என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காகிரஸ்"

    • பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
    • நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 72 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்து நிதிஷ் குமாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் [ 12 சீட்] சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் [16 சீட்] ஆகிய கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

     

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி பாராளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவத்தை வலுவாக நிறுவியுள்ளது. நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்னும் சூழலில் பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

    இன்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, என்.டி.ஏ கூட்டணி தலைமையிலான அரசு தவறுதலாக உருவாகியுள்ளது. .மோடியிடம் அரசைத் தக்கவைக்க எந்த உறுதியும் இல்லை. இது ஒரு மைனாரிட்டி அரசு. எனவே இந்த அரசு எந்த நேரமும் சரிய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த அரசு தொடரவே நாங்கள் விரும்புகிறோம். அது நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாமலேயே பல முக்கிய சட்டங்களை பெரும்பான்மை வைத்திருந்ததால் பா.ஜ.க தன்னிச்சையாக நிறைவேற்றியது. இனி எந்த சட்டமாக இருந்தாலும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கேட்க வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

    • மேலே இருக்கும் 10 சதவீதத்தினர் கீழ்மட்டத்தில் இருக்கும் 10 சதவீதத்தினரை விட 6.8 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர்
    • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 ஊதிய அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

    மக்களுக்கு வெறும் பக்கோடா குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அல்வா என மோடி அரசு செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.இந்தியாவில் நிலவும் ஊதிய ஏற்றத்தாழ்வைச் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை வெளிப்படுத்தியதை முன்னிறுத்தி இன்றைய தினம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

    இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு எக்கனாமிக்ஸ்க்கு பதில் பிரதமர் மோடியின் பக்கோடா நாமிக்ஸ் [pakoda-nomics] ஏற்படுத்திய  நேரடி விளைவு என்று அவர் விமர்சித்துள்ளார்.

    சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 உலகளாவிய ஊதிய அறிக்கை, இந்தியாவில் வருமானம் ஈட்டுவோரில் முதன்மையாக இருக்கும் 10 சதவீதத்தினர் கீழ்மட்டத்தில் கடைசியாக இருக்கும் 10 சதவீதத்தினரை விட 6.8 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர் என்று கூறுகிறது.இது பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம் மற்றும் மியான்மர் உட்பட நமது அண்டை நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் விட இது மிகவும் சமமற்றது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    அனைத்து குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளது என அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

     

    பெரும்பாலான தொழிலாளர்கள் சுயதொழில், வகைப்படுத்தப்படாத முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் குறைந்த ஊதியம் மற்றும் நிலையற்ற தன்மை நிலவுகிறது

    இது பயாலஜிகளாக பிறக்காத பிரதமர் உருவாக்கிய பக்கோடா-நாமிக்ஸின் நேரடி விளைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெகுஜனங்களுக்கு பக்கோடாக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு அல்வா! என ஜெய்ராம் ரமேஷ் தாக்கியுள்ளார்.

    நாட்டில் அதிகரித்து வரும் , வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் வருமான சமத்துவமின்மை ஆகியவற்றுக்குப் பொருளாதாரத்தை அரசு முறையற்று கையாள்வதே காரணம் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

     

    ×