search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராமின் பெண்கள். ஓரின சேர்க்கையாளர்"

    • சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
    • கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.

    சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். 

    கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா கூறும்போது, "அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மீதும் பல குற்றச்சாட்டுகளை அடிக்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டார்.

    தொடர்ந்து, கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.

    அதில், "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதான, நல்ல ஆச்சாரமான பிராமின் ஃபேமிலில இருந்துதான வந்த..." என்று கார்த்திக் பேசுகிறார்.

    சுசி லீக்ஸ் போலவே தற்போது அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமாரின் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆனால், பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை என்று கார்த்திக் குமார் விளக்கம் தெரிவித்தார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    சுசித்ராவை விவாகரத்து செய்த பிறகு, கார்த்திக் குமார் அம்ருதா என்கிற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

    இந்நிலையில், சுசித்ரா கார்த்திக் குமார் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், வாழ்க்கை மிகவும் குறுகியது.. அது வாக்குவாதம் செய்வதற்கு அல்ல... ம*** போச்சு என்று சொல்லிவிட்டு.. அதை கடந்துவிட்டு போ என்றும்.. ஹாய் என் காதலே.." என்று கார்த்திக் குமாரை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

    ×