search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்"

    • புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
    • ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    சென்னை ஐ.ஐ.டி. மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் "மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்" துவங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    புதிய ஆராய்ச்சி மையத்திற்காக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய இளையராஜா உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "இரு கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள சென்னை வந்தேன். வந்த நாளில் இருந்து இந்நாள் வரை நான் இசையை கற்றுக் கொள்ளவில்லை. எல்லோரும் நான் சாதித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை."

    "மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அப்படியே இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது. யாராவது நன்றாக இசையப்பதாக சொன்னால் நான்றாக சுவாசிக்கிறீர்கள் என சொல்வது போல் உள்ளது," என்று தெரிவித்தார்.

    ×