search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும்.
    • ரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள்... இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது

    காலங்காலமாக நம்பப்படுகிற பல விஷயங்களில் ஒன்று, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால், கருத்தரிக்காது என்பது. இன்னும் சொல்லப்போனால், பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதைப் பாதுகாப்பாக நினைத்துப் பின்பற்றுவோரும் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது குறித்த சந்தேகங்களும் பலருக்கு இருக்கின்றன.


    'பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டா என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன். வாய்ப்புகள் குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும். 21 நாள்கள் சுழற்சியில் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பானது 14 நாள்கள் முன்னதாக நிகழும். அதாவது பீரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள்... இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது என்ற நிலையில், அந்தப் பெண்ணுக்கு 6-வது, 7-வது நாளிலும் ப்ளீடிங் இருக்கும் பட்சத்தில், 'அதான் ப்ளீடிங் ஆயிட்டிருக்கே... கன்சீவ் ஆக வாய்ப்பில்லை' என்ற அலட்சியத்தில் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டாம். முட்டை ரிலீஸ் ஆகிவிட்ட காரணத்தால், அந்த நாளில் வைத்துக்கொள்கிற தாம்பத்திய உறவால், கரு தங்கிவிட வாய்ப்புகள் அதிகம். எனவே, பீரியட்ஸ் நாள்களிலும் கருத்தரிக்கலாம் கவனம்..!

    • பிறவி இதய குறைபாடு கொண்டிருக்கும் பல பெண்களும் அறிகுறிகள் அறியாமல் தங்கள் கர்ப்பகாலத்தில் தான் நோய் கண்டறிகின்றனர்
    • கர்ப்பிணிக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும் மற்றும் இரத்த அளவு 50% வரை அதிகரிக்கும்.

    இதய நோய் கொண்டுள்ள இளம்பெண்கள் கருத்தரிக்க விரும்பினால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இயல்பாகவே கர்ப்பகாலத்தில் இதயத்துக்கு கூடுதல் பணி அளிக்கப்படுகிறது. அப்போது இதய பிரச்சனைகள் அபாயத்தை அதிகரிக்க செய்யலாம். இந்நிலையில் இதய கோளாறு கொண்ட பெண்களுக்கு இந்த அபாயம் மேலும் அதிகரிக்கும். இந்த அபாயங்களை குறைக்க முடியுமா? இதயகோளாறு கொண்டுள்ள பெண்கள் கருத்தரிக்க முடியுமா என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

    சில பெண்கள் பிறக்கும் போதே இதய குறைபாட்டுடன் பிறந்திருப்பார்கள். சிலருக்கு இது குறித்து அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு கர்ப்பகாலம் வரையிலும் இதய கோளாறுகளுக்கான அறிகுறிகளே இருக்காது. பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறக்கும் பெண்கள் வளரும் போது இன்னும் சில பிரச்சனைகளை அதிகமாக கொள்ளலாம்.

    இதய நோய் கொண்டிருக்கும் பெண்கள் கர்ப்பம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தால் இதயத்தில் உண்டாகும் கூடுதல் மன அழுத்தம் சிக்கல்களை உண்டு செய்யலாம். கர்ப்பகாலத்தில் இதயம் எப்படி பம்ப் செய்கிறது. சில ஹார்மோன் மாற்றங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களை பாதித்து இதய அபாயத்தை அதிகரிக்கலாம். எனினும் பாதுகாப்பாக பெண் கருத்தரிக்கலாம்.

