search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதம் .338 லாபுவா மேக்னம் கேலிபர்"

    • இந்த ரைஃபிள்காளானது 1500 மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது ஆகும்.
    • சுமார் ரூ.413 கோடி மதிப்புடைய துப்பாக்கி குண்டுகளும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவுள்ளன.

    இந்தியாவில் இருந்து முதல் முதலாக ஸ்னைப்பர் ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்ய பெங்களூரைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனமான SSS DEFENCE நிறுவனம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி மிகப்பெரிய அளவில் .338 லாபுவா மேக்னம் கேலிபர் ரக துப்பாக்கிகள் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளன.

    இந்த ரைஃபிள்காளானது 1500 மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது ஆகும். இதுமட்டுமின்றி சுமார் ரூ.413 கோடி மதிப்புடைய துப்பாக்கி குண்டுகளும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவுள்ளன. ஆயுத ஏற்றுமதி தற்போது தொடங்கியுள்ள நிலையில் மேலும் பல நாடுகளுடனும் பேசுவார்த்தை நடந்து வருகிறது.

     

    முன்னதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பெங்களூருக்கு வந்து ஆயுதங்களை பரிசோதித்து அதன் திறனில் திருப்தி அடைத்துள்ளனர். சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிசைல்கள் வரை இந்திய இதுவரை இறக்குமதி மட்டுமே செய்து வந்த நிலையில் தற்போது ஏற்றுமதியும் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் பெருமிதம் தெரிவித்துள்ளன.

    மேலும் .338 லாபுவா மேக்னம் கேலிபர் ரக துப்பாக்கிகளை சுமார் 30 நாடுகளுக்கும் மேல் அதிக அளவில் உபயோகித்து வருவதால், இந்தியாவில் ஆயுத வியாபாரம் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது ரஷியா சென்றுள்ள மோடி அதிபர் புதினுடன் இந்தியா- ரஷியாவின் ஒருங்கிணைந்த ஆயுத உற்பத்தி தொடர்பான பேசுவார்த்தையில் ஈடுபட்டு உடன்பாட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போருக்கு மத்தியில் நடந்த இந்த பேசுவார்த்தை சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.  இதற்கிடையில் அஹிம்சயை உலகுக்கு சொல்லித் தந்த ஒரு தேசம், உயிர்களைக் கொள்ளும் ஆயுதங்களை  ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது முரணான  ஒன்றாக பார்க்கப்டுகிறது.

     

     

    ×