என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணாடி தொழிற்சாலை"

    • ஷாத்நகரில் உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பல தொழிலாளர்கள் கைகால்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ஷாத்நகரில் உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்தானது ஷாட்நகரில் உள்ள தொழிற்சாலையில் கம்ப்ரசர் டேங்க் மாலை 4.30 மணியளவில் வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடிவிபத்தின் தாக்கத்தால் பல தொழிலாளர்கள் கைகால்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×