    அதே நேரம் பெரும்பாலும் பிறக்காத குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும் இதய கோளாறு கொண்டிருந்தால் அப்பெண் கருத்தரிக்காமல் இருக்க மருத்துவர் அறிவுறுத்துவார். ஆனால் எதிர்பாராத விதமாக கர்ப்பமாகிவிட்டால் கர்ப்பம் முடிந்தவரை ஆரோக்கியமாக பாதுகாப்பாக இருக்க மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

    கர்ப்பம் தாயின் இதய நிலைகளை மோசமாக்கலாம். சில நேரங்களில் குழந்தை வளர்வதை பாதிக்கலாம். இதய நோய் கொண்ட பெண்கள் கருத்தரிக்கும் போது இவர்கள் அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கொண்டவர்களாக உள்ளார்கள். மேலும் இவர்கள் இதயவியல் நிபுணர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

    லேசாக ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் இதயத்தில் முன்னர் சரிசெய்யப்பட்ட சிறிய துளைகள் போன்றவை கர்ப்பத்தில் சிக்கல்களை உண்டு செய்யாது.

    இதய செயலிழப்பு, நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பெருநாடி நோய் போன்றவை சிக்கல்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கலாம். இத்தகைய ஆபத்து கொண்ட கர்ப்பிணிகள் 1% என்பதால் இவர்கள் கருத்தரிக்க அனுமதி அளிப்பதில்லை.

    இதய நோய் இருப்பவர்கள் கருத்தரிக்க விரும்பினால் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும். இதய நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் எடுப்பவர்கள் இந்த மருந்துகள் கர்ப்பத்துடன் ஒத்துபோகிறதா அல்லது கர்ப்பத்தை பாதிக்குமா என்பது குறித்தும் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு இதயம் சிறந்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பரிசோதனைகள் எடுத்துகொள்ள வேண்டும். எந்த பரிசோதனையையும் தவிர்க்க கூடாது. அதே போன்று ஆரோக்கியமான பெண்களும் கருத்தரிப்புக்கு முன்பு இதய நோய் குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிறவி இதய குறைபாடு கொண்டிருக்கும் பல பெண்களும் அறிகுறிகள் அறியாமல் தங்கள் கர்ப்பகாலத்தில் தான் நோய் கண்டறிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதய நோயுடன் கருத்தரித்த பிறகு பராமரிப்பு குழுவை தேர்வு செய்யுங்கள். கார்டியோ மற்றும் மகப்பேறியல் குழு மூலம் திட்டமிடுங்கள். கர்ப்பகாலத்தில் உங்களுக்கு தேவைப்படும் மருந்துகள், பரிசோதனைகள், கண்காணிப்புகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

    கர்ப்பிணிக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும் மற்றும் இரத்த அளவு 50% வரை அதிகரிக்கும். அப்போது ரத்த அழுத்தம் குறையும். இது சில இதய நிலைகள் உள்ளவர்களுக்கு மேலும் ஆபத்தை அளித்துவிடலாம். இந்நிலையில் இரத்த ஓட்டம் மாற்றம் உண்டாகும். பிரசவத்தில் மாற்றம் இருக்கும். சில பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகு ஆறு வாரங்கள் முதல் எட்டு வாரங்கள் வரை அதிக ஆபத்து காலமாக இருக்கலாம். அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். அதனால் குழந்தையை பெற்ற பிறகும் தொடர்ந்து மருத்துவரை சந்திப்பது அவசியம்.

     நோய் அறிகுறிகள் கர்ப்பத்துக்கு முன்பு பாதிப்பை உண்டு செய்யாவிட்டாலும் கர்ப்பத்துக்கு முன்பு உங்கள் வாழ்க்கையை பாதிக்காவிட்டாலும் கர்ப்பத்துக்கு பின்பு அது பல பிரச்சனைகளை உண்டு செய்துவிடலாம். கர்ப்பகால உடல் மாற்றங்களே இதற்கு காரணமாகும்.

    இதய நோய் அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கொண்டிருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்திலும் அதற்கு பின்னரும் உணரும் அறிகுறிகளை மருத்துவரிடம் மறைக்க கூடாது.

    உடல் ஆரோக்கியத்தில் திடீர் மாற்றங்கள் இருப்பது, கவலை அறிகுறி, படபடப்பு, மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

    ×