என் மலர்
நீங்கள் தேடியது "எச்டி குமாரசாமி"
- செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
- குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மத்திய அமைச்சரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எடியூரப்பா ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
குமாரசாமிக்கு ஏற்கனவே இதய பிரச்சனை இருப்பதாகவும், அவருக்கு 2 முதல் 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
- சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் விஜய் டாடா புகாரில் மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜய் டாடா அளித்த புகாரில், "மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ரமேஷ் கவுடா ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமிக்கு போன் போட்டு என்னிடம் கொடுத்தார். என்னிடம் போனில் பேசிய குமாரசாமி சன்னபட்னா இடைத்தேர்தலுக்காக ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டினார். பணம் ஏற்பாடு செய்யவில்லை என்றால், ரியல் எஸ்டேட் தொழிலை நடத்த முடியாது என்றும் பெங்களூரில் பிழைப்பு கூட நடத்த முடியாது என்று மிரட்டினார்.
சன்னபட்னா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி (எச்.டி. குமாரசாமியின் மகன்) போட்டியிட உள்ளதாகவும் அதற்கு ரூ.50 கோடி தேவை என்று ரமேஷ் கவுடா மிரட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.
சன்னபட்னா சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
- கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட இதுபோன்ற பரிசு கூப்பன்கள் வழங்கி மக்களை நம்ப வைத்தனர்.
- இரவோடு இரவாக கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் தொண்டர்கள் அத்தகைய பரிசு கூப்பன்களை வழங்கினார்கள்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சென்னபட்டனா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் சென்னபட்டனாவில் ஆளும் காங்கிரஸ் சார்பில் யோகேஷ்வர், பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரணும், முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி மற்றும் சிக்காவியில் பா.ஜனதா சார்பில் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் முகமது யாசிர் பதான், சண்டூரில் காங்கிரஸ் சார்பில் அன்னபூர்ணா துகாராம், பா.ஜனதா சார்பில் பங்காரு ஹனுமந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் சன்னபட்டனா தொகுதி விருப்ப சந்திரா கிராமத்தில் தனது மகனை ஆதரித்து பேசிய எச்.டி. குமாரசாமி சன்னபட்டனா தொகுதியில் வேட்பாளர்களை கவருவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி பரிசு கூப்பன்களை விநியோகித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட இதுபோன்ற பரிசு கூப்பன்கள் வழங்கி மக்களை நம்ப வைத்தனர்.
இரவோடு இரவாக கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் தொண்டர்கள் அத்தகைய பரிசு கூப்பன்களை வழங்கினார்கள். தேர்தல் முடிந்ததும் பணமும் இல்லை. கூப்பனும் செல்லுபடியாகவில்லை. எனவே வாக்காளர்கள் ஏமாற வேண்டாம் என்றார்.