search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச கல்வி சோ்க்கை"

    • ஒவ்வொரு தனியார் பள்ளியும் 25 சதவீத இடங்கள் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும்.
    • ஒரு மாணவர் அருகில் உள்ள 4 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள்.

    ஒவ்வொரு தனியார் பள்ளியும் 25 சதவீத இடங்கள் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும்.

    தமிழகத்தில் வருகிற கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு ஏப்ரல் மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட பெற்றோர்கள் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பங்கள் எண்ணிக்கை பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    அதன்படி பள்ளியில் உள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெற்ற பள்ளிகளில் இன்று குலுக்கல் நடைபெற்றது. கல்வி அதிகாரிகள், வருவாய்த் துறை அலுவலர்கள், பள்ளி முதல்வர்கள் முன்னிலையில் மாணவர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

    ஒரு மாணவர் அருகில் உள்ள 4 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். இதில் ஏதாவது ஒரு பள்ளியில் இடம் ஒதுக்கப்படும். சென்னை மாவட்டத்தில் 636 தனியார் பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது:-

    சென்னை மாவட்டத்தில் உள்ள 636 தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்து உள்ளன. 10 ஆயிரத்து 342 குழந்தைகள் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

    இதனால் அனைத்து தனியார் பள்ளிகளிலும் குலுக்கல் நடந்தது. மாணவர்கள் பெயரை சீட்டில் எழுதி ஒரு பெட்டியில் போட்டு அதில் இருந்து ரேண்டமாக ஒவ்வொரு வராக தேர்வு செய்யப்பட்டனர். பெற்றோர்கள் முன்னிலையில் இந்த குலுக்கல் நடந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் இல்லாமல் சேர்க்க ஏழை பெற்றோர்கள் இன்று ஆர்வத்துடன் குலுக்கலில் கலந்து கொண்டனர். குறைந்த இடங்களுக்கு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் முயற்சி செய்ததால் கடுமையான போட்டி நிலவியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
    • தமிழகத்தில் இந்த திட்டத்தின்கீழ், இதுவரை 4.6 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் பயின்று வருகின்றனா்.

    சென்னை:

    கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

    இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின்கீழ், இதுவரை 4.6 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் பயின்று வருகின்றனா்.

    வரும் கல்வியாண்டுக்கான (2023-24) இலவச மாணவா் சோ்க்கை இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 22-ந் தேதி தொடங்கி கடந்த திங்கட்கிழமை (20-ந் தேதி) நிறைவடைந்தது.

    நிகழாண்டில் 1.30 லட்சம் பெற்றோா் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, அவை பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

    ஏதேனும் பள்ளியில் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 28-ந் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தோ்வு செய்யப்படுவா்.

    இந்த திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் பெயா் உள்ளிட்ட விவரம் வருகிற 29-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தையோ அல்லது 14417 என்ற உதவி மைய எண்ணையோ அணுகலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×