search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.டி நிறுவனங்கள்"

    • கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அம்மாநில அரசு திருத்தும் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது.
    • IT/ITeS/BPO துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    தினமும் 14 மணி நேர வேலை: அடுத்த சர்ச்சைக்கு ரெடியான கர்நாடகா.. கொந்தளிக்கும் ஊழியர்கள்கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அம்மாநில அரசு திருத்தும் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் அந்த சட்டத்திருத்தத்தில் 14 மணி நேர வேலை என்பதையும் கொண்டுவரவேண்டும் என்று ஐ.டி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. தற்போதுள்ள, தொழிலாளர் சட்டங்களின்படி அதிகபட்ச வேலை நேரம் என்பது 12 மணிநேரத்தை தாண்டக்கூடாது. ஆனால் நிறுவனங்கள் வைத்துள்ள முன்மொழிவில், 'IT/ITeS/BPO துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் 14 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்'  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.டி நிறுவனங்களின் இந்த முன்மொழிவை கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிகின்றன. இந்நிலையில் இதற்கு ஊழியர்கள் மற்றும்  தொழிலாளர்கள் சங்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு நாளைக்கு 14 மணி நேர வேலை என்பது மனிதாபிமானமற்றது என்றும் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனை கடுமையாக கூடியது என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் கர்நாடகா அரசு மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கே அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    ×