search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    • போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது.
    • போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் வெளிநாட்டில் 17 நாட்கள் தங்கி 19 நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.7600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். 17 நாட்களில் வெறும் 7,600 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்பதை தோல்வியாக தான் நாங்கள் பார்க்கிறோம். இவ்வளவு நாட்கள் சென்று குறைந்த முதலீடு தான் பெற்றிருக்கிறார்.

    மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், மதுக்கடையை உடனடியாக மூடினால் தமிழ்நாட்டின் சூழல் மோசமாகிவிடும் என தமிழக மக்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். தமிழக இளைஞர்கள் கெடுத்ததே தி.மு.க.தான். தமிழகத்தில் மது இல்லாமல் இருக்கமுடியாத நிலையை உருவாக்கியதே திராடவிட மாடல் அரசுதான்.

    மதுவிலக்கு பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து பேசுகின்ற கனிமொழி மூன்று ஆண்டுகாலம் மவுனமாக இருக்கிறார். அனைத்து விதமான போதைப் பொருட்களும் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. முதலமைச்சர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார். இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள், காவல்துறை எதற்கு இருக்கிறது?

    சென்னை கோவளத்தில் ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வரும் போது சென்னைக்கு தான் மூன்று மடங்கு அதிகமான பறவைகள் வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு நெருக்கடி ஏற்படும். இந்த திட்டத்தை தவிர்த்து மூட வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக் கட்சி. எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். இஸ்லாமியருக்கும் இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார்.

    திருமாவளவன் மது விலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம். மது ஒழிப்பு தொடர்பாக நாங்கள் பி.எச்.டி. படித்துள்ளோம், திருமாவளவன் எல்.கே.ஜி. தான் படித்திருக்கிறார். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற திருமாவளவன் பதிவு சரியானது. அதை ஏன் நீக்க வேண்டும்? தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என கட்சி தொடங்கவில்லை. அதை நீக்கியது தான் சரியில்லை.

    நாடு முழுவதும் மது விலக்கு கோரிக்கையை கண்டிப்பாக வைப்போம். மதுவிலக்கை எல்லா மாநிலங்களிலும் இதை செய்ய வேண்டும் படிப்படியாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசு மதுவை விற்கவில்லை, திணிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன.
    • ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன.

    ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதைவிட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும். இதைக்கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பசுமைத் தாயகம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
    • படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், நகரத்திற்கு வெளியே 8.5 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நில வணிக நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை பல கோடி உயர்த்தும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

    இதன் பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

    ராசிபுரம் நகர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை தனியார் நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக படையப்பா நகரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட பேரங்கள், நடந்த ஊழல்கள் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 35 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான போராட்டங்களை பா.ம.க.நடத்தியுள்ளது.
    • அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசிடம் மதவாத கட்சியான பா.ஜ.க., மற்றும் சாதியவாத கட்சியான பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று திருமாவளவன் கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    தமிழக கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான். இதைப்பற்றி பேச தகுதியான கட்சி பா.ம.க.தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பா.ம.க. போராடிவருகிறது. ராஜாஜி, ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். இதை தி.மு.க.ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி , கருணாநிதி வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆனாலும் மது விலக்கை ரத்து செய்துவிட்டு இன்று தி.மு.கவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள் . 35 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான போராட்டங்களை பா.ம.க.நடத்தியுள்ளது. பா.ம.க மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. டாஸ்மாக் திறந்தபோது 7200கடைகளை 4800ஆக குறைத்தது பா.ம.க.தான். இதற்கான சட்டப்போராட்டங்களை பா.ம.க.தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10 மணி நேரமாக குறைத்தது பா.ம.க. தான். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு என பா.ம.க. அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலியுறுத்த தொடங்கியது. அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது.
    • உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.

    உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

    கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பை விட, அதிக லாபத்தை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.

    உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஓரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர்.
    • நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில்,

    நாளை செப்டம்பர் 11...

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாள்!

    அதை நினைக்கும்போது எனது மனதில் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன.

    தியாகி இமானுவேல் சேகரனார் போற்றுதலுக்கு உரியவர்.

    ஆங்கிலம், இந்தி, ரஷிய மொழி உள்ளிட்ட 7 மொழிகளை கற்றறிந்தவர்.

    தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர். இவ்வளவு சிறப்பு மிக்க இவரது நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

    அந்த நிலையை மாற்றி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த இராமதாசு தான். அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய சில மாதங்களில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக மதுரை அனுப்பானடியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற என்னிடம் சிலர் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வரலாம் என்று கூறினார்கள். ஆனால், அங்கு செல்வது சரியானதல்ல என்று வேறு சிலர் கூறினார்கள். ஆனால், இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வருவது என்று தீர்மானித்து விட்டேன். கூட்டம் முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுடன் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு பயணித்தேன்.

