search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய அமைச்சரவை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவனிக்கத்தக்க வகையில் 13 அமைச்சர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
    • தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து முறையே தலா 2 அமைச்சர்கள் தேர்வாகியுள்ளனர்.

    மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணியளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

    கூட்டணி கட்சிகளின் தயவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளதால் புதிய அமைச்சரவை குறித்த எதிர்பார்ப்புகள் ஆரம்பம் முதலே உச்சத்தில் இருந்தது. அதிகபட்சமாக 78 முதல் 82 அமைச்சர்கள் வரை ஒரு அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று இருக்கும் சூழலில் தற்போது அமைத்துள்ள அமைச்சரவையில் 72 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

    இதில் கவனிக்கத்தக்க வகையில் 13 அமைச்சர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக அந்த13 பேரில் 5 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் பாஜக - குமாரசாமியின் ஜனதா தளம் கூட்டணி 28 இல் 19 இடங்களைப் பிடித்தது. இதற்கிடையில் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பிரஹலாத் ஜோஷி, ஷோபனா கரண்த்லாஜே ஆகியோரும் அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

     

    பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்த சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 சீட்களும், பவன் கல்யாணின் ஜன சேனா 5 சீட்களும் வைத்துள்ளதால் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து இக்கட்சிகளை சேர்ந்த மொத்தம் 3 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து முறையே தலா 2 அமைச்சர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சர் ஆனார். அதிகபட்சமாக இந்த முறை பாஜக சறுக்கிய உத்தரபிரதேசத்தில் இருந்து 9 அமைச்சர்களும், அதனைத்தொடர்ந்து பீகாரில் இருந்து 8 அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மொத்தமாக கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சராக பதவியேற்றவர்களுள் 7 பேர் பெண்கள் ஆவர். 

    மொத்தம் உள்ள 72 அமைச்சர்களில் 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், 5 தனிப் பொறுப்பு பதவி உடையோர் இடம்பெற்றுள்ளனர். இதில் 61 அமைச்சர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 11 பேர் கூட்டணிக் கட்சிகளை சேர்த்தவர்கள் . மேலும் புதிய அமைச்சர்களில் 7 பேர் முன்னாள் முதலமைச்சர்கள் ஆவர். ஓபிசி வகுப்பு அமைச்சர் 27 பேரும், எஸ்.சி சமூக அமைச்சர்கள் 10 பேரும், எஸ்.டி சமூக அமைச்சர்கள் 7 பேரும் ஆவர்.

    • முக்கிய இலாக்காக்களான உள்துறை, நிதி, பாதுகாப்பு ஆகிய துறைகளை பாஜக விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை.
    • ஏக்நாத் ஷிண்டே அணி 7 சீட்களும், சிராஜ் பவானின் எல்.ஜே.பி கட்சி 5 சீட்களும் வைத்துள்ளதால் இவையும் அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை வழங்குமாறு கேட்பதாக தகவல் கசிந்துள்ளது.

     நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. இன்று நடைபெறவுள்ள என்.டி.ஏ கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

    அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் யூகங்களும் எழத் தொடங்கியுள்ளன. இந்த முறை பாஜக ஆட்சியமைக்க 12 சீட் வைத்துள்ள நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி கட்சியும், 16 சீட் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய காரணமாக உள்ளதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அடிபோடுவதாக தெரிகிறது.

    அவர்கள் மட்டுமின்றி சிவா சேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி 7 சீட்களும், சிராஜ் பவானின் எல்.ஜே.பி கட்சி 5 சீட்களும் வைத்துள்ளதால் இவையும் அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை வழங்குமாறு கேட்பதாக தகவல் கசிந்துள்ளது.

    ஆனால் முக்கிய இலாக்காக்களான உள்துறை, நிதி, பாதுகாப்பு ஆகிய துறைகளை பாஜக விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை. தற்போது வெளியாகியுள்ள யூகங்களின்படி, விவசாயம், பழங்குடியின நலன், சிறுபான்மையினர் நலன், கல்வி, சிறு குறு தொழித்துறை ஆகியவை தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் எல்.பி.ஜெவுக்கும், ஜவுளித் துறை, கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை ஜே.டி.யுவுக்கும், திறன் மேம்பாட்டுத் துறை ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

    ஒதுக்கப்பட்ட இலாக்காக்களில் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேச மாநிலம் அப்னா தளம் கட்சியை சேர்ந்த அனுபிரியா பட்டேல், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெய்ந்த சவுத்ரி, பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், லொக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ஜித்தமன் ராம் மஞ்சி, சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், ஷிராங் பர்னே ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

    ×