search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்டிஓ சோதனை"

    • 2 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓசூர்:

    ஓசூர் பாகலூர் சாலையில சமத்துபுரம் பகுதியில் ஆர்.டி.ஓ சோதனை சாவடி உள்ளது. தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக கர்நாடகா மற்றும் ஆந்திர உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கும் அதேபோல வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் வாகனங்களுக்கும் இந்த சோதனை சாவடியில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆர்டிஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி வடிவேல் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.


    இன்று காலை 6 மணி முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இச்சோதனையில் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத, 2 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×