    நானும், பா.ம.க. நிர்வாகிகளும் பரமக்குடி சென்றடைவதற்கு முன்பாகவே அங்குள்ள 5 முனை சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இது குறித்து தகவல் தெரியும் என்பதால் அவர்கள் தங்களின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து ஆட்களைக் கூட்டி விட்டனர். பரமக்குடியில் கூடி நின்றவர்களில் ஒரு பிரிவினர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அங்கிருந்தவர்களில் பலர் என் மகிழுந்தின் கார் மீது ஏறிக் கொண்டனர். எங்கள் மகிழுந்துகளைத் தொடர்ந்து ஏராளமான தானிகளிலும் பலர் அணிவகுத்து வந்தனர். அதனால் எங்களின் பயணம் அறிவிக்கப்படாத ஊர்வலமாகவே மாறி விட்டது.

    நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி. ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த மாவீரனின் நினைவிடம் பராமரிப்பின்றி கிடந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாதவாறு ஒரே துர்நாற்றம் வீசியது. கழிவு நீர் தேங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் பன்றிகளின் கழிவுகள் தான் நிரம்பிக் கிடந்தன. இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த எனது கண்களில் நினைவிடத்தின் அவலநிலையைக் கண்டு கண்ணீர் கசிந்தது.

    அந்த இடத்திலேயே இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக எனது சொந்தப் பணம் ரூ. 15 லட்சத்தை மதுரையைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ஒருவரிடம் கொடுத்து நினைவிடத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அந்த நிர்வாகியை பின்னாளில் வட தமிழகத்தில் உள்ள வந்தவாசி சட்டப்பேரவைத் தேர்தலில் நிறுத்தி, தேர்தலுக்கான செலவை முழுவதும் கட்சி சார்பில் செய்து அவரை சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகு பார்த்தேன்.

    எனது சொந்தப் பணத்தில் இமானுவேல் சேகரனாரின் நினைவிடம் தூய்மைப்படுத்தப்பட்டு, கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டு அழகூட்டப்பட்டது. அதன்பின்னர் அடுத்து வந்த அவரது நினைவிடத்திற்கு சென்று நான் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்தினேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டேன். அதன்பிறகு தான் அவரது நினைவிடத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள். இமானுவேல் சேகரனார் 1957-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அதன்பின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் அஞ்சலி செலுத்தியதில்லை. அவரது நினைவிடத்தை நான் சீரமைத்து, மரியாதை செலுத்திய பிறகு தான் அங்கு மற்ற தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.

    இதற்கெல்லாம் முன்பாகவே 29.02.1988-ஆம் நாள் புதுச்சேரியில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி 17&ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் வன்னியர் சங்கம் சார்பிலும், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் நடத்தப்பட்ட அனைத்துக் கடிதத் தொடர்புகளிலும் இராமநாதபுரம் மாவட்டம் இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் மாவட்டம் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது நினைவுகூரத் தக்கதாகும்.

    இந்த நினைவுகளுடன் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாளில் அவருக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் கண்ட கனவுப்படியே தேவேந்திரகுல வேளாளர்களின் முழுமையான விடுதலைக்காக போராட அனைவரும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.

    தருமபுரி:

    தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள பா.ம.க. கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று தருமபுரிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் இன்று வருகை தந்தனர்.

    அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. அது தண்ணீர் பிரச்சனை. இந்த பிரச்சனை தீர்க்க பா.ம.க.வினர் பல கட்டங்களாக போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அரங்கேற்றி இருக்கிறோம். அதன் விளைவாக நிறைவேற்றப்பட்டது தான், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்.

    தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாயம் நிறைந்த மாவட்டம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால், 2, 3, அல்லது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து முதலாளியாக இருந்த விவசாயிகள் தற்போது கூலி ஆட்களாக திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினக்கூலிகளாக வேலைக்கு செல்கின்றனர்.

    தருமபுரி மாவட்டத்திலேயே அவர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேறுவதற்காக பல திட்டங்களை பா.ம.க. முன்னெடுத்தது. இதில் எண்ணகோள்புதூர் திட்டம், ஆணைமடுவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் முக்கிய திட்டமான காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தோம். இதுபோன்று பல கட்டங்களாக போராட்டம் நடத்தியதன் விளைவாக சென்ற ஆட்சியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றுவதாக அவர் அறிவிப்பையும் வெளியிட்டனர்.

    இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு காவிரி உபரி நீர் திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை.

    இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.

    இதைக்கூட நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அதனால் அகிம்சை முறையில் முதற்கட்டமாக அடுத்த மாதம் 4-ந்தேதி தருமபுரியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை அனைத்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு அரசுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது.
    • மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காண செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்திருக்கின்றனர்.

    தற்போது 134 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 187 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

    மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காண செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தயாராக எழுதி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கையை மட்டும் மாற்றி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்புவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டு மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை.
    • ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும், புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

    தமிழ்நாட்டில் பசுமைப்போர்வையை அதிகரிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் கோனாகார்பஸ் (Conocarpus) என்ற வகை மரங்களை தமிழக அரசு அதிக அளவில் வளர்த்து வருகிறது. சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள், கல்விநிறுவன வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவன வளாகங்களில் இந்த வகை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வகை மரங்களை அரசே நடுவது கண்டிக்கத்தக்கது.

    தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கோனாகார்பஸ் வகை மரங்களின் மலர்கள் ஆண்டுக்கு இரு முறை மகரந்த சேர்க்கை நடத்தும் திறன் கொண்டவை. அப்போது அந்த மலர்களில் இருந்து வெளிவரும் மகரந்த தூள்கள் மனிதர்களின் சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து சளி, இருமல், மூச்சடைப்பு உள்ளிட்ட சுவாசக் குறைபாடுகளை ஏற்படுத்தும்; இந்த மரங்களின் அருகில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும், புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

    கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை. பார்ப்பதற்கு பசுமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் இந்த வகை மரங்களின் இலைகளை எந்தக் கால்நடைகளும் உண்ணாது. இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது. தேனீக்கள் கூட இந்த மரத்தை அண்டாது. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சக் கூடியவை. ஆனால், இது குறித்த உண்மைகள் எதுவும் தெரியாமல் இந்த வகை மரங்கள் தமிழகத்தில் அதிக அளவில் நடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.

    கோனாகார்பஸ் மரங்களின் தீமைகள் குறித்தும் தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் சுற்றுச்சூழலுக்கும், மனித நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவித்து விடும்.

    எனவே தமிழ்நாட்டில் கோனாகார்பஸ் மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி, மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகை மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய மா, வேம்பு, பூவரசு, அரசு போன்ற நாட்டு மரங்களை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அசோக் நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது.
    • மாணவ, மாணவியர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க நீதிபோதனை வகுப்புகளை நடத்துங்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார். அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை.

    மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியுள்ளார். கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிகள் மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக் கல்வித்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது.

    அசோக் நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வழக்கமாக பள்ளிக்கு ஆண்டு விழா நடத்துவதற்கே சில ஆயிரம் ரூபாய் மட்டும் தான் செலவிடப்படும். ஆனால், மூடநம்பிக்கை பேச்சாளரின் நிகழ்ச்சிக்கு தாராளமாக செலவிடப்பட்டுள்ளது. தம்மை மகாவிஷ்ணு என்று கூறிக்கொண்ட அந்த நபருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

    அந்த நபரின் மூட நம்பிக்கை பேச்சுகளை கண்டித்த ஆசிரியரை அந்த நபர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்; அதை எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்று அந்த நபர் வினா எழுப்பியுள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு தைரி யத்தைக் கொடுத்தவர்கள் யார்?

    அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க நீதிபோதனை வகுப்புகளை நடத்துங்கள் என்று பா.ம.க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்யாத பள்ளிக்கல்வித்துறை மாணவ, மாணவிகளின் மனதில் நஞ்சைக் கலக்கும் மனிதர்களை அழைத்து வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நிகழ்ச்சிகள் இனியும் நடப்பதை அனுமதிக்கக் கூடாது.

    சென்னை அசோக் நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு இந்த சிக்கலை மூடி மறைத்து விடக்கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் பள்ளிக்கல்வித் துறையின் எத்தகைய உயர் பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வடசென்னை அனல்மின் நிலையம்-3 அதன் முழுத்திறனை அடைந்திருந்தால், இதுவரை 600 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கும்.
    • மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தான் சுமைகள் சுமத்தப்படும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட வடசென்னை அனல் மின்நிலையம் 6 மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    வடசென்னை அனல்மின் நிலையம்-3 அதன் முழுத்திறனை அடைந்திருந்தால், இதுவரை 600 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கும். ஆனால், இதுவரை வெறும் 68 கோடி யூனிட், அதாவது 11 சதவீதம் அளவுக்குத் தான் மின்சாரம் உற்பத்தி செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.13 செலவாகிறது.

    தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.3 முதல் 4 மட்டுமே செலவாகிறது. ஆனால், வடசென்னை அனல்மின் நிலையத்தின் திட்ட மதிப்பீடு இரு மடங்கிற்கும் மேலாகி விட்டதால், அதில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.6க்கும் கூடுதலாக செலவாகிறது.

    இவ்வாறாக மின்னுற்பத்தி நிலையங்களின் கட்டுமானத்தை திட்டமிட்டு தாமதப்படுத்துதல், அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குதல் ஆகியவற்றால் தான் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின்வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.2 லட்சம் கோடியை நெருங்கும் நிலையிலும் தமிழக அரசும், மின்சார வாரியமும் மாறாமல், அதே அலட்சியத்துடனும், ஊழலுக்கு இடம் கொடுக்கும் வகையிலும் செயல்பட்டால் மின்சார வாரியம் இப்போதைக்கு லாபம் ஈட்ட முடியாது. மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தான் சுமைகள் சுமத்தப்படும்.

    எனவே, தமிழக அரசும், மின்சார வாரியமும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை இனியாவது இலக்கு வைத்து நிறைவேற்ற வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சைக்கிள் ஓட்டும் வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
    • பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுவரை பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க. ஸ்டாலினை எக்ஸ் தளத்தில் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே? சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மிதிவண்டி பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் மிதிவண்டிகளையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்?," என குறிப்பிட்டுள்ளார். 

    ×