவேகவுடா மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் பெங்களூர் விக்டோரியா சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரஜ்வால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய பட்டியலை கர்நாடகா போலீசார் தயாரித்து உள்ளனர். அந்த பெண்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

     இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி யும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரஜ்வால் செய்திருப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. தவறு செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். ஆனால் ரேவண்ணா மீதும், பிரஜ்வால் மீதும் திட்டமிட்டு சதி செய்து வீடியோக்களை பரவச் செய்துள்ளனர்.

    துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இந்த சதி திட்டத்தை மிகவும் சமயோசிதமாக அரங்கேற்றி உள்ளார். பிரஜ்வால் தொடர்பான தகவல்களை திரட்டி அவர் ஆபாச காட்சிகள் கொண்டதாக தயாரித்துள்ளார். சுமார் 25 ஆயிரம் பென்டிரைவ்கள் தயாரித்து அவை அனைத்தையும் ஹசன் பாராளுமன்ற தொகுதி முழுக்க வினி யோகம் செய்துள்ளார்.

    பிரஜ்வாலை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமின்றி மோடியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று சதித்திட்டத்துடன் இது அரங்கேற்றப்பட்டுள்ளது. 25 ஆயிரம் பென்டிரைவ்களை மாநில போலீசார்தான் வினியோகம் செய்து இருக்கின்றனர்.

    இவை அனைத்துக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையையும் கர்நாடகா அரசு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.
    • தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு.

    பெங்களூரு:

    பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா சார்பில் அவரது வக்கீல் பவன்சாகர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி விசாரணையை இன்று ஒத்திவைத்தார். எனவே இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.

    பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பான வழக்கை விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ஆபாசமான வீடியோக்கள், புடைப்படங்களை பகிர்வது மட்டுமல்ல, அவற்றை வைத்திருப்பதும் குற்றம். தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்தி ருந்தால் கண்டுபிடிப்பது எளிது. எனவே இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புடைப்படங்களை யாராவது வைத்திருந்தால், அவற்றை அழித்து விடுவதன் மூலம் சட்ட நடவடிக்கைகளில் இருந்த தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் வெளியே வரத் தொடங்கியது. இதையடுத்து ஹாசன் தொகுதியில் கடந்த 26-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவர்கள் ஆபாச படத்தில் இருந்த பெண்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பிரஜ்வாலுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

    மேலும் கர்நாடக சிறப்புக் குழுவினர் புளூ கார்னர் நோட்டீஸ் கொடுக்கவும் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள பிரஜ்வாலை அங்குள்ள போலீசார் மூலம் கைது செய்து அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.

    ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட பிரஜ்வால் துபாயில் இருந்து கர்நாடகம் திரும்புவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    துபாயில் இருந்து வரும் பிரஜ்வாலை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    போலீசார் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதால் பிரஜ்வால் ரேவண்ணா துபாயில் இருந்து வேறு மாநிலத்திற்கு வந்து அங்கிருந்து ரெயில் மூலம் கர்நாடகா வரலாம் என்ற தகவலும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதையடுத்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் பிரஜ்வாலை கைது செய்ய தயாராக உள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் கூறும்போது, பிரஜ்வால் வெளிநாட்டில் இருந்தபடி கர்நாடகாவைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் பிரஜ்வாலை கண்டுபிடித்து கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது என்று கூறினர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஹாசன் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதுபற்றிய தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே இதுதொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 6360938947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×