என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திக் ராஜா"

    • அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் ’புஜ்ஜி அட் அனுப்பட்டி’.
    • இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.

    அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.

    இப்படத்தில் கமல்குமார்,நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,கார்த்திக் விஜய் ,குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,லாவண்யா கண்மணி,நக்கலைட்ஸ் ராம்குமார் ,நக்கலைட்ஸ் மீனா ,வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக மே 31-ல் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் இயக்குனர் பேசியதாவது.


    நண்பர் வேல் மாணிக்கம் மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் கேட்டபோது .அவர் பார்க்கலாம் என்றார். எடுத்த காட்சிகளை எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம். பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார் . சில நாள் எதுவுமே கருத்து சொல்லாமல் இருந்தார் .பிறகு சந்தித்த போது,என் மகள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். ஆடு கிடைத்ததா இல்லையா என்று. படம் அவருக்குப் பிடித்திருந்தது சம்பளம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் யோசித்தபோது, அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்றார் .எங்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டிச் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்து படத்தை உயர்த்தி உள்ளார்.

    இப்படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலக அளவில் தமிழ் இசையை கொண்டு செல்வது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
    • மியூசிக்கை பொறுத்தவரை எனக்கு தெரியும்... நீ சும்மா இரு... என்று சொல்லி விடுவாங்க.

    லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக லண்டன் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பாவின் இசையில் தமிழக மக்கள் அவ்வளவு உருகி இருக்கிறார்கள்.

    நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களிடம், அவங்க ஊருக்கே போய் 'டேக்கா காண்பிப்பது' என்று சொல்வாங்கல... அதுபோல நான் செஞ்சு காமிக்கிறேன்டா என்று நம்ம ஊரு ஆளு போகும்போது எனக்கு ஒரு தமிழனாக double சந்தோஷம்.

    உலக அளவில் தமிழ் இசையை கொண்டு செல்வது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

    நானும் ஒரு சராசரி ரசிகன் தான். என்னை வேறு மாதிரி பார்க்காதீங்க. என் அப்பாவும் அப்படி தான் டிரீட் பண்ணுவாங்க.

    மகன் என்ற அன்பு இருக்கும். மியூசிக்கை பொறுத்தவரை எனக்கு தெரியும்... நீ சும்மா இரு... என்று சொல்லி விடுவாங்க.

    சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா நிறைய பேர் இருப்பார்கள். அது அவர்களின் பாரம்பரிய இசை. அதில் நுணுக்கமாக செய்வது கடினம்.

    அப்பாவுக்கு முன்னாடி இருந்தே செய்யணும் ஆசை. அதை இப்போ சிறப்பா பண்ணிட்டாங்க.

    எனக்கு அந்த இசையை கேட்கணும் என்று ஆசை. அதை கேட்கும்போது தமிழ் மக்களும் கூட இருக்கணும் என்பது ஒரு ஆசை. may be இங்கேயும் வந்து அதை perform பண்ணுவாங்க என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×