என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்எம்எஸ்"
- தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனினும், ஜூலை 1-ந் தேதிக்கு வீட்டு -அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது இணைப்புகளுக்கு மின் கட்டணம் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததால், மின் கட்டண உயா்வின் அடிப்படையில் தொகை வசூலிக்கப்படவில்லை.
இதையடுத்து மின் கட்டண உயா்வு அமலான ஜூலை 1-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட நாள்களுக்கு உரிய கட்டண உயா்வு வித்தியாச தொகை குறித்து குறுந்தகவல் சேவையை (எஸ்.எம்.எஸ்) மின் நுகா்வோரின் கைப்பேசிக்கு தற்போது மின்சார வாரியம் அனுப்பி வருகிறது.
மின் நுகா்வோா் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்குத்தான் தகவல் செல்லும் என்பதால், வாடகைக்கு குடியிருப்போருக்கு இது குறித்துத்தெரிய வாய்ப்பில்லை. எடுத்துக்காட்டாக, ரூ.12 அல்லது ரூ.17 அல்லது ரூ.23 அல்லது ரூ.38 என மிகச் சிறிய தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துமாறு கூறி, அதை நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டுள்ளது.
- வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) TELIKAAMநிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.
அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாத சேவைகளை ரீசார்ஜ் பேக் உடன் இணைத்து அதிக நிதி சுமையை உருவாக்குகின்றன.
அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளரிடம் கூடுதல் சேவைகள் திணிக்கப்படுகின்றன. தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
எனவே அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே சிறப்பு பிளான்களை கட்டாயமாக்குவது, இன்டர்நெட் தேவையில்லாத வாடிக்கையாளர்களின் தேவையற்ற சுமையை தீர்க்கும் என டிராய் தெரிவித்துள்ளது.
- வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
- பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டெலிகாம் நிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.
அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஜியோவில் 458 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
முன்னதாக, இதே திட்டத்தின் விலை 479 ரூபாயாக இருந்தது. அதில், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகள் அடங்கும். இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டம் ரூ. 21 குறைவானதாகும்.