என் மலர்
நீங்கள் தேடியது "அரவிந்தசாமி"
- ரஜினியின் தளபதி படத்தில் கலெக்டராக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்.
- கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
90 காலக்கட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் கனவு காதலனாக இருந்தவர் அரவிந்த்சாமி, இவர் ரஜினியின் தளபதி படத்தில் கலெக்டராக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர். அதை தொடர்ந்து இவர் ரோஜா படத்திலும் நடித்து பெயர் பெற்றார்.
பின்னர் பம்பாய், மின்சார கனவு, இந்திரா என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருபவர்.
மேலும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வரும் அரவிந்த் சாமிக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் சில காலங்கள் ஓய்வில் இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனி ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது.
தொடர்ந்து தலைவி படத்தில் எம்ஜிஆராகவும், சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்க சூர்யாவின் 2D நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அரவிந்த்சாமியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது.
- வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் 'உழவர் விருதுகள் 2025' விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு இலட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அவர்கள் பேசும் போது, "இந்த நிகழ்வுக்காக ஆண்டு முழுக்க காத்திருக்கிறோம். நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை,
குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், இவர்கள்தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதற்காகதான் உழவர் விருதை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

"இவ்வாறு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இவர்கள் அங்கீகாரம் பெறுவதின் மூலம், மேலும் பலர் இவர்களை போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் பல உழவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, "இதுவரை எல்லா மேடையும் நம்மை மேலே தூக்கி செல்லும் வகையில் தான் இருக்கும். ஆனால், இந்த மேடை தான் நாம் யார், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், நமது அடிவேர் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. விவசாயத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை இங்கு வந்த பிறகு தான் அறிந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது," இந்த விழாவில் கலந்துக் கொண்டதே பெருமையாக இருக்கு" என்று கூறினார்

இந்த சிறப்பம்சங்கள் இன்னும் பல கோடி பேரை சென்று சேரும் பொருட்டு, உழவன் ஃபவுன்டேஷனின் 'கார்த்தியின் உழவர் திருநாள்' விழா, ஜனவரி 14, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.