search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹார்மோன் பரிசோதனை"

    • சினைப்பை சீராக இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
    • சிறிய அறுவை சிகிச்சை மூலமாக கர்ப்பப்பையை சீராக்க முடியும்.

    பெற்றோர் முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

    அந்த பெண் குழந்தைக்கு உடல் வளர்ச்சி, மார்பக வளர்ச்சி, 14 வயதிற்கான முடி வளர்ச்சி அனைத்தும் சீராக இருந்தால் ஒரு வருட காலம் பருவமடைவதற்கு காத்திருக்கலாம். கண்டிப்பாக இந்த பெண் குழந்தை பருவமடைவதற்கு வாய்ப்புகள் உண்டு.

    கர்ப்பப்பை, சினைப்பை இவை அனைத்தும் சீராக இருந்தால் மட்டுமே இந்த வளர்ச்சிகள் சீராக இருக்கும். வளர்ச்சி சீராக வருவதற்கு சில மருந்துகள், மாத்திரைகள் கொடுத்தால் போதும். தேவைப்பட்டால் இந்த பெண் குழந்தைகளுக்கு ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து கர்ப்பப்பை, சினைப்பை சீராக இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும்.

    பருவமடையாவிட்டால் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?

    பெண் குழந்தைக்கு முதலில் சில ரத்த பரிசோதனைகள், ஹார்மோன் பரிசோதனைகள் செய்ய வேண்டும். குறிப்பாக தைராய்டு ஹார்மோன் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அடுத்ததாக பெல்விக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும்.

    இந்த ஸ்கேனில் பெண் குழந்தையின் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை வளர்ச்சியை பரிசோதிக்க வேண்டும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பார்க்கும் போது பெண் குழந்தைக்கு கர்ப்பப்பை இல்லாத நிலை இருந்தால் அதை எம்.கே.எச். சின்ட்ரோம் என்று மருத்துவர்கள் கூறுவர். கர்ப்பப்பை இருந்தும் சீரான வளர்ச்சி இல்லாவிட்டால் அதனை முல்லேரியன் திஸ் ஜெனசிஸ் என்று கூறுவர்.

    சிகிச்சை முறைகள்:

    கர்ப்பப்பை மேல் பகுதி வளர்ந்து கீழ்ப்பகுதி வளராமல் இருந்தால் இதனை சரி செய்வதற்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை முறை மூலமாக இதன் அளவு, கர்ப்ப வாய் சீராக இருக்கிறதா என்பதை பரிசோதித்து, இந்த கர்ப்ப வாய் பெண்ணின் வெஜைனாவுடன் இணைந்து இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலமாக தெரிந்து கொண்டு, சிறிய அறுவை சிகிச்சை மூலமாக கர்ப்பப்பையை சீராக்க முடியும்.

    சில நேரங்களில் கர்ப்பப்பை வளர்ச்சி சிறிதாக இருந்து கர்ப்ப வாயோடு இணையும் பகுதி வளராமல் இருந்தால் இதனை சரி செய்வது முடியாத காரியமாக இருக்கும். சில பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை இல்லாத நிலையில் சினைப்பை மட்டும் நல்ல வளர்ச்சியோடு இருக்கும். அதனால் இவை அனைத்துமே குழந்தைகளுடைய மாதவிலக்கு வராததற்கான காரணங்கள் ஆகும்.

    தீர்வுகள் என்னென்ன?

    கர்ப்பப்பை இல்லாத பெண்களுக்கு திருமணமான பின்பு வாடகை தாய் மூலமாக சினை முட்டைகளை வைத்து குழந்தை பெற முடியும். கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை சில நாடுகளில் நடைபெறுகிறது. இதற்கான சக்சஸ் ரேட் ரொம்ப குறைவு. இதற்கான செலவுகள் மிக மிக அதிகம்.

    ஒரு சாதாரண பெண்ணிடமிருந்து கர்ப்பப்பையை தானமாக பெற்று அதனை இன்னொரு பெண்ணின் கர்ப்பப்பை இருக்கும் இடத்தில் வைத்து மாற்று சிகிச்சை செய்கிறார்கள். இந்த சிகிச்சை முறை மூலமாக உலக அளவில் ஐந்து ஆறு குழந்தைகள் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு மூலமாக பிறந்துள்ளன.

    2015-ம் ஆண்டு முதன் முதலில் மேட்ஸ் பிராண்ட்ஸ்டோர்ம் என்ற சுவீடன் நாட்டு விஞ்ஞானி மற்றும் மகப்பேறு சிகிச்சை நிபுணர்களின் குடும்பம் இதனை சாதித்தது. கிட்டத்தட்ட 28 கர்ப்பப்பையை டிரான்ஸ்பிளான்ட் செய்த பின் ஒரு குழந்தை பேறு கிடைத்தது.

    இது இயற்கைக்கு ஏற்ற விஷயமாக கருதப்படுவதில்லை. எனவே எளிமை யான வழிமுறை என்றால் செயற்கை கருத்தரிப்பு முறை தான். வாடகைத்தாய் கர்ப்பப்பையில் தங்களுடைய ஜெனிடிக் குழந்தைபேறு பெறுவதற்கான வாய்ப்புகளை ஒரு பெண் பெறுகிறாள்.

    அடுத்ததாக சில பெண்களுக்கு சினை முட்டைகள் இல்லாததால் கர்ப்பப்பை வளர்ச்சி அடையாத நிலையில் காணப்படும். இவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சிக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து ஆரோக்கியமான கர்ப்பப்பையை வளர வைக்க முடியும். 

    ×