search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடகி சுசித்ரா"

    • ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தினார் என சுசித்ரா கூறியிருந்தார்.
    • சுசித்ரா சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை. அவர் மீது புகார் அளித்துள்ளேன் என ரீமா கல்லிங்கல் கூறினார்.

    மலையாள பட உலகம் பாலியல் புகாரில் சிக்கி அல்லோலப்படும் நிலையில் தமிழில் 'யுவன் யுவதி, சித்திரை செவ்வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாக பின்னணி பாடகி சுசித்ரா குற்றம் சாட்டினார்.

    அவர் கூறும்போது, "ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தினார். அதில் இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு போதை பழக்கத்துக்கு அடிமையானார்கள். இந்த தகவலை அந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். போதை விருந்து நடத்தியதால்தான் ரீமா கல்லிங்கலின் சினிமா வாழ்க்கை வீழ்ச்சி அடைந்தது'' என்றார். இது பரபரப்பானது.

    இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரீமா கல்லிங்கல் பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்வதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் ரீமா கல்லிங்கல் வெளியிட்டுள்ள பதிவில், "சுசித்ரா தவறான தகவலை வெளியிட்டுள்ளார். ஆதாரம் இல்லாமல் என் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். அவர் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை. எனவே சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது சிறப்பு விசாரணை குழு போலீசில் புகார் அளித்து இருக்கிறேன். அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

    • நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் வழக்கு.
    • ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு.

    நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பாடகி சுசித்ரா, தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×