என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வராயன் மலை"

    • மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க, 100க்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பன்னிப்பாடி செல்லும் சாலை, வெள்ளி மலை செல்லும் சாலை, மூலக்காடு, சிறுவாச்சூர் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு.
    • கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

    கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கல்வராயன் பகுதியில் உள்ள கச்சிராய பாளையம் காவல் நிலையத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார்.

    கடலூரில் நேற்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.

    கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு, குரும்பலூர், சிறுகல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    வடக்கு மண்டல ஐஜி அஸ்ட்ரா கார்க், கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

    விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையில் அதிரடிப்படை ஆய்வு நீடிக்கும் நிலையில் ஏடிஜிபி சோதனை செய்து வருகிறார்.

    • கல்வராயன் மலை பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது.
    • வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோ பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, போலீசார், மது விலக்குப் பிரிவினர் கல்வராயன் மலை பகுதியில் அதிரடி சோதனைகள் நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கைது செய்தனர்.

    கல்வராயன் மலை பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. விவசாயப் பயிர்களுக்கு மத்தியில் கஞ்சா விளைவிப்பது என அப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் ஏராளமாக நடைபெறும் வெளிச்சத்துக்கு வந்தது.

    இந்நிலையில் கல்வராயன் மலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 1600 கஞ்சா செடிகளை வளர்வதாக தகவல் வந்துள்ளது.

    இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    1600 கஞ்சா செடிகளை வளர்த்ததாக 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அங்கு 104 கிலோ கஞ்சா செடிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×