search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினைமுட்டை"

    • மனித உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் ஸ்டெம் செல் உள்ளது.
    • அனைத்திற்கும் தீர்வாக அமைவது ஸ்டெம் செல் சிகிச்சையாகும்.

    இன்றைய கால கட்டத்தில் மருத்துவ ரீதியாக அதிகரித்து வருகிற பலவிதமான பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக வயதான பிறகு ஏற்படுகிற பலவிதமான தேய்மானங்கள் மற்றும் வயதான பிறகு ஏற்படும் பாதிப்புகள் ஆகிய அனைத்திற்கும் தீர்வாக அமைவது ஸ்டெம் செல் சிகிச்சையாகும்.

    மனித உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களிலும் ஸ்டெம் செல் உள்ளது. நமது உடலில் உள்ள செல்களில் ஏதாவது ஒன்று பழுதானாலோ அல்லது வயது மாற்றங்களினால் தேய்மானம் அடைந்தாலோ அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் திசுக்கள் சேதம் அடைந்தாலோ அதனை சீர் செய்வதற்கான அடிப்படையே ஸ்டெம் செல் தான்.

    ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்:

    அதன் ஆரம்பம் பிளேட்லெட் ஆக இருந்தாலும், முடிவானது ஸ்டெம் செல் தான். ஸ்டெம் செல் நன்றாக இருக்கிற திசுக்களில் பழுது பார்க்கும் வேலை, மீளுருவாக்கம் மற்றும் புதிய திசுக்களை உருவாக்குதல் ஆகிய அனைத்துமே ஸ்டெம் செல்களால் மட்டும்தான் ஏற்படுகிறது. கடந்த பல வருடங்களாகவே ஸ்டெம் செல் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்து வருகிறது.

    ஆரம்பத்தில் விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சியானது, அதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை தொடர்ந்து மனிதர்களிடையே நடத்தப்பட்டது. அதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவ ரீதியான விஷயங்கள் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

    ஆரம்ப கால கட்டத்தில் ஸ்டெம் செல் தெரபி என்பது குறிப்பாக ரத்த புற்றுநோய் பாதித்தவர்களுக்கான தீர்வாக அமைந்தது.

    இது தொடர்பாக கடந்த காலங்களில் பல ஆய்வுகளும் நடந்துள்ளன. தற்போதைய காலகட்டத்தில் எல்லாவிதமான வயதான மாற்றங்களுக்கும் இந்த ஸ்டெம்செல் தெரபி என்பது மிக முக்கியமானதாக கருதப்படு கிறது.

    இதில் மீசன்கைமல் என்கிற ஸ்டெம் செல் தான் மனிதனின் உடல் உறுப்புகளுக்கு ஏற்ற மாதிரி செயல்படுகிறது. அதாவது மீசன்கைமல் ஸ்டெம் செல்லை எடுத்து ஒரு பெண்ணின் தோலில் செலுத்தினால் தோல் பகுதி புத்துணர்வு பெறும். தோல் பகுதியில் ஏற்பட்டுள்ள வயதான மாற்றங்கள் மாறும். வயதான தோற்றத்துடன் கூடிய அந்த தோலை இளமையாக மாற்றும் தன்மை கொண்டது.


    வயதான மாற்றங்களை சரி செய்வதற்கான வழிமுறை:

    பொதுவாக ஒருவருக்கு வயது கூடும் போது வயதான மாற்றங்கள் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும். அதாவது மனிதர்களுக்கு வயதாகும் போது தோல், முடி, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள செல்களுக்கும் வயதாகும்.

    அந்த செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா செயலிழக்க ஆரம்பித்து, அதனுடைய ஆற்றல் குறைவாகும் போது, அந்த செல்லின் ஆற்றலும் குறைவாகி, செல்கள் இறந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.

    இதுபோன்று அனைத்து செல்களும் ஒரு கட்டத்தில் இறக்கும்போது தான், ஒரு மனிதனின் இறப்பு என்பது முடிவாகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் வயதாகும் போது அவர்களின் உறுப்புகளில் இருக்கும் திசுவில் உள்ள செல்களுக்கும் வயதான மாற்றங்கள் ஏற்பட்டு உடலில் செயலிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இந்த வகையில் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது நமது உடலில் ஏற்படும் வயதான மாற்றங்களை சரிசெய்து, உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பதற்கான ஒரு அருமையான வழிமுறையாகும்.

    ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி பலருக்கும் பலவிதமான பயம் இருந்தது. ஸ்டெம் செல் சிகிச்சையால் ஏதாவது பின்விளைவுகள் வருமோ, பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளதோ, நீண்ட நாள் பிரச்சினைகள் ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சம் இருந்தது.

    ஆனால் இதை பற்றி தெளிவாக சிந்தித்தால் அச்ச உணர்வு ஏற்படாது. மருத்துவ சிகிச்சையின் போது ரத்தம் ஏற்றுகிறோம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். அப்போதெல்லாம் எந்த பிரச்சினையும் ஏற்படுவது இல்லை.

    அதே போலத்தான் நமது உடலில் உள்ள செல்லை எடுத்து நமது உடலிலேயே செலுத்தும் போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது. இதனை அடிப்படையாக கொண்டே ஸ்டெம் செல் பற்றி பலவிதமான ஆய்வுகள் நடந்து வருகிறது.

    பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் உடலில் பலவி தமான மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த உடலியல் மாற்றங்களை சீர் செய்வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு நல்ல வழிமுறையாகும். ஸ்டெம் செல் தெரபி என்பது பெண்களுக்கு பலவிதமான பிரச்சினைகளுக்கும் நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.

    சினைமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஸ்டெம் செல்:

    பெண்களின் மிக முக்கியமான ஒரு விஷயமே குழந்தைபேறு தான். ஒரு பெண் குழந்தை பேறு பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒன்று சினை முட்டைகள், மற்றொன்று பெண்ணின் கர்ப்பப்பை ஆகியவை ஆகும்.

    சினை முட்டைகள் சீரான அளவில், நல்ல எண்ணிக்கையில், நல்ல தரத்தில் இருந்தால் கண்டிப்பாக அந்த சினை முட்டைகளால் ஆரோக்கியமான குழந்தை பேறு பெற முடியும். இந்த குழந்தை பேறு என்பது இயற்கையான முறையிலோ அல்லது செயற்கையான முறையிலோ அமையலாம்.

    ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் சினை முட்டைகள் குறைவாக இருக்கும் பெண்களுக்கு மீசன்கைமல் ஸ்டெம் செல் செலுத்துவதன் மூலமாக சினை முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் சினை முட்டைகளின் தரமும் மேம்படுத்தப்படுகிறது.

    சினை முட்டைகளின் தரமும், எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுகிறது. சினை முட்டைகள் குறைவாக உள்ள பல பெண்கள், ஸ்டெம் செல் சிகிச்சை மூலமாக சினை முட்டைகளின் தரமும், எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில் இயற்கையாகவே கருத்தரித்து குழந்தை பேறு பெற்றுள்ளனர்.

    என்னிடம் ஒரு பெண், குழந்தை பேறு சிகிச்சை பெறுவதற்காக வந்தார். அவர் ஏற்கனவே மூன்று முறை ஐவிஎப் சிகிச்சை பெற்று அது தோல்வியில் முடிந்ததாக என்னிடம் தெரிவித்தார். என்னிடமும் ஐவிஎப் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறினார்.

    அந்த பெண்ணுக்கு முதலில் ஸ்டெம் செல் சிகிச்சை அளித்தோம். வழக்கமாக ஸ்டெம் செல் தெரபி கொடுத்து இரண்டு மாதங்கள் கழித்து, மூன்றாவது மாதத்தில் தான் கருத்தரிப் பதற்கான சிகிச்சையை ஆரம்பிப்போம். ஆனால் இரண்டாவது மாதத்தில் காத்திருப்பு காலத்தின் போது அவருக்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தோம்.

    ஆனால் அவர் இயற்கையாகவே கருத்த ரித்திருந்தார். இப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சினை முட்டைகளின் எண்ணிக்கை, வளர்ச்சி, தரம் ஆகிய அனைத்தையுமே ஸ்டெம் செல்லானது மேம்படுத்தியுள்ளது. கருமுட்டைகள் அதிகரிப்பதற்கு இது ஒரு நல்ல வழிமுறையாகும்.


    கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சியில் ஸ்டெம் செல் சிகிச்சையின் பங்கு:

    குழந்தை பேறுக்கு இரண்டாவது விஷயம் கர்ப்பப்பை ஆகும். கர்ப்பப்பையின் உள் சுவரில் உள்ள செல்கள் வரிசை தான் கரு ஒட்டி வளருவதற்கு தேவையான ஒன்றாகும். இந்த செல்கள் வரிசை சீராக இல்லாத நிலையில் கருத்தரிக்க முடியாமல் பல பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.

    காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை உள்சுவரானது சிதைந்து விடும். அல்லது சில நேரங்களில் அழிந்து விடும். இப்படிப்பட்ட பெண்களுக்கு இதை சரி செய்வது என்பது மிகப்பெரிய சவால்.

    இவர்கள் அனை வருக்கும் குழந்தை பேறு பெறு வதற்கு இப்போதைய காலகட்டத்தில் உள்ள ஒரே முறை ஸ்டெம் செல் சிகிச்சை தான். கர்ப்பப்பையில் உள்ள பழுதான சுவர் பகுதியை சீராக்குவதற்கு மீசன்கைமல் ஸ்டெம் செல்லை கர்ப்பப்பை உள் சுவர்களில் செலுத்துகிறோம்.

    இதனை செலுத்தும் போது கர்ப்பப்பை உள்சுவரில் உள்ள பழுதான திசுக்கள் அனைத்தும் சீராகி கர்ப்பப்பையின் உள்சுவர் வளர்ச்சி சரியாகும்.

    இதன் மூலம் ஸ்டெம் செல் சிகிச்சையானது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பெண்கள் கருத்தரிப்பதற்கான இரண்டு முக்கியமான பணிகளை இந்த ஸ்டெம் செல் தெரபி செய்கிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் ஆண்களுக்கும் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். ஏனென்றால் குழந்தை பேறு என்பது ஆண்களுக்கு முக்கியம்தான். அந்த வகையில் ஆண்களின் விந்து பையில் இந்த ஸ்டெம் செல்லை செலுத்தும் போது, விந்து உற்பத்தியே இல்லாத ஆண்களுக்கும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் விந்தணுக்கள் உருவாகிறது.

    ஒரு விந்தணு இருந்தாலே போதும், முட்டையுடன் செலுத்தி கருத்தரிப்பு செய்ய முடியும். இந்த வகையில் விந்தணுக்களே இல்லாத ஆண்களுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் விந்தணுக்களை உருவாக்கி, முட்டையில் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். 

    • 11 வயதிலேயே பருவமடைவது தற்போது சாதாரண விஷயம்.
    • ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.

    பெண் குழந்தைகள் பருவ மடைதல் மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம். நாகரீகம் மற்றும் மருத்துவம் முன்னேற்றம் அடைந்துள்ள இப்போதைய காலகட்டத்தில் 92 முதல் 94 சதவீத பெண் குழந்தைகள் 12 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.

    மேலும் சில பெண் குழந்தைகள் 11 வயதிலேயே பருவமடைவதும் தற்போது மிகவும் சாதாரண விஷயமாகவே கருதப்படுகிறது.

    இதற்கு முந்தைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் 14 வயது மற்றும் 15 வயதில் பருவமடையும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. அதன் விளைவாக 11 முதல் 13 வயதுக்குள் பருவமடைய தொடங்குகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகள் பருவமடைதல் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தனர்.

    ஆனால் இப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கூட பருவமடைதல் பற்றி நிறைய விஷயங்கள் தெளிவாகவே தெரிகிறது. அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பெண் குழந்தைகள் பருவமடையாவிட்டால் அதற்கான காரணத்தை தங்கள் பெற்றோரிடம் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

    மேலும் இதுபற்றி தங்கள் வகுப்பு தோழிகளிடமும் பேசி ஒருவருக்கொருவர் புரிதலை வளர்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் பருவமடையும் வயதை கடக்கும் போது இதை ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனையாக சில குழந்தைகள் எதிர்நோக்குகிறார்கள்.

    உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 ஆயிரம் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை 15 வயதான பிறகும் பருவம டையாமல், மாத விலக்கு வராமல் இருக்கும் நிலை இன்றும் உள்ளது. பெண் குழந்தைகள் பருவமடையாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? இதை மருத்துவத்தில் பிரைமரி அனனோரியா என்று சொல்கிறோம்.

    15 வயதான பிறகும் ஒரு பெண் குழந்தை பருவமடைய வில்லை என்றால் அந்த பெண் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாகவே பெண் குழந்தைகள் பருவமடைவதற்கு முன்பு உடல் ரீதியாகவே சில மாற்றங்கள் நடக்கிறது.

    பெண் குழந்தைகளுக்கு 12 வயது பிறந்ததுமே உடலின் உயரம் அதிகரிக்க தொடங்கும். மார்பக பகுதியில் வளர்ச்சி ஏற்படும். அந்த பெண் குழந்தையை பரிசோதிக்கும் போது பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள் எல்லாமே உருவாகத் தொடங்கி இருக்கும். அதுபோன்ற மாற்றங்களால் அந்த பெண் குழந்தை 13 வயதில் பருவமடைந்து விடும்.

