search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி மாத சிறப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை.
    • சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. இங்கு இருக்கும் நாகராஜர் கோவில் பாம்பு புற்றை சுற்றி கோவில் எழுப்பி இருக்கிறார்கள்.

    நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பழம், பால் படைத்து வணங்கி செல்கின்றனர். அவரவர் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

    இந்த தலத்தில் உள்ள புற்று மண் மிகவும் விசேஷமானது. பல சரும நோய்களை குணமாக்க வல்ல மண் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த புற்றில் இருந்து மண்ணை எடுத்து அருகிலுள்ள தொட்டியில் போட்டிருக்கிறார்கள்.

    அம்பாள் சன்னதியிலும் புற்று மண் இருக்கிறது. இந்த மண்ணை சிலர் மருந்தாக சாப்பிட்டு வருகிறார்கள். நெற்றியிலும் இதை திலகமாக வைத்துக் கொள்கிறார்கள்.

    இந்த கோவில் அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை. காரணம் ஒரே சிலையில், ஒரு பாதி சிவனும், மறுபாதி விஷ்ணுவும் போன்ற தோற்றம் உடையது. தலையில் கங்கையை முடிந்து இருக்கிறார். ரத்ன கிரீடம் சூடியிருக்கிறார். கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கிறார். இடுப்பில் புலித்தோல் கட்டியிருக்கிறார். இவை அனைத்தும் சிவனின் வடிவங்கள்.

    மறுபாதியில் தலையில் கிரீடம், காதில் மசியக் குண்டலம், கையில் சங்கு, சிம்மகரணம், இடுப்பில் பட்டு பீதாம்பரம் இருக்கிறது. இந்த வடிவம் விஷ்ணுவின் வடிவமாகும். எனவே சிவனும், விஷ்ணுவும் சேர்ந்திருப்பதால் சங்கரநாராயண சுவாமி என்கிறார்கள்.

    ஒருமுறை பார்வதி தேவியாருக்கு சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அதை சிவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். உடனே சிவபெருமான் பாதி சிவனாகவும், பாதி விஷ்ணுவாகவும் தோன்றினார்.

    உடனே சிவனார், பெரியவர் யார், சிறியவர் யார் என்பது பார்ப்பவர் கண்ணில் தான் உள்ளது. இரண்டு பேருமே ஒன்று தான் என்று விளக்கமும் கூறினார். இதை உணர்த்தும் விழா, சங்கரன் கோவிலில் காட்சி அளிக்கும் ஈசனை காண தேவி புறப்பட்டு வரும் வைபவமாக ஆடித்தபசு எனும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

    அம்பாள் தவக் கோலத்தில் காணப்படுகிறார். அம்பாள் சன்னதியை சுற்றி உள்ள கிரிவீதியை 108 முறை சுற்றினால் நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    அதுவும் ஆடித்தபசுக்கு முன்பு சுற்ற வேண்டும். ஆடித்தபசு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நடந்தேறுகிறது.

    பொதுவாக சிவன் அபிஷேகப்பிரியர். விஷ்ணு அலங்காரப் பிரியர். ஆனால் சங்கரன்கோவிலில் இருவரும் ஒரே சிலையாக அமைந்திருப்பதால் அதற்கு அபிஷேகம் செய்வது சிரமமாக இருந்தது. இதையறிந்த ஆதிசங்கரர் தாம் வைத்திருந்த ஸ்படிகலிங்கத்தை கோவிலுக்கு கொடுத்து அதற்கு அபிஷேகம் செய்யுமாறு கூறினார்.

    இந்த லிங்கத்தை தண்ணீரில் போட்டால் லிங்கம் இருப்பதே தெரியாது. இது ஒரு இயற்கை அற்புதமாகும். அதுபோல் சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. இதில் சாமியை பிரதிஷ்டை செய்திருப்பதாக ஒரு ஐதீகம். எனவே பேய் மற்றும் பில்லி சூனியத்திற்கு ஆளான பலர் இந்த வனக்குழியில் அமர்ந்து பூஜை செய்வார்கள்.

    • ஆடி மாதம் வரும் ஜூலை 17-ந் தேதி பிறக்கிறது.
    • மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் ஆடி மாதம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, புதன் என ஒவ்வொரு தினங்களும் கொண்டாட்ட தினமாக வருகிறது.

    நடப்பாண்டிற்கான ஆடி மாதம் வரும் ஜூலை 17ம் தேதி பிறக்கிறது. 17ம் தேதியானது புதன்கிழமையில் வருவது இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாத பிறப்பிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தற்போது முதலே கோயில்கள் களைகட்டத் தொடங்கிவிட்டது.

    ஆடி மாதம் வரும் ஜூலை 17-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி வரை வருகிறது. ஆடி மாதம் வந்துவிட்டாலே தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் திருவிழா கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம். மிகப்பெரிய அம்மன் கோயில்கள் மட்டுமின்றி ஒவ்வொரு ஊரிலும் உள்ள அம்மன் கோயில்களிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ஆடிக் கொண்டாட்டம்:

    ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி தபசு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை என பல விசேஷங்கள் கொண்டாடப்பட உள்ளது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். ஆடி மாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்றுதல், அன்னதானம் உள்ளிட்ட பல விசேஷங்கள் தொடர்ந்து அரங்கேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை காட்டிலும் வட மாவட்டங்களில் ஆடி மாதம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம், ஆடியின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூழ் ஊற்றுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளை பக்தர்கள் மேற்கொள்வார்கள்.

