என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மதுபோதை"

    • மதுபோதையில் உள்ளவர் மீது வாகன ஓட்டிகள் மோதிவிடாமல் தடுமாறி சென்று கொண்டிருந்தனர்.
    • வாலிபர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் மதுபான கடை ஒன்று உள்ளது. அந்த மதுபான கடைக்கு வாலிபர் ஒருவர் சென்று மது அருந்தி உள்ளர்.

    பின்னர் மது அருந்திய வாலிபர் மதுபோதை தலைக்கேறியதில் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் குறுக்கே சென்று வாகனங்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

    இவரது இச்செயலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மதுபோதையில் உள்ளவர் மீது வாகன ஓட்டிகள் மோதிவிடாமல் தடுமாறி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு நெடுஞ்சாலையில் வந்த லாரியை அவர் வழிமறித்து அதில் சிறிது நேரம் சாய்ந்து கொண்டிருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மது போதையில் இருந்த வாலிபர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



    ×