search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன்பிர் கபூர்"

    • ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகிறது.
    • தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகிறது.

    ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை பிரபல இயக்குனரான நிதேஷ் திவாரி இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகிறது.

    இதை முதலில் அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ், அல்லு அரவிந்த் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக மூவரும் பிரிந்தனர். இதனால் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து இதைத் தயாரிக்கிறது.

    இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது, 2 பாகங்களாகத் தயாராகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ரன்பிர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் புகைப்படங்கள் சில வாரங்களுக்கு முன் வைரலானது.

    ஆனால் தற்பொழுது வந்த தகவலின்படி இந்தப் படத்துக்கான காப்புரிமை தொடர்பாக, தயாரிப்பாளர் மது மண்டேனா, நமித் மல்ஹோத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். படத்தின் ஸ்கிரிப்ட் உரிமை தங்களிடம் இருப்பதாகவும், வேறு யாரும் அதைப் பயன்படுத்தினால், அது காப்புரிமை மீறல் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காப்புரிமை பிரச்சினை பேசி தீர்க்கப்பட்ட பின் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் மெட் காலா 2024 நிகழ்ச்சி நடந்தது.
    • மெட் காலா உலகின் மிகவும் மதிப்புமிக்க, கவர்ச்சியான பேஷன் நிகழ்வு ஆகும்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் மெட் காலா 2024 நிகழ்ச்சி நடந்தது. இது மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட்ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்டிடியூட் நலனுக்காக நடத்தப்படும் வருடாந்திர நிதி திரட்டும் விழா என்பது குறிப்பிடத்தக்கது.

    மெட் காலா உலகின் மிகவும் மதிப்புமிக்க, கவர்ச்சியான பேஷன் நிகழ்வு ஆகும். இதில் பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஜெண்டையா, ஜெனிபர் லோபஸ், நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் உள்ளிட்டோர் கலக்கலான உடையில் கலந்து கொண்டனர்.

    இந்திய திரை உலக பிரபலங்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரபல இந்தி நடிகை ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் ஆலியாபட் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண் கவர் புடவையை அணிந்து வலம் வந்தார்.

    அவரது தோற்றம் பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது.

    இந்த சேலை 163 கலைஞர்களால் 1905 மணி நேரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் நடந்த நேர்காணலில் புடவை பற்றி ஆலியா பட் கூறியதாவது:-உலகில் புடவையை விட சிறந்த ஆடை எதுவும் இல்லை.இந்த தலைச்சிறந்த படைப்புக்கு பின்னால் இருக்கும் கலை–ஞர்களுக்கு எனது பாராட்டுக்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×