என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎஸ்பி"

    • வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.

    2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    இந்நிலையில், வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை அமுதா தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக புகார்.

    ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் உத்தரவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனவும் இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதாவை முதலமைச்சர் கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவு ஏடிஎஸ்பி பிரேமானந்தன் கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையக ஏடிஎஸ்பி தங்கவேல் காஞ்சி மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு காவல்துறையில் 4 ஏடிஎஸ்பி-க்களை இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவு ஏடிஎஸ்பி பிரேமானந்தன் கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையக ஏடிஎஸ்பி தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி சவுந்தரராஜன் நீலகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ×