search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்ஆர்ஹச்"

    • ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார்.
    • பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், காவ்யா மாறனுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    காவ்யா மாறனுக்காக மிகவும் வருந்துகிறேன்.. ஐதராபாத் அணியின் தோல்வி குறித்து அமிதாப் பச்சன் சொன்னது இதுதான்

     நேற்று (மே 26) நடந்த ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மோதின. முதலில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 3 வது முறையாக வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது. இதற்கிடையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கேமராவிற்கு எதிர்புறம் திருப்பியபடி கண்ணீர் விட்டு அழுதார்.

    கண்ணீரை மறைத்து சிரித்தப்படி அவரது அணியின் வீரர்களுக்குக் கைதட்டி வரவேற்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், காவ்யா மாறனுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    அவர் நடத்திவரும் பிளாகில் ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து குறிப்பிட்ட அவர், "எஸ்ஆர்ஹச் அணி தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஸ்டேடியத்தில் தோல்விக்குப் பிறகு எஸ்ஆர்ஹச் உரிமையாளர் காவ்யா மாறன் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீரில் விட்டார். கேமராக்களில் இருந்து முகத்தைத் திருப்பி, தனது கண்ணீரை அவர் மறைத்தார். அவருக்காக நான் மிகவும் வருடத்தப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.

     

     

    தொடர்ந்து அந்த பதிவில் அவர், "பரவாயில்லை..மை டியர், தோல்வியில் மனத்தைத் தளரவிட்டுக்கொடுக்காதே நாளை மற்றொரு நாளே!" என்று ஆறுதல் கூறியுள்ளார். 

     

     

    ×