என் மலர்
நீங்கள் தேடியது "பிள்ளையார் சுழி"
- படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- தீரஜ் உடன் அபிநயா இணைந்து நடித்துள்ளார்.
"டபுள் டக்கர்" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பிள்ளையார் சுழி." மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
சிலம்பரசி மற்றும் எயர் ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் கதை மாற்று திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டு இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். தீராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்கள் உண்ணி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,
பிள்ளையார் சுழி படத்திற்கு பிரசாத் ஒளிப்பதிவாளராகவும், ஹரி எஸ்.ஆர். இசையமைப்பாளராகவும், ரேஷ்மன் குமார், மோகன்ராஜன், மற்றும் கோதை தேவி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பிள்ளையார் சுழி நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
'உ' என்பது யஜுர் வேதத்தின் சாரம். ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது இந்த வேதம்.
முன்வினை, பின்வினை, செய்வினை என்ற எல்லா வினைகளுக்கும் நாயகன் விநாயகன்.
ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது.
ஆகவேதான், எந்தச் செயலையும் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.
- விநாயகர் தடைகளை அகற்றுபவர்.
- பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.
முன்பெல்லாம் ஓலைச் சுவடியில்தான் நம்மவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள். அந்த வகையில் `உ' என்ற எழுத்தை எழுதும் போது, ஓலைச்சுவடியின் வலிமையும், எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்து விடும்.
செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும். இதன் காரணமாகவே எழுதத் தொடங்குவதற்கு முன்பாக 'உ' என்ற எழுத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர் என்பது அறிவுப்பூர்வமான கருத்து.
இதற்கு ஆன்மிகக் கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துகளில், 'உ'கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த எழுத்து விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதனை 'பிள்ளையார் சுழி என்றும் சொல்வார்கள்.

விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக 'உ'என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு.
விநாயகர் தடைகளை அகற்றுபவர். எனவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றிபெறுவதற்காக, விநாயகரைத் தொடர்ந்து நாமும் அவருடைய 'உ' என்ற பிள்ளையார் சுழியை பயன்படுத்தி வருகிறோம்.
'உ' என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் தொடங்கும். வட்டம் என்பதற்கு தொடக்கமும் இல்லை... முடிவும் கிடையாது. இறைவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பது இதனைக் குறிக்கிறது.

வட்டத்தைத் தொடர்ந்து, வளைந்து பின் நேர் கோடு செல்லும். இதனை 'ஆர்ஜவம்' என்பார்கள். இதற்கு 'நேர்மை' என்று பொருள். 'வாழ்க்கையில் வளைந்து கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே' என்பதே இதன் தத்துவம். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.