search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்கியூப் மசாஜ்"

    • கொலாஜன் செல்களை உயிர்பிக்க ஆவிபிடிக்க வேண்டும்.
    • தக்காளி ஆண்டி ஏஜிங் செல்களை உயிர்பிக்க உதவுகிறது.

    முகத்தில் வரும் புள்ளிகளுக்கு Acne என்று பெயர். pimples என்றும் அழைப்பார்கள். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது.

    இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது. முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய் பசையும் சேர்ந்து அடைபட்டு போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம்.

    பருக்கள் வந்தால் அதை தொடாதீர்கள், உடைக்காதீர்கள், கிழிக்காதீர்கள் அப்படி செய்தால் தோள்களில் உள்ள கொலாஜன் என்னும் செல்கள் இறந்து பெரிய குழி மற்றும் தழும்பாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.

    கொலாஜன் செல்களை உயிர்பிக்க ஆவிபிடிக்க வேண்டும். பின்னர் முகத்தை 5 நிமிடம் கைகளால் நன்றாக மசாஜ் செய்து லகுவாக்க வேண்டும்.

    தக்காளி, முல்தானிமட்டி, ரோஸ்வாட்டர் ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து ஒன்றாக அரைத்து குளைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இதனைத் தொடர்ந்து 30 நாட்கள் முகத்தில் தடவி வரும்போது பருக்கள், தழும்புகள் மறைவதைக் காணலாம்.

    தக்காளியில் உள்ள ஆண்டிஆக்ஸிடெண்ட் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆண்டி ஏஜிங் செல்களை உயிர்பிக்க உதவுகிறது.

    தினமும் 4 லிட்டர் சீரக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் ரத்த சுத்திகரிப்புக்காக தினமும் ஏபிசி ஜூஸ் குடிக்க வேண்டும். மேலும் ஐஸ் கியூப்களை கொண்டு தினமும் இரண்டு நிமிடம் மசாஜ் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது முகத்துக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.

    வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.

    பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்கு பதில், தினசரி குளிக்கப் பயன்படுத்தினால் பருக்கள் மறைந்து முகம் பொலிவுபெறும்.

    முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.

    ×