என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்துத் துறை"

    • மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
    • முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்

    முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart-ல் ஓட்டுநர், நடத்துநர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.

    மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.

    அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும்பட்சத்தில் அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவல்துறை, போக்குவரத்து துறை இடையே நடைபெற்று வரும் பனிப்போரை தடுக்க தவிறய தமிழக அரசை கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காவல்துறை, போக்குவரத்து துறை இடையே நடைபெற்று வரும் பனிப்போரை தடுக்க தவிறய தமிழக அரசை கண்டிக்கிறேன்.

    சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவித்தபடி காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இதனால் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும்பட்சத்தில் அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திரைப்பட காமெடியில் வருவதை போல இரண்டு துறையில் எது பெரியது என அடித்து காட்டுங்கள் என்ற மனநிலையில் இரு துறைகளும் செயல்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×