என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வரின் முகவரி திட்டம்"

    • மக்களால் எளிதில் அணுகக்கூடிய - எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வு.
    • பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைச் சிறப்புறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மக்களின் குறைகளைக் களைந்து ஏற்றத்துக்கு முதற்படியாய் முதல்வரின் முகவரித்துறை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்களால் எளிதில் அணுகக்கூடிய - எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வுகாணக் கூடிய நமது திராவிட மாடல் அரசில், எனது நேரடிக் கட்டுப்பாட்டில், திருமிகு. அமுதா இ.ஆ.ப., அவர்களது தலைமையில் மக்களின் குறைகளைக் களைந்து - ஏற்றத்துக்கு முதற்படியாய் விளங்குகிறது முதல்வரின் முகவரி துறை!

    பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைச் சிறப்புறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்துறை செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் செயலாளர் பொறுப்புக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
    • முதல்வரின் முகவரி பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    உள்துறை செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் செயலாளர் பொறுப்புக்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான அமுதா, தற்போது முதல்வரின் முகவரி பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் மற்றும் குறை தீர்க்கும் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்-யை நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    ×