என் மலர்
நீங்கள் தேடியது "மொட்டை மாடி"
- பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சோப்பினால் தவறி விழுந்து கீழே விழ முற்பட்டபோது, மொட்டை மாடியின் கம்பியை பிடித்துக்கொண்டார்.
- அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
பெங்களூருவில் பெண் (27) ஒருவர் வீட்டு மொட்டை மாடியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது கணவரும் மாடியில் இருந்துள்ளார்.
அந்த பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சோப்பினால் தவறி விழுந்து கீழே விழ முற்பட்டபோது, மொட்டை மாடியின் கம்பியை பிடித்துக்கொண்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் அவரை மேலே இழுக்க முயன்றபோது, அந்தப் பெண் பிடியை இழந்து கீழே விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் மற்றும் பல உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டிஜே ஹாளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணி துவைத்துக் கொண்டிருந்த பெண் தவறி கிழே விழும் பதறவைக்கும் காட்சி..#bangalore pic.twitter.com/95r7eMGo6X
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2024