    சிலநேரங்களில் அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும், அடி வயிற்றில் வலி இருக்கும். ஆனாலும் அதுபோன்ற குழந்தைகள் சரியான வயதில் பருவமடைந்து விடுவார்கள். 11 வயதில் இருந்து அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மாற்றங்களின் விளைவாக 12 அல்லது 13 வயதில் அவர்களுக்கு மாதவிலக்கு வந்துவிடும்.

    இவை அனைத்தும் எதைக் குறிக்கிறது என்று பார்த்தோம் என்றால் சினை முட்டைகள், சினைப்பையில் வளரும் பொழுது அந்த பெண்ணுக்கு உடல் அளவில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது.

    அந்த வகையில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக மாதவிலக்கு வருகிறது.

    15 வயதாகியும் மாதவிலக்கு வரவில்லை என்று சில குழந்தைகள் சிகிச்சைக்கு வருவார்கள். அந்த குழந்தைகள் உயரம் மிகவும் குறைவாக இருப்பார்கள். உடல் அளவிலும் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாத விலக்கு வராமல் இருக்கும்.

    ஆனால் பரிசோதனைகள் மூலமாக இதுபோன்ற குழந்தைகளுக்கு என்ன காரணத்தினால் மாதவிலக்கு வரவில்லை என்று பல நேரங்களில் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும்.

    பெண் குழந்தைகளுக்கு சினை முட்டைகள் வளரும் போது அந்த வளர்ச்சிக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் உடலில் எல்லா இடங்களிலும் மாற்றங்களை உண்டாக்கலாம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இல்லாமல் சினை முட்டைகள் சரியாக வளராத பெண் குழந்தைகளுக்கு மார்பகத்தில் வளர்ச்சி இருக்காது. அந்த பெண் குழந்தை ஒல்லியாக இருப்பார்கள். உயரமும் குறைவாக இருப்பார்கள்.

    ஒரு பெண் குழந்தை பருவமடைந்ததும் மாதவிலக்கு வருவது எதைக் குறிக்கிறது என்றால் அந்த பெண் குழந்தைக்கு சினை முட்டைகள் வெளியாகத் தொடங்கி விட்டது என்று அர்த்தம். ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும்.

    அந்த பெண் குழந்தை வளர்ச்சி அடையும் போது சினைப்பையில் கோடிக்கணக்கில் முட்டைகள் காணப்படும்.

    இந்த முட்டைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஹைபோதலாமஸ் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வர ஆரம்பிக்கும். இதனுடைய தூண்டுதலின் காரணமாகத்தான் இந்த முட்டைகள் வளரும். முட்டைகள் வளர வளர அதில் இருந்து வரும் ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.

    மேலும் அந்த பெண் குழந்தைக்கு மார்பக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துமே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் தான். இந்த முட்டைகள் வளர்ந்து ஒரு காலகட்டத்தில் அது வெளிவர ஆரம்பிக்கும் போதுதான் கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி அடைந்து மாதவிடாய் வருகிறது.

    பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சரியாக வராததற்கு முதல் முக்கியமான காரணம் முட்டை வளர்ச்சி இல்லாத நிலை தான். முட்டைகள் வளர்ச்சி யாருக்கு இல்லாமல் இருக்கும் என்பதை பார்க்கும்போது சிலருக்கு முட்டைகள் இருக்கும், ஆனால் அது வளர்வதற்கு தேவையான ஹார்மோன் இருக்காது.

    அதாவது அதுபோன்ற பெண்களுக்கு மூளையில் இருந்து வரும் ஹார்மோன் தூண்டுதல் இல்லையென்றால் முட்டைகள் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இதனால் பருவமடைதல் விஷயத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது.

    இன்னும் சில பெண் குழந்தைகளுக்கு சினை முட்டை இருக்கும். அந்த சினை முட்டை நன்றாகவே வளரும். அதற்கான ஹார்மோன் மாற்றங்களும் இருக்கும். மார்பகமும் வளரும். ஆனால் மாதவிலக்கு மட்டும் வராது. இது போன்ற சூழலுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகளே காரணமாகிறது.

    அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கலாம் அல்லது கர்ப்பப்பையே உருவாகாமல் இருக்கலாம். அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் அதெல்லாம் சரியாக இருந்தும் மாதவிலக்கு வரவில்லை என்றால் முட்டைகள் இல்லாமல் இருக்கலாம்.

    ×