    ஆடி மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும்.
    • சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

    கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும். சித்திரை மாதத்தில் சூரியன் இருக்கிறார் என்றால் அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் சூரியன் பிரவேசித்துக்கொண்டு இருப்பார்.

    இதில் நான்காவதாக இருக்கும் கடகத்திற்கு வருகிறார். அது சந்திரனின் இடம். இது அம்பாளுக்கு உரிய இடம். அம்பாள் தவம் இருந்து சிவனை அடைந்த இடமாகவும், சிவன் போய் சேரும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது கணவன் மனைவியான சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

    ஆனால் நம் முன்னோர்கள் கணவன் மனைவி சேரக்கூடாது என்று கூறிவைத்துள்ளார்கள். இதில் பகுத்தறிவான விஷயம் என்னவென்றால் ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை வெயில் காலத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் நம் முன்னோர்கள் இதனை கூறி வைத்துள்ளனர்.

    ஆடி மாதத்திற்கு உள்ள சிறப்புகள்:

    ஆடி மாதத்தில் தான் தட்சாயணம் காலம் ஆரம்பிக்கிறது.

    குழந்தை பாக்கியம், திருமணத்தடை, தொழில் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வெற்றிழை வைத்து பிரசன்னம் பார்ப்போம். வெற்றிலை வைத்து பார்க்கும் போது இதில் 5-வதாக வைத்த வெற்றிழை கிழிந்து இருந்தால் அது குழந்தை பாக்கியம் பிரச்சினை. இதற்கு சிறந்த தீர்வு குலதெய்வ வழிபாடு தான்.

    ஆடிமாதம், பவுர்ணமி அல்லது அமாவாசை நாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டு கோவிலில்  11 பேரிடம் மடிப்பிச்சை எடுக்க வேண்டும்.

    என் வம்சம் தழைக்க என் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் குலதெய்வ கோவிலில் குறைந்தது 6 மணிநேரமாவது உட்கார்ந்து விட்டு வர வேண்டும்.

    மேலும் பித்ருக்கள் சாபம் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தடைபடும். அப்போது பித்ருக்களுக்கு உகந்தது ஆடி அமாவாசை. யாரெல்லாம் முன்னோர்களுக்கு கொல்லி வைத்தார்களோ அவர்கள் எல்லாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம். ஆடி அமாவாசை நாளில் பித்ருக்கள் தர்ப்பணம் அளிக்கும் போது பித்ருக்கள் சாபம் நீங்கி வம்சம் தழைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குலதெய்வமே தெரியாதவர்கள் என்னசெய்வது?

    முதலில் விநாயகர் வழிபாடு செய்யலாம். வெற்றிலை பிரசன்னத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம்.

    தர்ப்பணம் பெண்கள் கொடுக்கலாமா?

    எள், தண்ணீர் இரைக்கும் செயலை சுமங்கலிகள் செய்யக்கூடாது. பெண்கள் சுமங்கலியாக இருக்கும் பட்சத்தில் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மருமகன்கள் இதனை செய்யலாம். யாருமே தர்ப்பணம் கொடுக்க இல்லை என்றாலும், தர்ப்பணம் கொடுப்பதற்கு ஒரு பிராமணன் இருப்பார். அவரிடம் சென்று தர்ப்பணம் கொடுக்க சொல்லலாம்.

    திருமணத்தடை நீங்க ஆடி மாதத்தில் எந்த அம்மனை வணங்கலாம்?

    சிவனும், அம்பாளும் சேர்ந்த ஒரு அற்புதமான மாதம் தான் இந்த ஆடி மாதம் இந்த மாதத்தில் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணத்தடை இருந்தால். முத்துமாரி அம்மன், காமாட்சி அம்மன் அல்லது அவர்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வரலாம். செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மல்லிகைப்பூ போட்டு நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

    யாருடைய வீட்டிலாவது பெண்கள் கல்யாணத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களை கன்னி தெய்வம் என்று சொல்வார்கள். இவர்களை வழிபடுவதற்கென்று ஒரு முறை உள்ளது. அந்த முறைப்படி கும்பிட்டு வந்தால் திருமண வாழ்க்கை கூடிவரும்.

    ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டிற்கு சென்று முருகனுக்கும், அம்மனுக்கு மாலை போட்டு சாமி கும்பிட்டுவிட்டு அந்த மாலையை திருமணத்தடை உள்ளவர்கள் மாலையை போட்டு வழிபட்டு விட்டு அந்த மாலையை வீட்டிற்கு கொண்டுவர வேண்டும். கல்யாணம் கைகூடியவுடன் இரண்டு மாலையாக முருகனுக்கு செலுத்திவிட வேண்டும்.

    ஆடி மாதத்தில் ஏன் திருமணம் நடத்தப்படுவதில்லை?

    ஆடி மாதத்தில் லக்கணமும், கோச்சார பலனும் நன்றாக இருப்பதில்லை என்பதினால் திருமண காரியங்களை செய்வதில்லை. சர ராசி, சிர ராசி, உபய ராசி என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு உபய ராசியில் சந்திரன் இருக்கும் காலக்கட்டத்தில் புதுமனை புகுவிழா செய்யக்கூடாது. அதுபோல ஆடி மாதத்தில் தெய்வத்திற்காக மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

    அம்மனுக்கு அளிக்கப்படும் நைவேத்தியங்கள்?

    பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி இருக்கும். சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் இதனை நைவேத்தியம் செய்யலாம். மனமுருகி வழிபட்டாலும் தெய்வ அனுக்கிரகம் இருக்கும்.


    ×