என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு வைத்தியமுறை"

    • கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது.
    • வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேல் தடவி வரலாம்.

    கண்களைச் சுற்றி கருவளையங்கள் யாருக்கும், எந்த வயதிலும் வரலாம். இதற்கு காரணம், வயது முதிர்வு, பரம்பரை, சில பொருட்களுக்கு ஒவ்வாமை, சரியான தூக்கமின்மை, சருமத்தில் மெலனின் அதிகமாக இருப்பது, ரத்தசோகை, சிகரெட், மது பழக்கம், மன உளைச்சல், அடிக்கடி ஹேர்டை பயன்படுத்துவது போன்றவற்றால் கருவளையம் ஏற்படும்.

    இரண்டு கண்களுக்கும் கீழ் கருமை வந்தால் பயப்படத் தேவையில்லை. சில வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள். அவை பலன் அளிக்காவிட்டால் சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தியுங்கள். ஆனால் ஒரு கண்ணுக்கு கீழே மட்டும் கருமை வந்தால் உடனடியாக சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள்.

    கருமையைப் போக்க சில வழிமுறைகள்:

    1) கண்களில் கருமை நிறமிருக்கும் இடங்களில் குளிர்ந்த நீரில் நனைத்த துணியை ஒற்றி எடுங்கள் 2) தூங்கும்போது தலையை சற்று தூக்கி வைத்துப்படுங்கள். இதனால் கண்ணின் கீழ் இமை வீங்குவது குறையும்

    3) போதுமான நேரம் நன்றாகத் தூங்குங்கள்

    4) மது, சிகரெட் பழக்கத்தை நிறுத்தவும்

    5) சூரிய ஒளியில் வேலை பார்க்கும்போது புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்து கொள்ளுங்கள். குளுமையை உண்டாக்கும் கிரீம்களைத் தடவிக் கொள்ளுங்கள்

    6) வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேலே தடவி ஒத்தடம் இடுங்கள்

    7) ஆரோக்கியமான, சத்தான உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது. எனவே கவலைப்படாதீர்கள். வீட்டு வைத்தியம் பலன் தராவிட்டால் உடனே சருமநோய் சிகிச்சை நிபுணரை சந்திப்பது சிறந்தது.

    • உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை நீக்கவும் உதவும்.
    • ரோஸ் வாட்டர் கருவளையங்களை நீக்க பெரிதும் உதவுகிறது.

    டார்க் சர்க்கிள் பிரச்சனை தற்போதுள்ள நாட்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் திரையின் முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது, தூக்கமின்மை போன்றவை. இது தவிர, பல காரணங்களால் கருவளையம் பிரச்சனை தொடங்குகிறது. உண்மையில், மக்கள் கருவளையங்களை மறைக்க பல மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

    கன்சீலர் முதல் மேக்கப் வரை, இந்த விஷயங்கள் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை மறைக்க உதவினாலும், அது நிரந்தரமான சிகிச்சையல்ல. வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டே கருவளையத்தை அகற்றலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம். அந்த பொருட்கள் என்னவென்று இங்கே விரிவாக காண்போம்.

    கருவளையம் ஏற்பட காரணம்:

    * போதுமான தூக்கமின்மை

    * தவறான உணவுப் பழக்கம்

    * ஒழுங்கற்ற வழக்கம்

    * இரவில் தாமதமாக திரைகளைப் பார்ப்பது

    * சோர்வு

    * மன அழுத்தம்

    * உலர் கண்கள்

    * கண் ஒவ்வாமை

    * நீரிழப்பு

    * உடலில் நீர் பற்றாக்குறை

    * சூரிய ஒளி மற்றும் மாசுபாடு போன்றவற்றின் நீண்டகால வெளிப்பாடு


    ரோஸ் வாட்டர் மற்றும் பால்:

    பால் மற்றும் ரோஸ் வாட்டர் கருவளையங்களை நீக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து பருத்தி பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் வைக்கவும். அதன் பிறகு காட்டன் பேடை அகற்றி, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவவும்.


    தேன், பால் மற்றும் எலுமிச்சை:

    தேன், பால் மற்றும் எலுமிச்சை ஆகியவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் பாலில் அரை ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையங்களை போக்கலாம்.


    உருளைக்கிழங்கு சாறு:

    உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை நீக்கவும் உதவும். இதற்கு முதலில் உருளைக்கிழங்கை அரைக்கவும். அதன்பிறகு, அதன்சாறு எடுத்து, பஞ்சில் தோய்த்து கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் விட்டு விடுங்கள். அதன் பிறகு கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


    தக்காளி

    தக்காளி ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க, முதலில் 2 ஸ்பூன் தக்காளி சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களின் கீழ் 10 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனை நீங்கும்.


    வெள்ளரிக்காய்

    இதற்கு முதலில் வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்க வேண்டும். அதன் பிறகு, 10 நிமிடங்கள் கண்களில் வைத்திருக்க வேண்டும். இதனால் கருவளையம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

    ×